Posts

Showing posts from June, 2014

கள்ளக்காதல் நிகழ்வுகளும் சீரழியும் சமூகமும்

கள்ளக்காதல் நிகழ்வுகளும் சீரழியும் சமூகமும் (இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்ட கட்டுரை இல்லை!அவ்வாறு இருந்தால் தயை கூர்ந்து மன்னித்துவிடவும்) சிறப்பாயிரம் இப்போது எந்த தமிழ்ச்செய்தித்தாள்களைத் திருப்பினாலும்,எங்காவது ஒரு மூலையில் கள்ளக்காதலால் கணவனைக்கொன்ற மனைவி,குழந்தையைக் கொன்ற தாய்,மனைவியை எரித்த கணவன்,போன்ற செய்திகளையெல்லாம் தாண்டி முதல் கள்ளக்காதலன்,இரண்டாம் கள்ளக்காதனை கதறக்கதற கொன்றான் எனும் அளவிற்கு செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.இந்தக்கள்ளக்காதலால் யாருக்கு நன்மையெனில் தமிழின் முன்னனி நாளிதழ் என்று தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்ளும் நாளிதழ்,இன்று கள்ளக்காதல் செய்திகள் மூலமாகவே வாழ்ந்துவருகிறது.அந்த செய்தித்தாளைத்தவிர மற்ற அனைவருக்கும் ஒரு சோகம் தரக்கூடிய விஷயமே. சரி,முதலில் கள்ளக்காதல் ஸ்டேஜ்களை,பாலின் அடிப்படையிலும்,வயதின் அடிப்படையிலும்,செயலின் அடிப்படையிலும் காணலாம். ஆண்கள் பிஞ்சிலே பழுக்கும் வகையறா. இன்றைய காலகட்டத்தில்,தொழில்நுட்பம் என்பது,எவ்வளவுக்கெவ்வளவு பயனளிக்கிறதோ,அவ்வளவு கெடுதலையும் உண்டாக்குகிறது.மனிதனின் மனம் என்றும் நல்ல

தமிழகத்தைத்தாக்கும் குழந்தை ஏசு

தமிழகத்தைத்தாக்கும் குழந்தை ஏசு நேற்று ‘ சிவகாசிக்காரன் ’ அண்ணன் ராம்குமாருடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது மழையைப்பற்றிய பேச்சு வந்தது.தமிழ்நாட்டில் தாறுமாறாக மழைபெய்தாலும் எங்கள் சேலத்தில் சிறு சாரல் மட்டுமே வீசும்.ஆனால் அதிசியமாக நேற்று தமிழகத்தை இன்ச் பை இன்ச்சாக அளந்துகொண்டிருந்த சூரியக்கதிர்களிடம் இருந்து காக்க ஹைட்ரஜனும்,ஆக்ஸிஜனும் கலந்து எங்கள் சேலத்தை மழையாக குளிர்வித்துக்கொண்டிருந்தது.இதுவரை ஒரு கட்டுரை எழுத தலைப்புக்கிடைக்காமல் தவித்து கொண்டிருந்த எனக்கு கணநேரத்தில் உதயமானது இந்த யோசனை. இப்போது எந்த செய்தித்தாள்களிலும் மழையைப்பற்றி செய்தி இருந்தால் கூடவே ‘எல்நினோ’ என்ற அழையாவிருந்தாளியும் அவ்விடத்தில் இருப்பார்.யார் அந்த எல்நினோ?எதற்கு நம்மை படுத்தி எடுக்கிறார்?அவரால் என்ன பிரயோஜனம் என்று பலருக்கும் பல குழப்பம் இருக்கும்.அவரைப்பற்றியும் அவரின் செயல்களைப்பற்றியும் சிறிது அலசுவதே இந்தக்கட்டுரையின் நோக்கம். நமக்கு மழை எவ்வாறு வருகிறது?நிலத்திலோ அல்லது கடலிலோ இருக்கும் நீர் சூரியனின் வெப்பத்திற்கு இரையாகி,ஆவியாகி,கருமேகமாகி வளிமண்டலத்தின்மேல் சென்று அங்கு குளிர்விப்

பூமி - சிறுகதை

பூமி நண்பர்களே!!இது என் முதல் சிறுகதை!!!படித்துப்பார்த்து குறைகள் இருப்பின் கூறவும்.நிறைவாக இருப்பின் எனக்கு மேலும் எழுத உற்சாகப்படுத்தவும்.             இன்று என் வாழ்வின் மிகமுக்கியமான நாள். எனக்கு மட்டுமல்ல, எங்கள் உலகத்தின் கோடிக்கணக்கானவர்களுக்கும் மிக முக்கியமான நாள். காரணம்  , போர். கண் விழித்ததும் எழுந்து மிக வேகமாக ஆயுத்தமாகி கிளம்பினேன். என் வாகனம் எனக்காக காத்திருந்தது.  அதில் ஏறியதும் நான் சொல்வதை அப்படியே கேட்கும் என் வாகனம் கமாண்ட் ஆபஸிற்கு செல் என்றதும் என்னைப் படுக்கவைத்து , படுவேகத்தில் சென்று கொண்டிருந்தது.                       சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் எங்களைத்தேடி ஒரு வினோதமான சிக்னல் வந்தது.அந்த சிக்னல் தான் இந்த போரையும் கொண்டுவந்தது.ஆம்.நீங்கள் நினைப்பது சரிதான்.அது ஒரு வேற்று கிரகத்தில் இருந்து ஒருவகையான உயிரினிங்களால் அனுப்பப்பட்ட சிக்னல்.அதை அறிந்ததும் அது எங்கிருந்து வந்தது என்பதை எங்கள் விஞ்ஞானிகள் குழு மிகத்தீவிரமாக ஆராய்ந்து அந்த கிரகத்தினை கண்டறிந்தனர்.அந்த கிரக வாசிகளை தொடர்பு கொள்ள முயன்றனர்.ஆனால் முடியவில்லை.பின் ஒரு பிரம்மாண்ட  விண