ராசாத்தி – சிறுகதை – பாகம் - 2

முதல் பாகத்தைப்படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்துங்கள். http://vimarsanaulagam.blogspot.in/2014/11/1.html மீண்டும் அமைதியாய் அவள் முன்னேறிக்கொண்டிருந்தாள் . திடீரென நின்றவள் என்னை முன்போகுமாறு கண்ணாலயே பணித்தாள் . எனக்கு உறுதியானது ,அவளுக்கு என்னைப்பிடிக்கவில்லை . வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு பெண் என்னிடம் எதுவும் கூறாமல் போகிறாள் .எனக்கு மேலும் பேச மனம் வரவில்லை . கால்கள் துளிசுரனையற்று தாமாகவே நடக்க ஆரம்பித்தன .இன்றைய தினம் என்னை ஒரேயடியாய் மகிழ்ச்சியில் ஆழ்த்து , துக்கத்தில் தவிக்கவைத்த ஒரு மாபெரும் தினமானது . நான் முன்னாலே சென்றுகொண்டிருக்க ,ராசாத்தி பின்னால் வந்துகொண்டிருந்தாள் . ‘ஐயோ ’ – என்ற திடீர் கூச்சல் வர , ராசாத்தியின் கூச்சலில் என்ன ஆயிற்றோ என்று அவள் அருகில் சென்றேன் . ‘என்ன ஆச்சு ? ஏன் கத்துனிங்க ?’ ‘பாம்பு’ ‘எங்க ?’ ‘அது ஓடிடுச்சு ?’ ‘பாத்து வரமாட்டியா பா ?’ – என்ற கேள்வி என்னுள் இருந்து வெளிவந்ததும் , அவள் மீண்டும் ஒரு மந்திரப்புன்னகை உதிர்த்தாள் . ‘பாம்பு ஓடுனது நான் வரும்போது இல்ல .நீங்க முன்னாடி போக...