தனி ஒருவன் – சினிமா விமர்சனம்
ஒரு
பக்கா ஆக்சன் - திரில்லருக்கு என்னவெல்லாம் செய்யவேண்டும்? அதற்குமுன் ஒரு குட்டி
ப்ளாஷ்பேக் . நானும் என் நண்பனும் தினமும் மாலை வேளையில் ஜிம்மிற்கு செல்வோம். வியாழன்
மாலை அப்படிச்செல்லும் போது வழயில் தனி ஒருவன் போஸ்டரைப் பார்த்தோம். ‘ரவி வரிசையா படம் நடிச்சே தள்ளிட்ருப்பாரு போல இருக்கே’
என்றவாறு;பாரேன்! ரவி கூட வரிசையா படமா நடிச்சி தள்ளுறாரு. இவரு அண்ணன் வேலாயுதத்தோட
போனவரு! இன்னும் ஆள காணோம்’ என்றவாறு பரிதாபப்பட்டுக்கொண்டே வந்துவிட்டோம். எப்போதும்
டி.வியே பார்க்காத நான் எதேச்சையாக அன்றிரவு டி.வி பார்க்கும் துர்பாக்கியநிலைக்குத்
தள்ளப்பட்டு, மனதுக்குள் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தேன். அப்போது தான் தனிஒருவன்
ட்ரைலரைப் பார்த்தேன். ட்ரைலர் செம ஸ்டைலாக இருக்கிறதே! படமும் நன்றாக இருக்குமோ? என்றவாறே நினைத்துக் கொண்டு என் நண்பனிடம் அன்றிரவே கூறினேன். அவன், ‘யாரு டூட்
டைரக்டர்?’ என்று கேட்க, தெரியவில்லை என்று கூறிவிட்டால், நீயெல்லாம் ஒரு சினிமா
அனலைசர் என்று காறித்துப்பி விட்டால் என்ன செய்வதென்பதற்காக, புதுடைரக்டர் போல இருக்குடா
என்று கூறினேன். ரிசல்ட் வரட்டும் டூட்! பாக்கலாம் என்று அவன் கூற அத்துடன் நிறுத்திக்கொண்டேன் .
அடுத்த
நாள் படத்தின் ரிவியூக்களை ஒன்றுதிரட்டி படித்தபோது , படம் சூப்பராக இருக்கிறது என்பதைவிட, படத்தின் இயக்குனர் ஜெயம் இயக்கிய ராஜா என்பதை படித்தபோது தான் பேரதிர்ச்சிக்குள்ளானேன். அடப்பாவிகளா! பேர மாத்துனா, சொல்லவேண்டியதுதான? இது என்ன ஹாலிவுட்டா? அப்படி
இப்படியென்று மனதுக்குள் கேள்வியெழுந்தாலும், சரி நாம நியூஸ் படிக்கறதுமில்ல, பாக்கறதுமில்ல! அப்பறம் எங்க இதெல்லாம் தெரியப்போகுது என்றவாறு அமைதியாகிவிட்டேன். படத்தின் மீதான
எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம் இது ரீமேக் இல்லை, சொந்த சரக்கு என்ற ராஜாவின் பேட்டி.
அப்படி
என்ன சரக்க உள்ள வச்சிருக்காருனு திரையரங்கில் சென்று அமர்ந்தால், ஒரு பக்காவான ஸ்கிரிப்டோடு
அதகளம் செய்திருக்கிறார் . பொதுவாக ஆக்சன் த்ரில்லரைப் பொறுத்தவரை பெரும்பான்மையான
படங்கள், ஆடியன்ஸை வில்லனின் கண்ணோட்டத்திலிருந்தோ அல்லது ஹீரோவின் கண்ணோட்டத்திலோ ஒன்ற வைத்து பார்க்கவைக்கும்படியாக
இருக்கும். ஆனால் இது அம்மாதிரியல்ல. ஆடியன்ஸான நாம், ஆடியன்ஸாகவே இருப்போம் . நம்முடைய
வேலை, திரையில் நடக்கும் நிகழ்வுகளை பார்ப்பது மட்டுமே! அந்தளவிற்கு நம்மை படத்துடன்
கட்டிப்போட்டு, பரபரவென்று திரைக்கதையால் நகர்த்திக்கொண்டே போகிறார் இயக்குநர் .
