Posts

Showing posts from July, 2014

Abraham Lincoln-சினிமா விமர்சனம்

Image
ஆப்ராகம் லிங்கன் என்று பெரிய எழுத்தில் போட்டிருந்த டைட்டிலை படித்த நான், THE VAMPIRE HUNTER  என சின்னதாக கொடுத்திருந் த கேப்சனை என்பதை கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் , அவ்வளவு சிரத்தையாக பாத்திருக்கமாட்டேன்.இது ஏதோ ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கை பற்றிய படம் என்ற எண்ணம்தான் இருந்தது. THE VAMPIRE, WOLF போன்ற FORMULA-களில் வந்த ஆங்கில படங்களில் எனக்குப்பிடித்தது இரண்டு தான். ஒன்று X-MEN , மற்றும் VAN HELSING.இதைத்தவிர TWLIGHT SERIES படங்கள் அதி அற்புதமாக இருக்கும் என்று கூரிய என் நண்பனை படம் பார்த்துவிட்டு வெளியே வந்து நானே, WOLVERINE-ஆக மாறி கொல்லலாம் என்றுதான் தோன்றியது. ஒருவேஏளை முதல் பாகத்திலிருந்து பார்த்திருந்தால், பிடித்திருக்கலாம். ஆபிரஹாம் லிங்கன் என்ற மனிதரின் பெயர் இடம்பெறாமல், அமெரிக்காவில் எந்தவிழாவும் நடைபெறாது என என் அமெரிக்கவாழ்நண்பர்கள் மூலமாக அறிந்திருக்கிறேன்.நிறத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டிருந்த , அமெரிக்க கருப்பின மக்களை , அடிமைகள் எனும் சங்கிலியிலிருந்து விடுவித்தவர் இவர். 'மக்களால் , மக்களுக்காக , மக்களே தேர்ந்தெடுப்பதே மக்களாட்சி '-என்ற

சதுரங்கவேட்டை –விமர்சனம்

Image
பலரும் பாராட்டிய இத்திரைப்படத்தை ,நேற்றுதான் பார்க்கமுடிந்தது.ஏற்கனவே அனைவரும் விமர்சனம் எழுதிய நிலையில் நாமும் எழுதவேண்டுமா என்று தோன்றினாலும், இம்மாதிரியான ஒரு சிறந்த படைப்பை பற்றி நாம் எழுதும் விமர்சனம் மூலம், வாசிக்கும் நண்பர்களில் சிலரேயாயினும் திரையரங்கில் சென்று பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் எழுதுகிறேன். கதை  **** சிறுவயதில் சமூகத்தால் ஏமாற்றப்பட்ட ஒருவன் ,வளர்ந்து அச்சமூகத்தை ஏமாற்றத்தொடங்குகிறான். அவனுடன் இருக்கும் நண்பர்கள் , ஒரு சூழ்நிலையில் அவனை ஏமாற்ற ,அவனுக்கு ஏற்கனவே அறிமுகமாயுள்ள ஹீரோயினிடம் தஞ்சம் அடைகிறான்.இருவருக்குமிடையே காதல் மலர ,திருமணம் செய்து ,ஏதோ ஒரு ஊரில் விவசாயம் செய்துபிழைத்து மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.விதி வசத்தால் , முன்பொரு முறை அவன் ஏமாற்றிய வில்லன் கூட்டத்தார் அவனை இனம்கண்டு, அவனை போட்டுத்தள்ள முயல,அவனிடம் உள்ள ஒரு திட்டத்தின் மூலம் 100கோடி கிடைக்கும் என வாக்குறுதி அளித்து ,அவர்களுடன் தன் கற்பவதிநான மனைவியை விட்டு செல்கிறான். வில்லன் ,தன் அடியாளை அவன் மனைவியுடன் நிறுத்தி, ஹீரோவை கூட்டிச்செல்கிறான். ஹீரோ , பணத்தை ஏமாற்றி

பயணம் @ டைம் மெஷின்-2

Image
அத்தியாயம்-1 ஐப்படிக்க  இங்கே அழுத்துங்கள் அத்தியாயம்-2 கி.பி-1 ஆம் நூற்றாண்டு நாள்-26.03.0010 எனக்கு அடித்த போதை அப்படியே இறங்கியது.திருவிழாவில் தொலைந்துபோன புதுப்பொண்டாட்டி போல்,பேந்த பேந்த முழித்துக்கொண்டிருந்தேன்.பாலாவோ,அந்த நாசாமாய்ப்போன டைம் மெஷினில் என்ன கருமத்தையோ செய்துகொண்டிருந்தான். ‘என்னடா செய்ற?’ ‘ ஃப்யூல் செக் பன்றேன் மச்சி ’ ‘பண்ணு பண்ணு’ வேறெதுவும் சொல்லத்தோணவில்லை.நான் அந்நேரத்தில் இருந்த இடத்தைப்பார்த்தேன். டிவியில் அடிக்கடிக்காட்டும் அமேசான் காடு ஞாபகமே என்னுள் வந்தது.கிட்டத்தட்ட யாரும் இல்லாத ஒரு வனாந்தரம். ‘மச்சி,ஃப்யூல் கொஞ்சம்தான்டா இருக்கு’ ‘சரி,என்ன பன்னலாம்?’ ‘தெரில மச்சி.இத வச்சி 100,200 வருஷம்தான் ட்ராவல் பண்ணமுடியும்!!! ’ அவனுடைய பதில், என்னை கோவத்தின் உச்சிக்கே கொண்டுசென்றத.வேறு வழியில்லை.என்னை மறுபடியும் வீட்டிற்கு கூட்டிச்செல்ல அவனால் மட்டுமே முடியும்.கோவத்தை அடக்கிக்கொண்டு என் மொபைல் போனை எடுத்துப்பார்த்தேன்.அதில் NO SERVICE என்று வந்தது. ‘What the ____ ,Its impossible.சேட்டிலைட் கவரேஜ்னு

பயணம் @ டைம் மிஷின்-1

Image
அத்தியாயம்-1 21-ம் நூற்றாண்டு ‘ இவனலாம் ஃப்ரண்டா வச்சிகிட்டு என்ன தான் பன்றது?பாத்தே பல நாள் ஆச்சு.உயிரோட இருக்கானானு கூட தெரில.இவனுக்கு மனசுல பெரிய ஐன்ஸ்டின்னு நினைப்பு.எந்த நேரத்துல காலேஜ்ல ஃபிஸிக்ஸ் எடுத்தானோ,அப்போலர்ந்து ஃப்ரெண்ட்ஷிப்பே பிச்சிகிச்சு ’                என்று மனதில் யாருக்கும் கேட்காமல் உரக்க சொல்லியபடியே பாலாவின் வீட்டை அடைந்தேன். காலேஜ் முடித்தவுடன் எப்படியோ அடிச்சி பிடிச்சி,  ஒரு ஐடி கம்பனியில் அமெரிக்காகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு லோல்ப்பட்டுக்கொண்டிருக்கும் சாதாரண இளைஞன் நான். எனக்கு விவரம் தெரிந்து,முதன்முதலில் சைக்கிள் பழகியதிலிருந்து,கடைசியாக காலேஜில் சிகரெட் பழகியது வரை,அனைத்துப்பழக்கங்களிலும் முதன்மையானவன்,என் பாலா.    காலேஜில் படிக்கும் போது கருந்துளை எனப்படும் ப்ளாக் ஹோல்ஸைப்பற்றி,பாடம் எடுக்கும் வரையில்,அவன் என்னுடன் இருந்தான். பாடம் முடிந்து 5 வருடம் ஆகிவிட்டது,அவன் பிரிந்தும்தான்.     என் நண்பர்கள் அனைவரையும் பார்த்து,என் திருமணத்திற்கு அழைத்தாயிற்று,பாலாவைத்தவிர. இன்று எப்படியாயினும் அவனைக்கண்டறிந்து,அழைப்பிதழை கொடுத்தே ஆகவேண்டும். அத

கெட்டவார்த்தை-சிறுகதை

பள்ளி விட்ட நேரத்தில் குதுகலத்துடன்,கேட்டைத்தாண்டி வெளியேறும் எல்.கே.ஜி பையனின் மனநிலையுடன், அந்த உயிரியல் பூங்காவைக் காத்துக்கொண்டிருந்த கேட்டின் வழியாக உள்நுழைந்தேன்.என் பத்துரூபாய்த்தாள்,கணிணியால் அச்சிடப்பட்ட வெள்ளைக்காகிதமாக மாற்றம் அடைந்து நுழைவுச்சீட்டாக ,என்னை உள்நுழைய வழிசெய்துகொடுத்தது.இவ்வியற்கைக்காட்சிகளைத்தவறவிட்ட நாட்களை நினைத்து,சிறுவயதில் அதிசயமாய்ப்பார்க்கும் வானத்து விமானங்களைப் பார்ப்பதை போல,என் கண்களை அகல விரித்து,அந்த வனாந்திர உயிரியல் பூங்காவைப்பார்த்தேன்.பச்சைக்கலரை இயற்கைக்கு அள்ளிக்கொடுத்த கடவுள்,மனிதனுக்கு மாத்திரம் கருப்பு,வெள்ளை என பலவிதமாய் கொடுத்தது ஏனோ?அந்த நிறங்களினால் ஒரு காலத்தில் எவ்வளவு சண்டைகள்,பிரச்சினைகள்.பழங்கதைகளை நினைத்து பாழாய்ப்போக வேண்டாம் என முடிவு செய்து,மெதுவாக என் பாத யாத்திரையை அந்த பூங்காவினுள் தொடங்கினேன்.அருகம்புல்லை அழித்து செயற்கையாக விதைத்து உருவாக்கிய புற்களைச்சுற்றி,கட்டப்பட்ட ஒரு அடி பாதுகாப்புச்சசுவர்களினுல்,புற்களின் மீது விதவிதமான டைனோசர்களும்,நடுநடுவே நடந்து போக பாதைகளும் இருந்தன. அந்த இடத்தைப்புறக்கணித்துவிட்டு மெதுவ