காதல் காதல் – தொடர்கதை – 7
‘எங்கப்பாவுக்கு
நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சி மதன் ’ என்று கண்கலங்கியவாறே மதனிடம் மையல் கூறினாள் .
எவ்வளவோ இனிமையான நினைவுகளை அவர்களுக்குத்தந்த அந்த பேருந்து பயணம் இன்று கொடுமையானதாக
இருந்தது . நியூட்டனின் மூன்றாம் விதி இவ்வளவு சீக்கிரமாக இவர்களின் வாழ்க்கையில் அப்ளை
ஆகும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் .
‘எப்படி தெரிஞ்சது
?’
இடைப்பட்ட காலங்களில்
இவர்களின் காதலுக்குள் பிரிவினை ஏற்படுத்த ஒருவன் உள்நுழைந்தான் . அவன் மையலின் தூரத்து
உறவினன் . பார்க்க போந்தாக்கோழி போல் இருக்கும்
அவன் மையலுக்கேத்தெரியாமல் அவளை கபளிகரம் செய்ய முயற்சித்தான் . மதனின் கெத்தும் ,
நண்பர்கள் செட்டையும் பார்த்து மிரட்சியுடன் ஒதுங்கி நின்றான் . தினந்தோறும் மையலின்
அருகில் அமர்ந்து வேறு சாதியைச்சார்ந்த மதன் , அவள் கையைப்பிடிப்பது இவனுக்கு அருவெருப்பை
உண்டாக்கியிருந்தது . மதனிடம் மையல் சிரித்து
பேசும்போதெல்லாம் இவனுக்கு நரம்புகள் புடைக்கும் . அவனின் கோவத்தை நேரடியாகக்காட்டாவோ
, மையலைக்கண்டிக்கவோ போதுமான தைரியம் இல்லாதவன் . அவனுக்கு மையல் வேண்டும் . அவ்வளவே
அவன் எண்ணம் . அதற்காக குறுக்கவழியைக்கண்டறிந்து அதன்படி சென்றான் .மையலின் வீட்டில்
சொல்லிவிட்டான் .
‘யாரோ எங்க வீட்டுல
சொல்லிட்டாங்க .’ என்று அழுதவாறே கூறினாள் .
‘அம்மு . அழாத
! இப்போ என்ன ? உங்க வீட்ல தெரிஞ்சிடுச்சி . அவ்ளோதான . நா உங்க வீட்டுல வந்து பேசறேன்
.’
‘அதெல்லாம் வேண்டாம்
. என்ன இன்னைக்கே எங்கயாவது கூட்டிட்டு போய்டு . ப்ளீஸ் .’ என்று மீண்டும் அழுதாள்
.
‘ஹே ! லூசாடி நீ
. நா இன்னும் காலேஜ் முடிக்கல . அதுவுமில்லாம என்ன பெத்த பையனவிட பாத்துப்பாத்து என்னோட
அங்குள் வளர்த்திருக்காரு . அட்லீஸ்ட் அவருகிட்டயாச்சும் ஒரு வார்த்தை சொல்லனும் .’
‘எனக்கு பயமா இருக்குடா
. ப்ளீஸ் . என்ன விட்டுட்டு போய்டாத டா .’
‘ஒருநிமிஷம் பொறுமையா
யோசிச்சு பாரு அம்மு . நா உன்ன கல்யாணம் பண்ணி ராணிமாதிரி வச்சி்க்காப்பாத்தனும்னு
நினைக்கிறேன் . இப்போ இருக்க நிலைமைல எப்டிடி
? நா ஆல்ரெடி சொல்லிருக்கேன்ல . உங்க வீட்ல உன்னப் பாத்துக்கரத விட நல்லா உன்னப்பாத்துக்கனும்
. அதுதான் எனக்கு முக்கியம் .கொஞ்சம் பொறுமையா இரு தங்கம் . ’ என்று ஒருமாதிரியாக சமாதானப்படுத்தினான்
. அவனின் ஆறுதலான வார்த்தைகள் மனதின் காயத்திற்கு ஒத்தடம் கொடுத்தது போலிருந்தது .
வீட்டிற்கு வந்தவன்
சிறிது நேரம் யோசித்தான் . இதன்பின்னும் பொறுத்திருப்பது ஆபத்து என்றுணர்ந்தான் . அவன்
அங்கிளிடம் எல்லா உண்மையைப்பற்றியும் உடைத்தாகவேண்டிய கட்டாயத்திற்குத்தள்ளப்பட்டான்
. அவருக்காக காத்திருந்தான் . சப்-இன்ஸ்பெக்டரான அவருக்கு எப்போது வேலை முடியும் ,
எப்போது வீடுதிரும்புவார் என்பது கேள்விக்குறியே . ஆனால் அவனுடைய நேரத்திற்கு அன்று
சீக்கரமாகவே வீட்டிற்குள் நுழைந்தார் . மனதைத்தைரியப்படுத்தியவாறே அவரிடம் சென்றான்
.
