Posts

Showing posts from January, 2015

UNBREAKABLE –சினிமா விமர்சனம்

Image
மனோஜ் ஷ்யாமளன் . ஹாலிவுட்டில் பெருமை நாட்டிய இந்தியர் . மலையாளி தந்தைக்கும் தமிழ் அன்னைக்கும் பிறந்தவர் . நோலனைப்போல சிறுவயதிலே சினிமா தான் வேண்டும் என்று அடம்பிடித்து 8 MM கேமராவைத்தூக்கிக்கொண்டு படம்பிடித்தவர் .  இவரின் படங்களை உற்றுநோக்கினால் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பைத்தான் அதிகமாய் காட்சிப்படுத்தியிருப்பார் . குடும்ப உறவைத்தான் பெரும்பாலும் படம்பிடிப்பார் . முதல் படத்திலேயே அடுத்த ஸ்பில்பெர்க் , ஹாலிவுட்டைக்காக்க பிறந்த ரட்சகன் என்றெல்லாம் கொண்டாடப்பட்டவர் . துப்பாக்கி தோளில் சுமந்து வெடிகுண்டை அல்லையில் வைத்துக்கொண்டு திரிந்த ப்ரூஸ் வில்லிசை வைத்து எடுத்த THE SIXTH SENSE படத்தின்மூலம் வில்லிசை வேறொரு லெவலுக்கு அழைத்துச்சென்றவர் . SIXTH SENSE-ன் தாக்கம் எனக்கு எந்தளவிற்கு என்றால் என்னுடைய முதல் குறும்படத்திற்கு அந்த படத்தின் தலைப்பையே வைத்தேன் (நீங்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள் , இல்லையெனில் என்னுடைய குறும்படமும் நன்றாக வந்து உங்களை படுத்தி எடுத்திருக்கும்). தான் வாழ்ந்த ஊர்களிலேயே தான் ஷூட்டிங்கை நடத்துவார் . இவரின் படங்கள் எல்லாம் கண்டிப்பாய் ஒரு ட்விஸ்ட் இருக்கும் .

தாயகம் – சினிமா விமர்சனம்

Image
சிறுவயதில் நான் கேப்டனின் பரமரசிகன் . அவர் எதிரகளை பேக் கிக்கில் அடித்துத்துவைக்கும் சண்டைக்காட்சிகளைப்பார்த்து அதேமாதிரி பிராக்டிஸ் செய்த ஆள் நான் . வல்லரசு படத்திற்கு தியேட்டரில் சென்று பார்க்கும்போது எனக்கு 7 வயது இருக்கும் . அந்த படத்தில் வரும் ஒரு சண்டைக்காட்சியைப்பார்த்து , உணர்ச்சிவெள்ளத்தில் எனக்குமுன்னால் அமர்ந்திருந்தவரை எட்டி உதைத்ததெல்லாம் இப்போது கூட நினைவிற்கு வருகிறது . ஆனால் அதன்பின் அவர் ஓவர்மாஸ் என்கிற பெயரில் குப்பையாய் படங்களை எடுக்க , நானோ அர்ஜூனின் ரசிகனாய் மாறிவிட்டேன் . நரசிம்மா படம் கூட வந்த புதிதில் பார்க்கும்போது பவராக இருந்தது . இப்போதெல்லாம் பார்த்தால் பவர்ஸ்டாரே விழுந்து சிரிக்கும் வண்ணம் இருக்கும் . ஆனால் எது எப்படியாயினும் கேப்டனின் விருதகிரி வரை பார்த்துவிட்டேன் . இந்த தாயகம் திரைப்படத்தை பார்க்காமல்விட்டிருந்ததால் இப்போது டவுன்லோடிப் பார்த்தேன் . உண்மையைச்சொல்லவேண்டுமெனில் நான் பார்த்த விஜயகாந்த் திரைப்படங்களிலே பெஸ்ட் இதுதான் என்பேன் . இன்னும் பத்து வருடங்கள் கழித்துப்பார்த்தாலும் இந்த படம் சூப்பராகத்தான் இருக்கும் . முதல்காட்சியிலேயே மூன்ற

