தில்லுக்கு துட்டு - சினிமா விமர்சனம்




சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தபின் வெளிவந்த முதலிரண்டு படங்களும் சுமாராகவே செல்ல , மூன்றாவதாக தமிழ்சினிமாவின் இன்றைய கலெக்ஷன் ஜானரான ஹாரர்ரைக் கையில் எடுத்திருக்கிறார். அதுவும் அவருக்கு பக்காவாகவே கைக்கொடுத்திருக்கிறது. கதை என்று பெரிதும் அலட்டிக்கொள்ளாமால் , நம்மிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது காமெடியைத் தான் என்று நன்குணர்ந்து ஒரு பக்காவான காமெடி கம் ஹாரர்ரை திகட்டத் திகட்ட தந்திருக்கின்றனர் ராம்பாலாவும் சந்தானமும்.

சிவன்மலைக்கோட்டை எனும் ஊருக்கு ஒருகாலத்தில் வியாபார விசயமாக வந்த திபெத்திய மகாராஜாவை வசியம் செய்து திருமணம் செய்துகொள்கிறாள் ஒரு வசியக்காரி. ராஜா வியாபாரத்துக்கு வெளியூர் போகும்போதெல்லாம் தன் கள்ளக்காதலனுடன் சரசம் செய்து அவன்மூலம் ஒரு பையனை பெற்றெடுத்து ராஜாவுக்கு தெரியாமல் வளர்க்கிறாள். ஒருநாள் அறிந்துகொள்ளும் ராஜா அவளின் கள்ளக்காதலனையும், குழந்தையையும் கொன்றுவிட்டு, அவளுக்கு கடுமையான தண்டனையைக் கொடுக்கும்படி ஆனையிட்டுவிட்டு , தன் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கே கிளம்பிவிடுகிறார். பழிவாங்கவேண்டும் என்ற வெறியுடன் இருக்கும் அந்த வசியக்காரி, தன் உயிரை சாத்தானுக்கு காணிக்கையாக்கி விட்டு அந்த பங்களாவில் பேயாக அலைகிறாள். 

இப்படி டைட்டில் கார்டில் சொல்லப்பட்டதும் ஒரு புத்த சாமியார் பெட்டியில் பேயை அடைக்கிறேன் என்று பங்களாவிற்குள் செல்ல, ஏதேதோ விபரீதங்களுக்குப் பின் ஸ்ட்ரெச்சர் கட்டி அவரை அள்ளிச் செல்கிறார்கள். சென்னையில் பணக்கார ஹீரோயின் இன்ட்ரோ. அவளின் ப்ளாஷ்பேக்கில் தன் பள்ளியில் படித்த குமாரை தான் இன்னமும் விரும்புவதாக கூறுகிறாள். மோதலில் துவங்கி காதலில் முடிய, அதையறியும் ஹீரோயினின் தந்தை லோ-கிளாசான குமாரைப் போட்டு தள்ள முடிவெடுத்து மொட்டை ராஜேந்திரனை  அணுகுகிறார். கொல்வதற்காக பல ப்ளான்களை யோசிக்கும் ராஜேந்திரன், கல்யாணத்தை சிவன்மலைக்கோட்டையில் உள்ள பங்களாவில் நடத்துமாறு நைசாக சொல்லி அங்கே வைத்து போட்டு விட முயற்சிக்கிறார். பங்களா சென்றதும் என்ன ஆனது என்பது மீதிக்கதை.

சந்தானம், மொட்டை ராஜேந்திரன் கூட்டணி பட்டாசு கிளப்புகிறது. கலகலப்பு திரைப்படத்தை தியேட்டரில் பார்க்கும்போது தொடர்ந்தாற்போல் வாய்விட்டு சிரித்தது. அதன்பின் எத்தனையோ திரைப்படங்களைப் பார்த்திருந்தாலும் சிரிப்பு அந்தளவிற்கு இருக்காது. என்னையும் மறந்து வாய்விட்டு, கண்ணில் நீர்வழிய சிரித்தது இத்திரைப்படத்தில்தான். அதுவும் இரண்டாம் பாதி அட்டகாசம். முதல்பாதியை வழக்கம்போல மெதுவாக நகர்த்திக்கொண்டு வந்து இரண்டாம்பாதியில் வெளுத்து வாங்கியிருக்கிறார் ராம்பாலா. 

சந்தானம் பார்க்க பக்காவாக இருக்கிறார்; கெட்டப், டான்ஸ், ஸ்டைல், சண்டை என அனைத்திலும்  நன்கு தேறி , ஒரு ஹீரோவுக்கான அந்தஸ்தை அடைந்துவிட்டார். முதல் பாடலில் மட்டும் திணறித் திணறி டான்ஸ் ஆடுவது போலிருந்தது. சந்தானம் முதல் ஹீரோ என்றால் ராஜேந்திரன் இரண்டாவது ஹீரோ. மனுசரின் கேரியரில் இந்தளவு இவரை வேறு எந்த திரைப்படத்திலும் பயன்படுத்தியதில்லை என்றே சொல்லலாம்.  ஆனந்தராஜ், கருணாஸ் வரும் காட்சிகளில் ரகளை கட்டுகிறது. 

வசனங்கள் அனைத்தும் கவுண்டர் ரகம். நினைத்து நினைத்து சிரிக்கவைக்கும் அளவிற்கு இருந்தது. திரைக்கதையை கொண்டுபோட விதம், ஒளிப்பதிவு, எடிட்டிங், கார்த்திக் ராஜாவின் பிண்ணனி இசை என அனைத்தும் அட்டகாசம்.  தமனின் பாடல்கள் மட்டுமே ரொம்ப சுமார் ரகம்.  சந்தோஷமாக சென்று பார்த்து விட்டு வரலாம்.  செம ரகளையான திரைப்படம்.

Comments

  1. பாஸ் ராம்பாலான்னா லொள்ளுசபா இயகினாரே அவரா? இந்தப் படம் ட்ரைலர் பார்க்கும் போதே நினைச்சன் செமையா இருக்கும்னு, பார்க்கணும்!

    ReplyDelete
  2. சிறந்த திரைக் கண்ணோட்டம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை