CN’S – MEMENTO - குழப்பங்களின் மறுபெயர்









சென்ற பதிவில் , நோலன் முதல் படம் எடுக்க , எப்படியெல்லாம் பாடுபட்டார் என்பதை பார்த்தோம் .  இப்பதிவில் , நோலனின் அல்டிமேட் படமான , மெமென்டோ , நம்மை எப்படி பாடுபடுத்தியது என்று பார்க்கலாம் .

கண்டிப்பாக மெமென்டோ ஒரு படம் அல்ல . அது ஒரு திரைக்கதையின் பரிணாமம் . ஒரு ஆராய்ச்சி . இப்படத்தினை உருவாக்க , நோலன் செலவிட்டது , இரண்டு வருடங்கள் தான் எனினும் , இப்படத்தினை பற்றிய ஆராய்ச்சிகள் , கிட்டத்திட்ட 14 வருடங்களாக, இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. காரணம் , இதன் திரைக்கதை  .

இதுவரை நாம் பார்த்த படங்கள் அனைத்தும் , ஹீரோவுடனோ , அல்லது படங்களில் வரும் கேரக்டர்களுடனோ தான் அனைத்து இயக்குனர்களும் நம்மை பயணிக்கவைப்பார்கள் . ஆனால் , அதை ஓரங்கட்டிவிட்டு , படம் பார்ப்பவர்களையே ஹீரோவாக்கி அழகுபார்த்திருப்பார் நோலன் .

இந்த படம் கஜினியின் ஒரிஜினல் வெர்சன் என்று யாரேனும் சொன்னால் , மாபெரும் அபத்தமாகிவிடும் . அது உண்மையான சினிமாவை நேசிப்பவர்களை பகளியாடும் வார்த்தை என்றே அர்த்தம் . கஜினி திரைப்படம் ஒரு கமர்சியல் திரைப்படம் . அவ்வளவு தான் . ஆனால் மெமென்டோ , திரைக்கதை நேர்த்தியின் உச்சகட்டம் . நோலனால் மட்டுமல்ல , யாராலும் இனி இதுபோன்றதொரு திரைப்படத்தை தரஇயலாது என்பதே உண்மை . கஜினியில் , இப்படத்தில் வரும் Short Term Memory loss எனும் கான்செப்டும் , காதலியை கொன்றவனை பழிவாங்கவேண்டும் என்ற தமிழ் மசாலாவும் மட்டுமே கையாளப்பட்டிருக்கும் .மற்றபடி , மெமென்டோ என்ற பெயரில் வரும் முதல் M-ற்கு கூட கஜினி திரைப்படத்தினை முன்னிறுத்தமுடியாது.

இப்படத்தின் கதை பற்றிய என்னுடைய அபிப்ராயத்தை கீழே பதிவிடுகிறேன் . ஆனால் , இதுதான் கதை என்பது என் வாதமல்ல .  ஏனெனில் பெரும்புள்ளிகளே , இப்படத்தின் கதை என்னவென்று , இன்னமும் மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள் . ஏன் , இதை எழுதிய நோலன் சகோதரர்களுக்கே இதுதான் கதை என்றுகூற முடியாத அளவிற்கு உள்ளது .