ஆம்பள & டார்லிங் – சினிமா விமர்சனம்

Image
 . சுந்தர்.சி யின் இயக்கத்தில் ஒரு படம் என்றதுமே எனக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது . பொங்கலுக்கு முதலில் இத்திரைப்படத்திற்குத்தான் செல்வதாய் இருந்தேன் . ஆனால் சிலபல காரணங்களால் ஐ –க்கு போகவேண்டியதாகிவிட்டது . இப்போதைய சுந்தர்.சி படங்கள் எதிலுமே கதை என்பதைக்காணவே முடியாது என்பதற்கு சிறந்த உதாரணம் இப்படம் . முழுக்க முழுக்க காமெடி மாத்திரமே . அவருக்கு நன்றாய் வரும் காமெடி ட்ரீட்மென்டை சரியாய் பயன்படுத்தி , அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் சுந்தர் . ஊட்டியில் கூட்டத்திற்கு ஆள்சேர்க்கும் வேலையைச்செவ்வனே செய்துவரும் விஷால் , ஒரு கட்டத்தில் தந்தையைத்தேடி மதுரைக்கு வருகிறார் . ஊரின் பெரியமனிதராய் இருக்கவேண்டிய விஷாலின் தந்தை பிரபு , ஒரு திருடனாய் இருக்கிறார் . அவரையும் தன்னுடைய இரு சகோதரர்களையும் சந்திக்கும் விஷால் , தன் தந்தையின் பிளாஷ்பேக்கை அறிகிறார் . தவறுதலாக தன் தந்தையைக்கொன்றுவிட்டதாகவும் , தங்கைகளின்மேல் இருக்கும் பாசத்தால் சொத்துகளை தங்கைகளுக்கு எழுதிவைத்ததாகவும் தெரிவிக்கிறார் பிரபு . தந்தையைக்கொன்றதால் பிரபுவை வெறுத்து ஒதுக்கும் மூன்று தங்கைகளையும் சமாதனப்படுத்தி , அவர்களின் ம

காதல் காதல் – தொடர்கதை – நிறைவுப்பகுதி

Image
காதல் காதல் – தொடர்கதை – 1 காதல் காதல் – தொடர்கதை – 2 காதல் காதல் – தொடர்கதை – 3 காதல் காதல் – தொடர்கதை – 4 காதல் காதல் – தொடர்கதை – 5 காதல் காதல் – தொடர்கதை – 6 காதல் காதல் – தொடர்கதை - 7 அவள் எதற்காக கோவப்படுகிறாள் என்பது புரியாமல் குழம்பிய மதன் , ஏதேதோ முயற்சி செய்தும் அவளிடமிருக்கும் காரணத்தைக் கண்டறியமுடியவில்லை . இப்படியே இரு நாட்கள் முடிந்தது . அவள் கல்லூரியே கதி என்றிருந்தான் இன்றைய தினம் அவளிடம் பேசி என்னவென்று அறிந்துகொள்ளவேண்டும் என்றவாறு முடிவெடுத்தவன் அவள் கல்லூரியை விட்டு வரும் வழியில் நின்றுகொண்டிருந்தான் . அவளும் வந்தாள் . அவள் கையைப்பிடித்து இழுத்து நிறுத்தினான் . ‘எங்கிட்ட ஏன் அம்மு பேசமாட்டேன்ற ?’ என்று குரல் தழுதழுத்தவாறே கேட்டான் . கண்கள் வழக்கம்போல கண்ணிருக்கு பழகியிருந்தது . காதலித்தால் அதிகம் சுரப்பது கண்ணிர் தான் . அவள் தலைகுனிந்தவாறே நின்றிருந்தாள் . அவளின் முகத்தைப்பிடித்து நிமிர்த்தினான் . அவளும் கண்ணிரை மறைக்கத்தான் தலைகுனிந்து நின்றிருந்தாள் . அவன் கண்கள

காதல் காதல் – தொடர்கதை – 7

Image
காதல் காதல் – தொடர்கதை – 1 காதல் காதல் – தொடர்கதை – 2 காதல் காதல் – தொடர்கதை – 3 காதல் காதல் – தொடர்கதை – 4 காதல் காதல் – தொடர்கதை – 5 காதல் காதல் – தொடர்கதை – 6 ‘எங்கப்பாவுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சி மதன் ’ என்று கண்கலங்கியவாறே மதனிடம் மையல் கூறினாள் . எவ்வளவோ இனிமையான நினைவுகளை அவர்களுக்குத்தந்த அந்த பேருந்து பயணம் இன்று கொடுமையானதாக இருந்தது . நியூட்டனின் மூன்றாம் விதி இவ்வளவு சீக்கிரமாக இவர்களின் வாழ்க்கையில் அப்ளை ஆகும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் .   ‘எப்படி தெரிஞ்சது ?’ இடைப்பட்ட காலங்களில் இவர்களின் காதலுக்குள் பிரிவினை ஏற்படுத்த ஒருவன் உள்நுழைந்தான் . அவன் மையலின் தூரத்து உறவினன் . பார்க்க  போந்தாக்கோழி போல் இருக்கும் அவன் மையலுக்கேத்தெரியாமல் அவளை கபளிகரம் செய்ய முயற்சித்தான் . மதனின் கெத்தும் , நண்பர்கள் செட்டையும் பார்த்து மிரட்சியுடன் ஒதுங்கி நின்றான் . தினந்தோறும் மையலின் அருகில் அமர்ந்து வேறு சாதியைச்சார்ந்த மதன் , அவள் கையைப்பிடிப்பது இவனுக்கு அருவெருப்பை உண்டாக்கியிருந்தது .  மதன