‘அங்குள் ’
‘ம் ’
‘உங்க கிட்ட கொஞ்சம்
பேசனும் ’ என்றவனை நிமிர்ந்து பார்த்தார் . அவரின் முகம் என்ன என்று வினவியது .
‘நா ஒரு பொண்ண
மூனு வருஷமா லவ் பன்றேன் .’
என்னது மூனு வருஷமா
என்பது போல் அவருடைய முகம் ஆச்சரியமானது .
‘அதுக்கு ?’
‘அவங்க வீட்ல தெரிஞ்சிடுச்சி
. ’
அவர் அவனின் கண்களை
கூர்மையாய் நோட்டம் விட்டவாறே கேட்டார் .
‘அவள கல்யாணம்
பண்ணிக்கனுமா ?’
இவன் தலைகுனிந்தவாறே
நின்றுகொண்டிருந்தான் .
‘உன் வயசு என்ன
? என்ன வேலைக்கு போற ? ஒருபடி பொன்னி அரிசி விலை என்னன்னு தெரியுமா ?’
என்ற அவரின் கேள்விகளுக்கு
பதில் கூறாமல் நின்றிருந்தான் . அவனுக்கு பொன்னி அரிசியைப்பற்றிய கவலை இல்லை . உள்ளுக்குள்
தன் காதல் இளவரசியைப்பற்றிதான் கவலை .
‘பொண்ணு என்ன ஜாதி
?’
‘******* அங்குள்
.’
‘செட் ஆகாது .
விட்ரு .’
‘அங்குள் ’ என்று
ஏமாற்றத்துடன் அவரைப்பார்த்தான் . அவனின் கண்களில் பிச்சைக்கேட்பவனின் ஒளி தெரிந்தது
. அவரோ அவனைக்கவனிக்காமல் எழுந்து சென்று பீரோவைத்திறந்து சில பைல்களை கொண்டுவந்தார்
.
‘மீறி கல்யாணம்
பண்ணிக்கனும்னு நினைச்சினா இங்க இருக்கமுடியாது . உங்க அப்பனோட இன்சூரன்ஸ் பணம் , உன்
பேர்ல வாங்கி வச்சிருக்க நிலம் பத்தின எல்லா பைலும் இதுல இருக்கு . எடுத்துகிட்டு கிளம்பிடு
.’ என்று குரல் தழுதழுத்தவாறே கூறினார் . அவனை
எப்படியாவது நல்ல நிலைமைக்குக்கொண்டு வந்து சேர்த்துவிடவேண்டும் என்று வாழ்க்கைமுழுமைக்கும்
போராடிக்கொண்டிரு்ககும் ஜீவனின் கண்கள் கலங்கியிருந்தது . அவன் தம் அடிக்கிறான் எனத்தெரிந்திருந்தாலும்
அதை அவனிடம் அதைப்பற்றி நேருக்குநேர் ஒருமுறைக்கூட பேசியதில்லை . ஒரே ஒரு தடவை குடித்துவிட்டு
வந்தவனிடம் ‘உங்கப்பன மாதிரி நீயும் ஆகிடாதடா ’ என்று கெஞ்சியவர் . அன்றிலிருந்து குடிப்பதை
நிறுத்தியவன் . இன்றோ , அவனை தராசுபோல் மாற்றிவிட்டார் .ஒருபக்கம் தன்னையே நம்பி காத்திருக்கும்
மையல் , இன்னொருபுறம் தனக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த மாமன் .
மதன் அதற்கடுத்து
எதுவும் பேசவில்லை . அவனுக்கு நன்றாய்த்தெரியும் . அவனுடைய வீட்டில் ஜாதிப்பிரச்சனை
பெரிதளவில் இருக்குமென்பது நன்றாய் தெரியும் . அவ்வளவு ஏன் , அவனே நண்பர்களைக்கூட ஜாதிவாரியாகத்தான்
பிரித்து வைத்திருந்தான் . காதலிக்கும்போது கூட அடிக்கடி மையலின் ஜாதியைக்கிண்டலடிக்காமல்
இருக்கமாட்டான் . அவளும் இவனைப்போல் ஜாதி பார்த்திருந்தால் , இவர்களின் காதல் அப்போதே
முடிந்திருக்கும் . இனி யோசிக்க ஒன்றுமில்லை
. கடைசியாய் ஒருமுறை மையலின் வீட்டில் மோதிப்பார்த்துவிட வேண்டியதுதான் என்றவாறு அவளின்
வீடு நோக்கி தன் பைக்கை கிளப்பினான் .
கிளம்பும்முன்
கண்ணனுக்கு போன் செய்து மையலின் வீட்டினருகே இருக்கும் டீக்கடைக்கு வருமாறு கூறியிருந்தான்
. அவளின் வீடுநோக்கி செல்லும்போதெல்லாம் எதிர்காலத்தைப்பற்றிய பயத்துடன் தானிருந்தான்
. அவனுடைய மாமாவிற்கு ஜாதியைக்காட்டிலும் அவனே முக்கியம் . இருந்தாலும் அவனுடைய கிராமம்
முழுமையும் அவருக்கு அங்காளி , பங்காளி , மாமன் , மச்சான் உறவினராகவே இருந்தனர் . இவன்
வேற்றுசாதிப்பெண்ணைத்திருமணம் செய்துவிட்டான் என்று அவர்கள் அறிந்தால் ஊருக்குள் தலைநிமிர்ந்து
எங்கும் செல்லமுடியாது . தான் அவமானப்படுவதோடு மட்டுமில்லாமல் ‘தங்கை மகனை ஊர்ப்பொறுக்க
வைத்துவிட்டான் . வளர்ப்பின் லட்சணம் இதுதானா ?’ என்று ஊரே அவமானப்படுத்தும் . தன்
மகளுக்கு நாளை வரன்தேடினாலும் இந்த பிரச்சனை குறுக்கில் வரும் . இவனைக்காட்டிலும் இக்கட்டான
சூழலுக்கு அவர்தான் தள்ளப்பட்டார் .
மதன் அவளின் வீட்டை
அடைந்தான் . கண்ணனிடம் வெளியில் காத்திருக்குமாறு கூறிவிட்டு அவளின் வீட்டிற்கு சென்று
காலிங்பெல்லை அடித்தான் . அவனுடைய அம்முவின் தங்கைதான் கதவைத்திறந்தாள் . அவள் மதனைப்பார்த்ததும்
ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தாள் .
‘அச்சோ ! இங்க
எதுக்கு வந்திங்க ? ஏற்கனவே நிறைய பிரச்சன ஓடுது .அப்பா வேற வீட்டுல இருக்காரு . தயவு
செஞ்சு கிளம்புங்க ’ என்று அவள் கூறும்முன்பாக அவளின் தந்தையின் குரல் வந்தது .
‘யாரும்மா ?’
‘யாருனு தெரிலப்பா
. ’ என்றவாறு அவள் கதவைவிட்டு வேகமாக அக்காவின்
அறைக்கு ஓடினாள் . மதனைப்போலவே அவர்களும் நடுத்தட்டு வர்க்கம்தான் என்பது அவர்களின்
வீட்டின் பெயிண்டின்வாயிலாகவே அறியமுடிந்தது .
‘யாருப்பா நீங்க
?’
‘சார் . நா உங்க
கிட்ட கொஞ்சம் பேசனும் .’
‘உள்ள வாங்க ’
என்று அழைத்தவர் அவனை அமர சொன்னார் .
‘சொல்லுப்பா .’
‘சார் . எம்பேரு
மதன் . ’ என்றவுடன் அவருடைய கண்கள் விரிந்தது . அவருடைய முகம் மாறியது நன்றாகவே தெரிந்தது
.
‘நானும் உங்க பொண்ணும்
லவ் பன்றோம் .’ என்று தட்டுத்தடுமாறி கூறிமுடித்தான் .
மையலின் தந்தை
எதுவும் பேசவில்லை . அவளின் தாயோ ஒரு ஓரமாய் நின்று இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்
.
‘அம்மா . இங்க
கொஞ்சம் வாம்மா ’ என்று சத்தமாக யாரையோ அழைத்தார் . அதுவரை கதவருகில் நின்று நடப்பதை
படபடப்புடன் பார்த்துக்கொண்டிருந்த மையல் அவரின் அருகில் வந்து நின்றாள் .
‘இந்த பையன நீ
லவ் பன்றியாமா ?’ என்றார் அழுத்தமாக .
அவள் தொடர்ந்து
மௌனம் சாதித்தாள் .
‘சரி தம்பி . நீங்க
உங்க வீட்டுல இருக்கவங்கள வர சொல்லி பொண்ணு கேளுங்க . எனக்குப்பிடிச்சிருந்தா மேற்கொண்டு
பேசலாம் .’ என்றவாறு அவர் எழுந்து
நின்றார் .
‘சார் . எங்க வீட்ல
….’
‘என்னப்பா ?’
‘எங்க வீட்டுல
ஜாதி மாத்தி கல்யாணம் பன்றத ஏத்துக்க மாட்டாங்க சார் . ’
‘அப்றம் எப்டிப்பா
?என்ன பாத்தா மட்டும் இளிச்சவாயன் மாதிரி தெரியுதா ? சரி நீ வேல செய்ற ?’
‘படிச்சிட்ருக்கேன்
சார் .பி.இ. பைனல் இயர் .’
‘ஓ ! நல்ல படிப்பு
தான் . இவளுக்கும் இன்னும் 6 மாசம் இருக்கு படிப்பு முடிய . அதுக்குள்ள நீ உங்க வீட்ல
பேசி அவங்க மனச மாத்து . அதுக்கப்றம் பாத்துக்கலாம் . ’ என்றவாறு அவனின் பதிலை எதிர்பாராமல்
கிளம்பி உள்ளே சென்றார் . வந்த காரியம் ஓரளவு சக்ஸஸ் ஆனது மதனுக்கு சந்தோஷமாய்த்தானிருந்தது
. எப்படியாவது அவன் வீட்டில் மட்டும் மனமாறம் செய்யவேண்டும் . கண்ணனிடம் நடந்ததைக்கூறிவிட்டு
, ஓரளவு தெளிந்த மனதுடன் தன் வீட்டை அடைந்தான் . அவனுடைய மாமா ஒருமாதிரியாக அவனைப்பார்த்தாலும்
ஏதும் சொல்லவில்லை . காலையில்
வழக்கம்போல பேருந்தில் அவளைச்சந்தித்தான் . சந்தோஷ ரேகை அவனுடைய முகத்தில் மின்ன , அவளைத்தேடினான்
. ஆனால் அவளோ இவனை்ககண்டும் காணதது போல் இருந்தாள் . அவளிடம் சென்று ஆசையாக இவன் பேச
, அவள் பதிலேதும் சொல்லாமல் விரைத்தவாறு நின்றிருந்தாள் . மாலினியும் அதேபோலவே தான்
இருந்தாள் . இவர்களிருவருக்கும் நடக்கும் சண்டையை தீர்த்துவைப்பவளே அமைதியாய் இருந்தாள் . என்ன நடக்கிறதென்று புரியாமல்
இருந்தான் . மாலையிலும் அதேநிலை தான் . ஓரளவு கெஞ்சிப்பார்த்தவன் , கடைசியில் மையலிடம்
கோவப்பட்டு கேட்டான் .
‘ஹே ஏன்டி பேசமாட்டேன்ற
?’
அவ்வளவு நேரம்
அமைதியாய் இருந்தவள் பொறுமையாய் தெளிவாய்க்கூறினாள் .
‘எனக்கு உன்ன பிடிக்கல
. இனிமேல் எங்கிட்ட பேசாத . என்ன தயவு செஞ்சு டிஸ்டர்ப் பண்ணாத .’
இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
நண்பா சாரி தங்களோட தளத்தை ஏன் இணைத்துக்கொள்ள முடியவில்லை
ReplyDeleteதொடர் ஏழையும் படிச்சிட்டு இந்த ஏழை வர்றேன் கருத்துரை போட... மீண்டும் சாரி
Google Friend Connect - ல ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும்ணா . நா இப்போ சோதனை செஞ்சி பார்க்கிறேன் . ஏழையும் படித்துமுடித்துவிட்ட இந்த ஏழையிடம் தங்களின் மேலான கருத்துகளை தெரிவியுங்கள் அண்ணா .
Deleteபயமில்லால் பேசியதும் சுவாரஸ்யம்...
ReplyDeleteமறுபடியும் டுவிஸ்ட்...?
டுவிஸ்ட்டுக்கெல்லாம் முற்றுப்புள்ளி இன்னைக்கு வச்சிடுவேன் அண்ணா ! இன்னையோட கதைய முடிக்கனும் .
DeleteGoogle Friend Connect-யை ஒருமுறை நீக்கி விட்டு, Add a Gadget --> More Gadget சென்று, அங்கு கடைசியில் உள்ள Google Friend Connect-யை சேர்க்கவும்...
ReplyDeleteநீங்க சொன்னமாதிரியே செஞ்சுட்டேன்ணா ! சரியா இப்போ வேலை செய்யுதுனு நினைக்கிறேன் . நன்றிங்ணா !!!
Deleteஅடுத்தது என்ன ,அறியும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள் :)
ReplyDeleteகிளைமேக்ஸ் நெருங்கிட்டோம்ல ! அதான் ணா
Delete