கதை

லென்னி என்பவன் ஒரு இன்சூரன்ஸ் கம்பனியில் வேலை செய்கிறான் . அப்போது அவன் வீட்டில் இரண்டுபேர் புகுந்து அவன் மனைவியை கெடுக்க முயற்சிக்கிறார்கள் . அச்சமயத்தில் ஏற்பட்ட மோதலில் , ஒருவன் இறந்துவிட மற்றொருவன் தப்பிவிடுகிறான் . அந்த தாக்குதலில் , லென்னிக்கு தலையில் அடிபட்டு Short Term Memory loss எனப்படும் நோய் உண்டாகிறது . அதேநேரம் , லென்னியின் மனைவி இறந்துவிடுகிறாள் . தன் மனைவியை கொன்றுவிட்டு தப்பித்த மற்றொருவன் பெயர் John G என்பதை எப்படியோ லென்னி அறிந்துகொள்கிறான் . அவனை பழிவாங்கவேண்டும் என்று முடிவு செய்கிறான் .ஆனால், லென்னியின் மெமரிலாஸ் நோயின் காரணமாக ,  5 நிமிடத்திற்கு ஒருமுறை நடப்பதையெல்லாம் மறந்துவிடுகிறான் . அவனுக்கு , கடைசியாய் இருக்கும் ஞாபகங்கள் என்று பார்த்தால் , தன் மனைவியின் ஞாபகமும் அவன் வேலைசெய்தபோது அறிமுகமான சேம்மி ஜாக்கின்ஸ் என்பவனின் நினைவுகளும்தான் . SAMMY –க்கு , லென்னியைப்போலவே , இதே பிரச்சனை இருந்திருக்கிறது . அதனால் , தன் பிரச்சினையைப்பற்றியும் , தன் நிலையினைப்பற்றியும்  புரிந்துகொள்ள “Remember Sammy Jankins”என்று  தன் கையில் பச்சைக்குத்திகொள்கிறான் . Sammy-க்கு இந்த பிரச்சனை இருந்தபோது, அவன் மனைவி இன்சூரன்சிற்கு விண்ணப்பிக்கிறாள் . . ஆனால் , மனநோய்களுக்கு இன்சூரன்ஸ் கொடுக்கமுடியாது என்று லென்னியின் கம்பனி மறுத்துவிடுகிறது .Sammy-க்கு வந்துள்ள நோயை பற்றிய ஆராய , தான் அனுப்பபட்டதாக லென்னி, கூறுகிறான் . ஒரு கட்டத்தில் ,Sammy-ன் மனைவி , தன் கணவனுக்கு  வந்துள்ள நோய் உண்மைதானா என்று அறிய , அவளுக்கு இன்சுலின் ஊசி போடுமாறு Sammy-யிடம் வேண்டுகிறாள் . ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு ஒருமுறையும் அவள் போடசொல்ல , Sammy-யும் ஊசி போடுகிறான் . ஒரு கட்டத்தில் , அவள் மரணமடைந்துவிடுகிறாள் . Sammy – மனநல மருத்துவமனைக்கு சென்றுவிடுகிறான் .  அதேநேரம் லென்னி , தன் மனைவியை கொன்றவர்களை பழிவாங்கவேண்டும் என்பதற்காக ‘my wife Was raped and murdered’ என்றும் , “John G” என்றும் பச்சை குத்திக்கொள்கிறான் . லென்னிக்கு , டெடி என்பவன் ,  தான் ஒரு போலிஸ் என்று அறிமுகமாகிறான் . டெடி , லென்னிக்கு உதவுவதாகவும் , அந்த John Gயை கண்டுபிடித்து தருவதாகவும் கூறி , லென்னியிடம் கூறுகிறான் . அவனை அவ்வாறு கூட்டிச்சென்று ஒரு போதைப்பொருள் விற்பவனான , ஜிம்மியை கொலை செய்யவைக்கிறான் . லென்னி , ஜிம்மிதான் குற்றவாளி என்பதனை ஏற்கமறுக்கிறான் . டெடி , தன் பிரச்சனையை அவனுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான் என்று உணர்கிறான் . மேலும் , உண்மையான John Gயை லென்னி கொன்றுவிட்டதாகவும் , டெடி சொல்கிறான் . குழப்பத்தில் இருக்கும் லென்னி , தன் மீதமுள்ள வாழ்க்கையை , இவ்வாறு யாரையாவது தேடியபடியே தொடரவேண்டும் , இல்லையெனில் தினம் தினம் நடந்தது என்ன என்று தெரியாமல் குழம்பித்தவிக்கவேண்டும் என்று உணர்கிறான் . அதனால் , தன் அடுத்த தேடுதலுக்கு பிளான் செய்கிறான் . டெடி தன்னை ஏமாற்றியதாக தெரிந்ததாலும் , அவனின் உண்மையான  பெயர் John Gammel என்பதாலும் , அவனையே தன்னுடைய அடுத்த டார்கெட்டாக முடிவெடுத்துக்கொள்கிறான் .டெடியின் கார் நம்பரை தன் உடம்பில் பச்சைக்குத்திக்கொள்கிறான் . மேலும் , தான் ஏற்கனவே கொன்ற ஜிம்மியின் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து செல்கிறான் .ஜிம்மியின் காரில் இருக்கும் ஒரு பேப்பரில் ஒரு பாரின் பெயர் இருக்க , அங்கு செல்கிறான் . அங்கு நடாலி எனும் பெண்ணை சந்தித்து , தன் பிரச்சனையை கூறுகிறான் . அதேநேரம் , நடாலி தன் காதலனான ஜிம்மியின் கார் , இவனுக்கு எப்படி கிடைத்தது என்று புரியாமல் விழிக்கிறாள் . ஒருசமயத்தில் நடாலி , தன்னை ஒருவன் அடித்துவிட்டதாக லென்னியிடம் சொல்ல , லென்னி அவளைத்தாக்கியதாக கூறியவனை, தாக்குகிறான்  . அதற்கு பிரதியுபகாரமாக , லென்னியிடம் இருக்கும் கார் நம்பரின் ஓனர் யார் என்று நடாலி விவரம் கொடுக்கிறாள் . லென்னி , அந்த நம்பருக்கு உரியவன் டெடி என்று கண்டுகொண்டு அவனை போட்டுத்தள்ளுகிறான் .

மேலே கூறியாவறு படம் எடுத்திருந்தால் , இது ஒரு அட்டுப்படமாகியிருக்கும் . ஆனால் , நான்-லீனியர் , Reverse Chronological என்று ஏதேதோ செய்து , இப்படத்தை ஒரு தாறுமாறான படமாக மாற்றியிருப்பார் நோலன் . இது ஒரு திரைக்கதை மாயஜாலம் என்றே கூறலாம் . ஒரு பார்வையாளனை , ஹீரோவாக மாற்ற வைத்த ஒரே படம் எனக்குத்தெரிந்து , இதுதான் .




இப்படத்தின் மொத்த காட்சிகள் 44 .  இதில் 22 காட்சிகள் கருப்பு-வெள்ளையிலும் , 22 காட்சிகள் கலரிலும் எடுக்கப்பட்டிருக்கும் . அதாவது இப்படி எடுத்துக்கொள்ளுங்கள் .1,2,3,4, ….44 . இதுதான் லீனியர் சினிமாவில் இருக்கும் காட்சியமைப்புகள் . ஆனால் , இத்திரைப்படத்தில் , 44 ,1 ,43 , 2 , 42 ,3 …… 21 , 22 என்று , படத்தின் நடுபகுதியில் (தமிழ்படங்கள்ல சொல்லனும்னா , இன்டர்வல் காட்சியில்) படத்தின் கிளைமேக்சாக முடியும் . அது எப்படி என்று குழம்புபவர்கள் , இப்படத்தினை பார்த்தீர்கள் என்றால் தெரியும் .


இந்த முழுக்கதையும் , லென்னி நம்மிடம் கூறுவதுபோல் இருக்கும் . இதுல என்னய்யா உனக்கு குழப்பம்னு கேட்கரவங்க , அடுத்த பேராவுக்கு வாங்க சார் . படம் பார்க்காதவர்கள் , கீழே சிவப்பு கலரில் உள்ள பத்திகளை , ஸ்கிப் செய்துவிடுங்கள் .

டவுட் நம்பர் – 1

ஜிம்மியை லென்னி கொன்றதும் , தன்னை ஏமாற்றியதாக கூறி டெடியிடம் ,லென்னி வாதாடுவான் . அப்போது  டெடி , ‘நீ ஏற்கனவே உண்மையான John G-யை கொன்றுவிட்டாய் . இதோ பார் , கொன்றபின் நீ மகிழ்ச்சியாக இருக்கும் போட்டோ ! இது நான் எடுத்தது ’ என்று ஒரு போட்டோவை காட்டுவான் . மேலும் ‘நீ அவன் இறந்ததை மறந்துவிட்டாய் . அவனைக்கொல்லவேண்டும் என்று அலைகின்றாய் . அதனால் , போதைமருந்து கடத்தும் இவனை கொல்லவைத்தேன்’ என்று டெடி கூறுவான் . மேலும் இதே டெடிதான் கடைசியில் , ‘Sammy என்று யாரும் இல்லை .நீதான் Sammy . நீயேதான் உன் மனைவியை , இன்சுலின் ஊசிபோட்டு கொன்றுவிட்டாய்’ எனவும் கூறுவான் .அப்படியாயின் , லென்னி உண்மையில் யார் ?

டவுட் நம்பர் -2
டெடி , போலிசாக இருக்கவேண்டும் என்ற அவசியம் ஏன் ? அப்படி அவன் போலிசாக இருக்கும்பட்சத்தில் , ஏன்  போதைபொருள் வியாபாரியான ஜிம்மியை கொலை செய்ய லென்னியை தேர்ந்தெடுக்கவேண்டும் . சரி , லென்னிக்கு உதவும் நல்ல போலிசாக இருந்திருப்பின் ,ஜம்மிக்கு முன்பு , லென்னி ஒருவனை கொல்ல உதவியாய் ஏனிருக்கவேண்டும் ? அப்படி உண்மையான John G –யினை கொல்ல , டெடி உதவியிருந்தாலும் எதற்காக , John G என்பவன் கிடையாது . நீயேதான் இன்சுலின் ஊசி போட்டு கொன்றாய் என்று கூறவேண்டும் ? ! ஒருவேளை , டெடி கூறுவதுபோல் ,லென்னி தான் உண்மையான Sammy என்றுவைத்துக்கொண்டால் மாத்திரமே , முதல் கொலையும் இரண்டாவதாக செய்யப்பட்ட ஜிம்மியின் கொலையும் ,டெடியின் தூண்டுதலின்பேரில் லென்னி செய்திருக்கமுடியும் .அதேபோல் , ஜிம்மி , லென்னியை பார்த்தவுடன் , மறதிமனிதா என்று அழைப்பான் .அப்படியாயின் , ஜிம்மிக்கும் , லென்னிக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்திருக்கவேண்டும் . அப்படி அறிமுகம் இருப்பின் , எப்படி அவர்கள் அறிமுகமாயிருக்கமுடியும் ? டெடியின் உதவியின்பேரில்தானே.

டவுட் நம்பர் – 3

சரி! லென்னி தான் Sammy என்று வைத்துக்கொண்டாலும் , அவன் மனைவி கொல்லப்பட்டாள் எனும் காட்டும்போது , அவளை ஆசை படத்தில் வருவது போன்று பாலித்தீன் கவர்களை மூடி கொலை செய்யப்பட்டது போன்று காட்டுவது ஏன் ? ஒருவேளை  இவையணைத்தும் , லென்னியின் கற்பனை என்று நினைத்தால் , போலிஸ் இன்வெஸ்டிகேசனில் , லென்னியின் மனைவி கொலைக்கு காரணமானவன் John G என்று எதற்காக போட்டிருக்கவேண்டும் ?


இந்த சந்தேகங்களுக்கு , 4 தடவை படத்தைப்பார்த்தபின்  , இவ்வாறான விடை கிடைத்தது .


லென்னி, ஜிம்மி, டெடி மூவரும் ஏற்கனவே பழகியுள்ளார்கள் . டெடி , உண்மையான போலிஸ் கிடையாது .தங்களின் போதைபொருள் தொழிலுக்கு , லென்னியை உபயோகித்திருக்கிறார்கள் . அச்சமயத்தில்  டெடி , ஜிம்மியிடம் இருக்கும் பணத்தை கையாட , லென்னியை பயன்படுத்திகொள்கிறான் . ஜிம்மியின் காதலியான நடாலிக்கு , டெடியைப்பற்றியும் , லென்னியைப்பற்றியும் ஏற்கனவே தெரிந்திருக்கவேண்டும் . ஆனால் , அவள்  பார்த்திருக்கமுடியாது. தன் காதலன் ஜிம்மியை , டெடி தான் அழைத்துச்சென்றிருக்கிறான் . எனவே , அவள் டெடி பற்றிய உண்மைகளை , லென்னியிடம் கொடுக்கிறாள் . மேலும் ஒரிஜினல் John G என்பது டெடியாகத்தான் இருக்கவேண்டும் .இதில் ஓரளவு ஏற்றுக்கொண்டாலும் , முழுமையாக ஏற்கமுடியாது .

இதுதவிர , ஒரு பார்வையாளனாய் , பல சந்தேகங்கள் நமக்குள் விழையும் . அந்த சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை ஒருவாறு ஓரங்கட்டிவிட்டு , படத்தை பார்வையாளனாய் இல்லாமல் , ஹீரோவாக நம்மை நினைத்துக்கொண்டால் , நமக்கு புரியும் .  ஏனெனில் , நோலன் இந்தபடத்தில் நம்மைத்தான் ஹீரோவாக உட்காரவைத்திருப்பார் . அந்த மெமரிலாஸ் பிரச்சனை நமக்குத்தான் வரும் . நாம் அவனிடத்தில் இருக்கும்போது , நமக்கு என்ன தோனுகிறதோ , அதுதான் இப்படத்தின் முடிவு . இதற்காக , ரொம்ப மெனக்கெட்டு குழம்பிப்போகவேண்டாம் . உங்கள் மனதுக்கு என்ன தோனுகின்றதோ , அதுதான் படத்தின் முடிவு .


அம்மாடியோவ் ! சின்னதா எழுதனும்னு நினைச்சிதான் ஸ்டார்ட் பண்ணேன் . இது என்னடானா , படத்தோட திரைக்கதையவிட அதிகமா வந்துடும்போல இருக்கு . சரி அதை விடுங்கள் . கீழே , மெமன்டோ படத்தின் திரைக்கதை  மற்றும் இப்படத்திற்கு மூலக்கருவான , ஜொனதன் நோலனின் ‘மெமன்டோ மோரி’ சிறுகதையையும் PDF வடிவில் கொடுத்துள்ளேன் .நேரமிருப்பின் டவுன்லோடி படித்துக்கொள்ளலாம் .



இன்னும் உங்களுக்கு  அதிக குழப்பம் வேண்டுமெனில் , கீழே உள்ள லிங்குகளை கிளிக்கி , மண்டையை குழப்பிக்கொள்ளுங்கள் .எங்கள் சேலத்துத்தங்கம் ‘அண்ணன் ஜெய்’ , இதைப்பற்றிய அற்புத பதிவுகளை வெளியிட்டிருக்கிறார் .



அடுத்த பதிவும் மெமென்டோவை பற்றியதுதான் என்று உங்களை மேலும் கடுப்பேற்றி விடைபெறுகிறேன் .




தொடர்புடைய இடுகைகள் .






Comments

  1. சிறந்த திறனாய்வுப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. கலர்ல வர்ரத ரிவர்ஸ் ல பார்த்தேன். கொஞ்சம் புரிஞ்சமாதிரி இருந்தது :(

    ReplyDelete
    Replies
    1. அது எப்படி பார்த்தாலும் குழப்பிட்டேதாங்க இருக்கும் . நாமளே சட்டுபுட்டுனு ஒரு முடிவ எடுத்துட்டு எஸ்கேப் ஆகிடனும் .

      Delete
  3. ---இந்த படம் கஜினியின் ஒரிஜினல் வெர்சன் என்று யாரேனும் சொன்னால் , மாபெரும் அபத்தமாகிவிடும் . அது உண்மையான சினிமாவை நேசிப்பவர்களை பகளியாடும் வார்த்தை என்றே அர்த்தம் . கஜினி திரைப்படம் ஒரு கமர்சியல் திரைப்படம் . அவ்வளவு தான் . ஆனால் மெமென்டோ , திரைக்கதை நேர்த்தியின் உச்சகட்டம் . நோலனால் மட்டுமல்ல , யாராலும் இனி இதுபோன்றதொரு திரைப்படத்தை தரஇயலாது என்பதே உண்மை . கஜினியில் , இப்படத்தில் வரும் Short Term Memory loss எனும் கான்செப்டும் , காதலியை கொன்றவனை பழிவாங்கவேண்டும் என்ற தமிழ் மசாலாவும் மட்டுமே கையாளப்பட்டிருக்கும் .மற்றபடி , மெமென்டோ என்ற பெயரில் வரும் முதல் M-ற்கு கூட கஜினி திரைப்படத்தினை முன்னிறுத்தமுடியாது.----

    உண்மை. படத்தின் கதை நோலனுக்கு மட்டுமே புரிந்திருக்கும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்ணா ! ஆனால் அவரே கூறியது இதுதான் . ஹீரோவின் மனநிலையை காட்டவேண்டும் . அதை ஒன்றை குறிக்கோளாக வைத்துக்கொண்டு தன்னுடைய நான்-லீனியரில் விளாசிக்கட்டியிருப்பார் நோலன்

      Delete
  4. அருமையான பகிர்வு!!! அப்படியே TRIANGLE திரைப்படத்தையும் ஒரு அலசல் செய்தல் நன்றாக இருக்கும்.. 16 முறை பார்த்தும் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை

    ReplyDelete
    Replies
    1. இந்த வாரத்தில் , முடிந்தால் அதைப்பற்றி எழுதுகிறேன் தல !!

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை