Posts

Showing posts from December, 2014

வதந்திகள் – சிறுகதை

Image
‘ அவனா ? கண்டிப்பா சான்ஸே இல்ல ’ என்றேன் அழுத்தத்துடன் . ‘ அவனே தான் . நா என்னட ரெண்டு கண்ணால பாத்தேன் . ரெண்டு காதாலயும் கேட்டேன் . ’ என்னால் நம்பமுடியவில்லை .அவன் மிகவும் நல்லவன் . அவனுக்கு அவனுடைய தந்தையை அவ்வளவாகப் பிடிக்காது என்பது உண்மை தான் . அவனுக்கு மட்டுமல்ல , யாருக்கும் அவனுடைய தந்தையின் உண்மையான முகத்தைக் கண்டால் பிடிக்காது . வீட்டிலேப் புலி , ஊருக்குப் பசு என இரட்டை வேடக்கபடதாரி . அவரைப் பொறுத்தவரை , அவருடைய வீட்டில் அவர்தான் எல்லாம் தெரிந்தவர் . அவர் பேச்சைக்கேட்கவில்லை என்றால் அவ்வளவு தான் . திட்டித்திட்டியே சாகடிப்பார் . நாம் என்ன சொல்லவருகிறோம் என்பதை புரிந்துகொள்ளாமல் , அவராக ஒன்றை கற்பனை செய்து , அதை அவரே ஏற்றுக்கொண்டு ஊரெல்லாம் பரப்பி விடுவார் . பலமுறை அவருக்கும் பிரபுவுக்கும் வாய்ச்சண்டை ஏற்பட்டதை நானே பார்த்துள்ளேன் . ஆனால் இம்முறை பிரபு தன் தந்தையை அடித்துவிட்டான் என்ற செய்தியை நம்பமுடியவில்லை . ‘சும்மா அரகுரயாப் பாத்துட்டு உளராத பிரியா .’ பிரியா . என் தங்கை . +2 முடித்து இரண்டுவருடமாய் வீட்டில் இருப்பவள் . சுத்தஜாதகமாய் பிறந்து தொலைத்ததால்

A SEPERATION - சினிமா விமர்சனம்

Image
தமிழில் உலகசினிமா வரவேண்டும் என்றால் உலகத்திரைப்படங்களைப் பார்ப்பதால் மட்டுமோ , தமிழ் மற்றும் உலகஇலக்கியங்கள் படிப்பதால் மட்டுமோ வந்துவிடாது .  முதலில் நாம்  சார்ந்துள்ள சமூகத்தின் நிலையை நன்கு உணரவேண்டும் . நம் சூழ்நிலையையும் , நம் மக்களின் பிரச்சனைகளையும் மனப்பூர்வமாக உணர்ந்தாலே , உலகப்படைப்புகளுக்கு நிகரான திரைப்படங்களைத் தமிழ் இயக்குநர்களால் கொடுக்கமுடியும் . ஆனால் அந்தமாதிரியான படங்கள் தமிழ்நாட்டில் கலெக்சன் எடுக்குமா என்பது சந்தேகம் தான் . காரணம் ரசிகர்களாகிய நாம் முதலில் ஒன்றை மனதில் நிறுத்தவேண்டும் . நமக்கு , நேரத்தைக்கடத்த உதவும் கமர்சியல் படங்களும் தேவை . அதேநேரம் நாம் என்னமாதிரியானதொரு சமூகத்தில் வாழ்கிறோம் என்பதனை உணரும் பொருட்டு இம்மாதிரியான படங்களையும் ஊக்கப்படுத்தவேண்டும் .   நான் முதன்முதலில் ஆங்கிலம் தவிர மற்றையமொழி படங்களைப்பார்க்க ஆரம்பித்தது ஒரு கிரேக்க படத்தினால் தான் . ஆனால் அந்த படத்தைப்பார்த்ததும் ‘ஆள வுடுங்கடா சாமி’ ரேஞ்ச்-க்குச் சென்று விட்டேன் . அதன்பின் CHILDRENS OF HEAVEN எனும் ஈரானிய படத்தின் மூலம் , மீண்டும் எனது உலகசினிமாக்களைப் பார்க்கும்

