Posts

Showing posts from September, 2014

CN's - MeMeNtO - சினிமா விமர்சனம் அல்ல

Image
CN’S – MEMENTO – திரைக்குப்பின்னால் சென்ற பதிவில் , நோலனின் மெமென்டோ படத்தைப்பற்றிப்பார்த்தோம் . இப்பதிவில் , அப்படத்தின் பிண்ணனி மற்றும் திரைக்குப்பின்னால் நடந்த நிகழ்வுகளைக்காணலாம் . நோலன் ,  இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இணைந்த கலவை . நோலனின் பெற்றோர் அமெரிக்க , இங்கிலாந்து நாட்டைச்சார்ந்தவர்கள் . ஆங்கில இலக்கியத்தை, இங்கிலாந்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துமுடித்தார் . இங்கிலாந்தில் இருக்கும்போதுதான் , தன்னுடன் படித்து வந்த எம்மாவை காதலிக்க ஆரம்பித்தார் . இருவரும் பால்யகால சிநேகிதர்கள் . கல்லூரி நண்பர்களை சேர்த்து எப்படியோ Following படத்தினை முடித்தார் . அதன்பின் , அவரின் காதலி எம்மாவிற்கு அமெரிக்காவில் வேலை கிடைத்துவிட , அமெரிக்கா சென்றுவிட்டார் . உங்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த விஷயம் , மெமென்டோ திரைப்படம் , ’ மெமென்டோ மோரி ‘ எனும் ஜொனதனுடைய  சிறுகதையின் தாக்கத்தால் உருவானது என்று .   FOLLOWING திரைப்படத்தை முடித்தபின் , தன்காதலியான எம்மா தாமசின் வேண்டுதலின்பேரிலும் , FOLLOWING படத்தினை சான் – பிரான்சிஸ்கோ விழாவில் திரையிடுவதற்காகவும் இங்கில

பயணம் @ டைம்மெஷின் - 8

Image
பயணத்துள் பயணம் தொடர்புடைய இடுகைகள் பயணம் @ டைம்மெஷின் - 1 பயணம் @ டைம்மெஷின் - 2 பயணம் @ டைம்மெஷின் - 3 பயணம் @ டைம்மெஷின் - 4 பயணம் @ டைம்மெஷின் - 5 பயணம் @ டைம்மெஷின் - 6   பயணம் @ டைம்மெஷின் - 7 அன்றைய நாள் , அவர்களுக்கு அப்படி அமையும் என்று அவர்கள் எதிர்ப்பார்த்திருக்கமாட்டார்கள் . முந்தையநாள் காலை நடந்த அக்கலகச் சண்டை கூட அவர்களை அந்தளவு பாதிக்கவில்லை . மனமெல்லாம் பாராமாய் இருக்க ,தலைகுனிந்து நடந்துகொண்டிருந்தனர் . அச்சமயம் , தங்களை யாரோ தடுப்பதுபோல் இருக்க , யாரென்று பார்த்தனர் . ஆம் , அவரே தான் . இரண்டுநூற்றாண்டுகளுக்கப்பின் , தாங்கள் இருவரும் அடையாற்றில் குளிக்கும்போது ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவரே தான் . அப்போது , இதனை நம்பமுடியாமல் அன்று  , சிரித்த இருவரும் அதிசயங்கலந்து அவரைப்பார்த்தனர் .200 ஆண்டுகள் பின்னும் , அவர் இப்படியே தான் இருந்தார் . இப்போதும் அப்படியே உள்ளார் எனில் , கண்டிப்பாய் இவர் சித்தர் தான் . உண்மையா ? கனவா ? என்று ஆராய இப்போது முடியவில்லை .இவை அனைத்தும் கனவுலகில் சஞ்சரிப்பது

கலப்பு ('க்'காதல்)'த்' திருமணங்கள் அவசியமா ?

எங்கள் கிராமத்தில் , இன்னும் எம்.ஜி.ஆர் , சிவாஜிக்குத்தான் ரசிகர்கள் அதிகம் . இன்னும் பண்டிகைக்காலங்களில் எள்ளிடி ,ஆப்ப கசாயாம் , வெள்ளம்புலி கறி ,  போன்ற தமிழர் மறந்த பலகாரங்கள் தான் வீட்டில் செய்து சாப்பிட்டு வருகிறார்கள் . சுருக்கமாய் சொல்லவேண்டும் எனில் , 1960 – களின் வாழ்க்கை நிலையை மதிக்கும் மக்கள் அதிகம் .எங்கள் ஊரில் மட்டுமல்ல, எங்களை சுற்றியுள்ள பல சுற்றுவட்டார ஊர்களிலும் , இதே நிலை தான். உறவினர் அல்லாத , ஒரு பெண்ணோ பையனோ இரண்டு நிமிடம் சிரித்து பேசிவிட்டால் அவ்வளவு தான் . என் வயதில் இருக்கும் இளவட்டங்கள் , அவளின் நடத்தையைப்பற்றி “A” சர்டிபிகேட் கொடுக்குமளவிற்கு , கற்பனையில் வாய்கிழிய கிளப்பி விடுவார்கள் . நடுத்தர வயதினரோ , அப்பெண்ணை மிரட்டி , பையனை மரத்தில் கட்டிவைத்து அடித்த நிகழ்வுகளெல்லாம் மூன்று வருடங்களுக்கு முன் வரை நடந்து கொண்டிருந்தது . மாற்று சமூகம் என்றால் சொல்லவே வேண்டாம் . ஒருமுறை கவுண்டர் இனத்தைச்சார்ந்நத பையன் ஒருவன் , நாடார் இனப்பெண்ணுடன் ஓடிச்சென்றான் . அவனை பிடிக்க அவனுடைய தந்தை , டாட்டா சுமோக்கள் சகிதம் 40 பேருக்கு மேல் கிளம்பி அவனை விரட்டினார்கள்

CN’s – FOLLOWING – சினிமா விமர்சனம்

Image
கிறிஸ்டோபர் நோலன் . நீங்கள் ஹாலிவுட்டின் மிகச்சிறந்த படங்களை பார்த்திருப்பீர்கள் என்றால் , இப்பெயரை கேள்விப்படாமல் இருக்கமுடியாது . மனுஷர் , ஒவ்வொரு படமும் , ஒவ்வொரு விதமாக எடுப்பார் .இதுவரை எடுத்த படங்களின் கதைச்சூழல் , ஒவ்வொன்றிலும் வெவ்வேறாகதான் இருக்கும் . முதல் படமான FOLLOWING முதல் , கடைசியில் வெளிவந்த THE DARK KNIGHT RISES வரை , ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் .இவர் இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் படமான INTERSTELLER திரைப்படம் , நவம்பரில் வெளியாக உள்ளது. எப்படியும் அந்த படம் ரிலிசானவுடன் ,வலைப்பதிவு உலகத்தில் ,ஹாலிவுட் விமர்சகர்களால் குறைந்தது ஒரு மாதத்திற்காவாது உச்சரிக்கப்படும் பெயர் ,இவருடையதாகதான் இருக்கும் . அதனால் , அவரின் ஒவ்வொரு படங்களையும் , ஒரு சின்ன தொடர்பதிவாக , இப்போதே எழுதி தள்ளவிடலாம் என்றிருக்கிறேன் . பொதுவாக , ரேட்டிங் எனப்படும் தரவரிசையில் சாதிக்கும் படங்கள் , வசூலில் கவிழ்ந்துவிடும் . ஆனால் , வசூலிலும் கலக்கிவிட்டு , ரேட்டிங்கிலும் இடம்பெறும் வகையறா படங்கள் தான் நோலனின் படங்கள் . இவரின் ஒவ்வொரு படமும் , ஒரு இலக்கியம் போன்றதுதான். ஒவ்வொரு படைப்பும் ஒரு