படத்தின்
கதையை எல்லாரும் எழுதிவிட்டாலும் மனதுகேட்காத காரணத்தினால், நானும் என் பார்வையில்
எழுதிவிடுகிறேன் . புத்திசாலி ஹீரோவுக்கும், அதிபுத்திசாலி வில்லனுக்குமான விளையாட்டே
இத்திரைப்படம். கிட்டத்தட்ட டார்க் நைட்டின் நியாபகம் உங்களுக்கு வந்திருக்கலாம்.
அதேபோல் தான் இத்திரைப்படமும். வில்லனை எந்தளவு பவர்ஃபுல்லாக காட்டவேண்டுமோ, அந்தளவு
பவர்ஃபுல்; சயின்டிஸ்ட், பெரும் கோடிஸ்வரர், தொழிலதிபர், அமைச்சரின் மகன் போன்றவைகளில்
ஏதேனும் ஒன்றோ, இரண்டோ வில்லனுக்குரிய அடையாளங்களாக இருக்கும்; ஆனால் இத்திரைப்படத்திலோ
மேற்கண்ட அத்தனை அம்சங்களையும் ஒன்றிணைந்த
வில்லனாக அரவிந்த் சாமி. பத்மஶ்ரீ விருதெல்லாம் வாங்கியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்; எந்தளவுக்கு அறிவை கெட்டவழியில் பயன்படுத்த முடியுமோ, அந்தந்த வழிகளிலெல்லாம் பயன்படுத்தும்
அதிபுத்திசாலி. அவரின் உண்மைமுகத்தை உறித்துக்காட்டுவதாக சபதமிடும் போலிஸ் அதிகாரி
ஜெயம் ரவி. அவருடன் ட்ரைனிங்கில் கலந்துகொண்டு நண்பர்களாகும் சில போலிஸ் நண்பர்கள்
+ நயன்தாரா . இவர்கள் தான் படம் நெடு்கிலும் .
ஹாலிவுட்டில்
பெரும்பாலான பக்கா வில்லன்களை உடைய திரைப்படங்களில், ஆரம்பிக்கும் காட்சியே வில்லனிடமிருந்து
ஆரம்பிப்பார்கள். அதேபோல, இப்படத்திலும் வில்லன் ப்ளாஷ்பேக்கில் ஆரம்பித்து, ஹீரோ
இன்ட்ரடக்சனிலேயே ஹீரோவின் கேரக்டரை தெளிவாக விளக்கி, பின் செம சைலன்டாக வில்லனை அறிமுகப்படுத்தி, அவர்களிருவருக்கும் ஒரு தொடர்பை உருவாக்கி, அதனையொட்டித் தொடரும் விளையாட்டுகள்
என பக்காவாக படத்தை நகர்த்தியிருக்கிறார் ராஜா.
அது
என்னவோ தெரியவில்லை! நிஜவாழ்வில் நம்மால் முடியாத காரியத்தை ஸ்டைலாக செய்துபார்ப்பவனைத்
தாம் நாம் ரசிக்கிறோம் . அதேபோல, இத்திரைப்படத்திலும் வில்லத்தனங்களைச் செய்யும் அரவிந்த்
சாமியையே நம் கண்கள் தேடி ஓடுகின்றன. ஜெயம் ரவி உயிரைக் கொடுத்து நடித்தாலும் , அந்த
ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் எனும் விஷயத்தில் ஜெம்மாக சுழன்று நம் மனதில் இடம்பிடித்துவிடுகிறார்
.
ஜெயம்
ரவி, தன் பாத்திரத்தின் திறனேற்று சிறப்பாக நடித்திருக்கிறார் . நயன்தாராவின் முகத்தில்
எண்ணெய் வடிவதுபோன்றுதான் மேக்கப் போடுவாங்களா? அல்லது முகமே அப்படித்தானா? நானும்
வில்லு படத்திலிருந்து பார்க்கிறேன் . எண்ணெய் வடிவது போன்றே இருக்கிறது அவரது முகம். என் கண்ணில் குறைபாடா ? அல்லது அவரின் கன்னத்தில் குறைபாடா என்றே தெரியவில்லை. வம்சி
கிருஷ்ணாவிற்கு பெரிய வேலையொன்றுமில்லை . ஹீரோவின்
நண்பர்களாக வரும் கனேஷ் வெங்கட்ராம், ஶ்ரீசரண் போன்றோர்களின் தேர்வும், நடிப்பும்
சரியான அவுட்புட்டைக் கொடுத்திருக்கிறது. தம்பி ராமையா அப்பாவி மினிஸ்டராக ஆங்காங்கே
வந்து சிரிக்கவைக்கிறார். நாசருக்கு பெரிய காட்சிகள் தரப்படவில்லை .
ஒருசில
காட்சிகள் நாம் கெஸ் செய்துவிட்டாலும் பல காட்சிகளில் நம்மையும் திணறடிக்கின்றன . சின்ன
சின்ன கேம்மாக காட்டப்படும் காட்சிகள் ஆங்காங்கே
சலிப்படையச் செய்தாலும் படத்திற்கு பெரிய தடையாக இல்லை. படத்தில் லாஜிக் மிஸ்டேக்
எண்ணிலடங்காதவைகள் இருந்தபொழுதினும் அவையெல்லாம் பெரிய குறையாக தெரியவில்லை என்பதே
உண்மை .
படத்தின்
ப்ளஸ்களைக் கணக்கிட்டால் ராம்ஜியின் அட்டகாசமான ஒளிப்பதிவு, ஹிப் ஹாப் தமிழாவின் பிண்ணனி
இசை. ஹிப் ஹாப் தமிழா, பிண்ணனி நன்றாக போட்டிருந்தாலும் பாடல்களில் இரைச்சலை ஏற்றி,
காதை அறுப்பது எதனால் என்று புரியவில்லை; அனிரூத்திடம் இருந்து வந்த பழக்கமோ என்னவோ? ஆங்! சொல்லமறந்துவிட்டேனே! படத்தில் டைட்டில் சாங தவிர ஒரே ஒரு மெலடி மட்டும் தான். அதனால் தம்மடிப்பவர்களுக்கான வாய்ப்புகள்
மிகமிகக் குறைவே !
இது
ஒரு பக்கா ஆக்சன்-த்ரில்லர் என்னறு சொல்லிவிட முடியாது. குறைகள், பிழைகள் காணப்படும்
திரைப்படம் தான். ஆனால் எதிர்காலத்தில் வரவிருக்கும் இன்டெலிஜென்ஸ் சினிமாக்களுக்கு
ஒரு முன்னோடியாக இத்திரைப்படம் வென்றுவிட்டது என்று கூறலாம். கண்டிப்பாக பார்க்கவேண்டிய
திரைப்படங்களின் வரிசையில் இதையும் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம் .
பின்குறிப்பு – படத்தில் காட்டப்படும் ஸ்லைடுகள் படபடவென்று
காட்டப்பட்டுவிடுவதால் , சில இடங்களில் புரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது . கொஞ்சம்
கூர்ந்து பார்த்தால் மட்டுமே ஸ்லைடுகள் வி
வாங்க நண்பா தொடருங்கள் தொடருங்கள்
ReplyDeleteதமிழ் மணம் 1