ஐ படத்தின் கதை

Image
விக்ரம் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் . சிறுவயதிலிருந்தே அர்னால்ட் போன்று பாடிபில்டராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் , ஜிம்மே கதி என்று இருக்கிறார் . ஒரு கட்டத்தில் ஷூட்டிங்’கிற்காக வரும் மாடல் அழகியான எமி ஜாக்சனை சந்திக்கிறார் . பார்த்தவுடன் எமியின் மேல் காதல் வருகிறது . ஆனால் மாடல் அழகியான எமிக்கு , விக்ரமைப்பிடிக்கவில்லை . அவளை எப்படியாவது காதலிக்கவைக்கவேண்டும் என்று மாடலிங் துறையில் நுழைகிறார் . ஆனால் அவர் எதிர்பார்த்தது போல  , மாடலிங் துறை ஒன்றும் சாதாரணமானது கிடையாது என்று உணருகிறார் . அப்போதுதான் பிரபல ஆராய்ச்சியாளரான வில்லனைச்சந்திக்கிறார் . வில்லன் , விக்ரமை ஒரு சர்வதேச மாடலாக மாற்ற ஒரு மருந்தைத் தான் கண்டுபிடித்ததாக கூறுகிறான் .  அவனை நம்பும் விக்ரம் அந்த மருந்தை எடுத்துக்கொள்கிறார் . வில்லன் கூறியதுபோலவே , விக்ரம் அழகான இளைஞராக மாறிவிடுகிறார் . அதன்பின் புது விக்ரம் மீது எமிக்கு காதல் வந்துவிடுகிறது . இருவரும் வெறித்தனமாக காதலிக்கிறார்கள் . ஒரு கட்டத்தில் , அந்த  மருந்தின் பின்விளைவுகளால் விக்ரம் கொடூரமானவராக மாறுகிறார் . எமியிடம் இருந்த

TRIANGLE - விமர்சனம் + அலசல்

Image
கிறிஸ்டோபர் ஸ்மித் அப்டினு ஒரு டைரக்டர் . அவர் எழுதி இயக்கிய திரைப்படம் தான் இது . இந்த மனுஷனுக்கு விமர்சனம் எழுதறவங்க மேல என்ன காண்டோ தெரியல . எவனுமே விமர்சனம் எழுதிடக்கூடாதுன்னு கங்கணம் கட்டி ஒரு படம் எடுத்துருக்காரு . இந்த படத்த எங்க ஆரம்பிக்கறது , எங்க முடிக்கறது , எப்படி எழுதறதுனேத் தெரியலை . இருந்தாலும் இப்படத்தின் வாயிலாக நான் உணர்ந்ததை எழுதுகிறேன் . ஜெஸ் என்பவள் அறிமுகமாகிறாள் . அவளுக்கு ஆட்டிசம் எனும் மனநோய்க்குறைபாடுள்ள ஒரு மகன் இருக்கிறான் . அவள் வீட்டில் காலிங்பெல் அடிக்க , சென்று பார்க்கிறாள் . ஆனால் யாருமில்லை . சிறிதுநேரத்தில் வேறொரு உடையில் தன் மகனிடம் பயப்படவேண்டாம் என்றுகூறி ஆறுதல் சொல்கிறாள் . அடுத்த காட்சியில் ஒரு படகைக்காட்டுகின்றனர் . TRIANGLE எனப்படும் அந்த படகின் உரிமையாளன் கிரேக் . அவனும் ஜெஸ்ஸும் தோழிகள் என்பது அவர்களின் உரையாடல்களிலேயேத் தெரிகிறது . அவளின் மகன் எங்கே எனக்கேட்கும் கிரேக்கின் வேலையாள் விக்டரிம் , பள்ளிக்குச்சென்றிருக்கிறான்  எனக்கூறுகிறாள் . ஆனால் சனிக்கிழமை பள்ளி விடுமுறை நாள் .விக்டர் , கிரேக், கிரேக்கின் தோழி சேல்லி ,அவளின் க

FORREST GUMP – ஒரு பார்வை

Image
life was like a box of chocolates.   You never know what you're going to get. இந்த படத்தின் பெயரைப்பார்த்ததும் , ஒரு அடர்ந்த காடு , அங்கே செல்லும் ஒரு இளைஞர் பட்டாளம் . அங்கிருக்கும் ஒரு விநோதமான ஜந்துவின் தாக்குதல் . ஸ்லீவ்லெஸ்சும் , மினிஸ்கர்ட்டும் அணிந்த ஹீரோயின் மாத்திரம் கடைசியில் தப்பிப்பிழைப்பார் என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள் . ஏனெனில் இது ஒரு படமல்ல ! பாடம் . வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதை கண்முன் நிறுத்தும் ஹீரோவின் பெயர் தான் ஃபாரஸ்ட் கம்ப் . அது என்ன பெயர் ? இவ்வளவு வித்தியாசமாக ? ஃபாரஸ்ட்டு , ஹில்ஸ்-னு லாம் யோசிக்காதிங்க . தன்னுடைய பெயருக்கான காரணத்தையும் இந்த ஃபாரஸ்ட் நம்மிடம் பகிர்ந்து கொள்வார் . உடனே ஃபாரஸ்ட் என்பவர் கருணையுள்ளம் கொண்ட கோடிஸ்வரராகவோ , நாட்டிற்காக உயிரை அர்ப்பணித்த ஒரு மாவீரனாகவோ , மாபெரும் கல்வியாளனாகோவா , வாரி வழங்கும் வள்ளலாகவோ , தன் குடும்பத்திற்காக உயிரைக்கொடுக்கும் பாசக்காரனாகவோ கருதவேண்டாம் . அவன் மிகவும் சாதாரணமானவன் . இன்னும் சொல்லப்போனால் , இந்த பதிவைப்படித்துக்கொண்டிருக்கும் உங்களையும் , எழுதிய என்னையும் வி