Posts

Showing posts from September, 2015

தெருவில் ஒரு சிறுவன் – குறும்பட விமர்சனம்

Image
உங்களுக்கெல்லாம், ஐ மீன் என் ப்ளாக்கை வாசித்து வருபவர்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியாக இல்லாவிட்டாலும் சிறிய ஆச்சரியாமாவது  கண்டிப்பாக இருக்கும்; என்னடா இவன், ஒலகசினிமா, ஹாலிவுட் சினிமா என்றெல்லாம் எழுதிக்கொண்டிருந்தவன் திடுதிப்பென குறும்படத்திற்கு விமர்சனம் எழுதவந்துவிட்டானென்று. ஏற்கனவே பலமுறை யோசித்து எழுதாமல் விட்ட டாபிக் குறும்பட விமர்சனம். நேற்றிரவு மூறையின் ஏதோவொரு நியூரானில் உறங்கிக்கிடந்த அந்த யோசனையைத் தட்டியெழுப்பி, அதற்கு விட்டமின் ஊட்டி வளர்த்தி, இப்போது எழுதவைத்துவிட்டார் இப்படத்தின் இயக்குநர் சனாதனன். ஏற்கனவே சாதித்தவர்களைப் பற்றியே எழுதிக்கொண்டிருந்தால் , சாதிக்கப் போகிறவர்களைப் பற்றி எப்போது எழுதப்போகிறீர்கள் என்று சைலன்டாக அவர் கேட்ட கேள்வி பசுமரத்தாணி போன்று மூளையில் பதிந்துவிட்டது. அவர் கேட்பதும் வாஸ்தவம் தான். சினிமாவிற்கு இருக்கும் மீடியா சப்போர்ட்டில் 0.1 சதவீதம் கூட குறும்படங்களுக்கு இல்லை என்பதே 100 சதவீத உண்மை. சரி, இன்றிலிருந்து மாதம் ஒரு குறும்படத்தையாவது நம் வாசகர்களுக்கு (?) அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்ற தலையாய கொள்கையை நெஞ்சினுள் விதைத்து, அதை இன்றிலி

தனி ஒருவன் – சினிமா விமர்சனம்

Image
ஒரு பக்கா ஆக்சன் - திரில்லருக்கு என்னவெல்லாம் செய்யவேண்டும்? அதற்குமுன் ஒரு குட்டி ப்ளாஷ்பேக் . நானும் என் நண்பனும் தினமும் மாலை வேளையில் ஜிம்மிற்கு செல்வோம். வியாழன் மாலை அப்படிச்செல்லும் போது வழயில் தனி ஒருவன் போஸ்டரைப் பார்த்தோம். ‘ரவி  வரிசையா படம் நடிச்சே தள்ளிட்ருப்பாரு போல இருக்கே’ என்றவாறு;பாரேன்! ரவி கூட வரிசையா படமா நடிச்சி தள்ளுறாரு. இவரு அண்ணன் வேலாயுதத்தோட போனவரு! இன்னும் ஆள காணோம்’ என்றவாறு பரிதாபப்பட்டுக்கொண்டே வந்துவிட்டோம். எப்போதும் டி.வியே பார்க்காத நான் எதேச்சையாக அன்றிரவு டி.வி பார்க்கும் துர்பாக்கியநிலைக்குத் தள்ளப்பட்டு, மனதுக்குள் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தேன். அப்போது தான் தனிஒருவன் ட்ரைலரைப் பார்த்தேன். ட்ரைலர் செம ஸ்டைலாக இருக்கிறதே! படமும் நன்றாக இருக்குமோ? என்றவாறே நினைத்துக் கொண்டு என் நண்பனிடம் அன்றிரவே கூறினேன். அவன், ‘யாரு டூட் டைரக்டர்?’ என்று கேட்க, தெரியவில்லை என்று கூறிவிட்டால், நீயெல்லாம் ஒரு சினிமா அனலைசர் என்று காறித்துப்பி விட்டால் என்ன செய்வதென்பதற்காக, புதுடைரக்டர் போல இருக்குடா என்று கூறினேன். ரிசல்ட் வரட்டும் டூட்! பாக்கலாம் என்ற