காதல் காதல் – தொடர்கதை -5

Image
காதல் காதல் – தொடர்கதை - 1 காதல் காதல் – தொடர்கதை – 2 காதல் காதல் – தொடர்கதை – 3 காதல் காதல் – தொடர்கதை – 4 காத்திருப்பு என்பது ஒருசில நேரங்களில் இனிமையாகவும் , பல நேரங்களில் கடினமாகவும் இருக்கும் . ஆனால் மொத்தமாக ,  காத்திருக்கும் ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாகவே இருக்கும் . அதுவும் காதலில் விழுந்தவர்களின் காத்திருப்பு என்பது அனல்மேல் துடிக்கும் புழுவைப்போல் தான் .விட்டில் பூச்சி ஒளியைத்தேடுவதுபோல் , இங்கு ஒரு கன்னியின் விழிகள் தன் காதலனைத்தேடிக்கொண்டிருக்கிறது . நேரம் ஆக ஆக அவள் இருதயம் துடிக்கும் வேகமும் அதிகரித்தது . எல்லாம் இந்த மாலினியால்தான் . அவள் மட்டும் இவ்விஷயத்தை மதனிடம் சொல்லாமல் இருந்திருந்தால் தனக்கு இந்நிலையே வந்திருக்காது என்று மனதினுள் துடிதுடித்தாள் மையல் . போனவன் இன்னும் வரவில்லையே என்ற கவலையில் இவள் ஆழ்ந்திருக்க , கூட நிற்கும் தோழிகளோ நேரமாகிறது என்று கூப்பாடு போட ஆரம்பித்தார்கள் . மனதை பேருந்து நிலையத்திலேயே விட்டுவிட்டு  பேருந்தினுள் ஏறிச்சென்றாள் . இந்த மதனைப்பார்த்த நாளில் இருந்து தனது தூக்கத்தைத்தொலைத்த

காதல் காதல் – தொடர்கதை – 6

Image
காதல் காதல் – தொடர்கதை - 1 காதல் காதல் – தொடர்கதை – 2 காதல் காதல் – தொடர்கதை – 3 காதல் காதல் – தொடர்கதை – 4 காதல் காதல் – தொடர்கதை - 5 ‘ஐ லவ் யூ டி’ என்ற அவனின் ஹஸ்கியான குரலைக்கேட்டதும் சிலவிநாடிகள் அமைதியாய் இருந்தாள் . ஒருவித குறும்புடன் நக்கலும் சேர்த்து ஒலிக்கும்படி அவனிடம் கேட்டாள் . ‘இத சொல்றதுக்குத்தான் போன் பண்ணியா ?’ ‘இன்னும் சொல்ல நிறைய இருக்கு .’ ‘எங்க சொல்லு . கேட்கலாம் ’ என்று ஆவலோடு அவள் கேட்டது இவனுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கக்கூடும் . எழுந்து வீட்டை விட்டு தெருவுக்கு வந்தான் . அவனுடைய ஊர் ஒரு கிராமம் என்பதால் வீடுகள் தள்ளி , தள்ளி தூரமாய்த்தானிருக்கும் . ஒரு ஒத்தையடி பாதையில் இரவு பத்துமணிக்கு நடந்துகொண்டே பேச ஆரம்பித்தான் . அவனுடைய பேச்சு முடிவதற்கு முக்கிய காரணமாய் அவனுடைய செல்போன் பேட்டரி இருந்தது . அது மட்டும் ஆஃப் ஆகாமல் இருந்திருந்தால் , மதன் இன்னும் எவ்வளவு நேரம் பேசுவான் என்பது அவனுக்கேத்தெரிந்திருகாது . இரவு 1 மணிக்கு மீண்டும் தன் தனியறைக்கு வந்து படுத்தான் . அன்றைய இரவைப்போல்