பயணம் @ டைம்மெஷின் - 12
அரவு (எ) பாம்பு
முந்தைய பதிவுகள்
|
அந்த ஓடையின் அருகில்
காவலுக்கிருந்த வீரர்கள் இருவரும் ஒருவரையொருவரின் முகத்தைப்பார்த்தனர் . அந்த சத்தம்
, கானகத்திலிருந்துதான் வந்தது . மெல்ல நெருங்க
நெருங்க அது ஒரு குதிரையின் காலடிச்சத்தம் என்பதை உணர்ந்ததும் தங்களின் வேல்களை சத்தம்
வந்த திசையை நோக்கி செலுத்த தயாராயிருந்தனர் . தூரத்தில் இருந்த அம்பெய்யும் வீரர்களும்
தங்களின் வில்களைத்தயாராய் வைத்திருந்தனர் . அம்புகள் வில்லிலிருந்து பாயத் தயராய் இருந்த நேரத்தில் , அந்த
வில்லெறியத்தயாராய் இருந்த வீரர்களின் வயிற்றைக்கிழித்துக்கொண்டு இருவேல்கள் ஒரேநேரத்தில்
இறங்கின . இறங்கியவேல்களின் முனை தரையில் பதிந்துகொண்டிருக்க , கைப்படி நோக்கி இறந்தவீரர்களின்
உடல் சாய்ந்துகொண்டிருந்தது . அவர்களின் பின்னால் இருந்து குதிரையில் வெளிப்பட்ட வளவன்
, வேகமாக குதிரையை ஓட்டியபடியே அவர்களின் அம்புகளையும் வில்லையும் எடுத்தான் . அதேநேரத்தில்
வனத்தில் இருந்து வெளிப்பட்ட குதிரை , சந்துருவையும் பாலாவையும் நோக்கி ஓடியது .
சந்துருவையும்
பாலாவையும் தலைமைக்காவலர் அழைத்துச்சென்றபோது , தனக்காக உதவியவர்களை ஆபத்தில் சிக்கவிட்டுச்செல்வது
அபத்தமான ஒன்று என்றெண்ணிய வளவன் , தன் கழுத்தில் வேலையும் நெஞ்சில் வாளையும் வைத்திருக்கும்
வீரர்களிடமிருந்து தான் தப்பித்தால் மாத்திரமே அவர்களிருவரையும் காப்பாற்ற முடியும்
என்பதை உணர்ந்தான் . அவர்கள் அழைத்துச்செல்லப்பட்ட சில நிமிடங்கள் கழித்து , தனக்கு
தண்ணீர் தேவை என கூறினான் . ஒருவீரன் மிகக்கவனமாய் தண்ணீர் எடுத்துவர சென்றான் . அவன்
தண்ணீர் கொண்டுவந்ததும் வாங்கி குடித்துமுடித்துவிட்டு அவன்கையில் சொம்பை மீண்டும்
கொடுத்தான் . அவன் திரும்பச்செல்ல திரும்பும்போது படக்கென்று குனிந்த வளவன் , தனக்குப்பின்னால்
வேல்களைப்பிடித்துக்கொண்டிருந்து இரு வீரர்களின் கால்களை தட்டிவிட்டான் . நிலை தடுமாறிய
அவ்விரு வீரர்களும் முன்னால் நின்றுகொண்டிருந்த வீரர்களின் நெஞ்சில் வேலை பாய்ச்சினர்
. வேல்குத்தப்பட்டவர்களின் கைகளிலிருந்த வாள்களை கைப்பற்றிய வளவன் ,மிச்சமிருந்த வீரர்களின் நெஞ்சில்
துளிதாமதமில்லால் வாள்களை இறக்கினான் . பின் மண்டபத்தின் வெளியே நின்றுகொண்டிருந்த
வீரர்களின் குதிரைகளில் ஒன்றில் ஏறி மற்றொன்றை கையில் இழுத்துக்கொண்டு சிறைச்சாலையின்
அருகில் இருக்கும் வனப்பகுதிக்குச்சென்றான் . சந்துருவையும் பாலாவையும் அழைத்துவரும்
காட்சியைக்கண்டதும் , குதிரையின் காதில் ஏதோ சொல்லிவிட்டு , குதிரையைத்தட்டிவிட்டான்
. அந்த ஆளில்லாத குதிரை , தன்மீது பயணிக்கவேண்டிய சந்துருவையும் பாலாவையும் நோக்கி
மெல்ல ஓடிவந்தது . பின் ஓடையைத்தாண்டியது . அதற்குள் மிகவேகமாய் வனத்தின் வழி பயணித்து
சிறைச்சாலையின் முன் வாயிலில் காவலுக்கு நின்ற இருவீரர்களையும் நொடிப்பொழுதில் தலையை
சீவினான் . உள்ளே , அம்புகளை வைத்துக்கொண்டு நிற்கும் வீரர்களைக்கண்டதும் , வெளியில்
இறந்த வீரர்களின் வேல்களை எடுத்து அவர்கள் மீது வீசினான் . வீசியவுடன் வேகவேகமாய் உள்ளே
நுழைந்தான் .
சந்துருவும் பாலாவும்
ஒன்றும் புரியாமல் ஓடையைத்தாண்டும் குதிரையைக்காணும் அந்நேரத்தில் , தனக்கு எதிரே நின்ற
இரு வீரர்களும் இறந்துவிழுவதையும் , அதைத்தொடர்ந்து வளவன் உள்ளே நுழைவதையும் கவனித்தனர்
. உள்ளே நுழைந்த வளவன் அம்புகளை துளியும் குறிதவறாமல் வீசவும் , உடனுக்குடனே தனக்கருகில்
வரும் வீரர்களை வெட்டிச்சாய்ப்பதுமாய் இருந்தான் . இவர்கள் இருவரையும் பார்த்து அவன்
‘குதிரையில் ஏறிக்கொள்ளுங்கள் ’ என சத்தமிட்டதைக்கேட்டதுமே அவர்கள் குதிரையைத்தேடினர்
. அதற்குள் அக்குதிரை அவர்கள் இருவரின் அருகிலும் வந்து நின்றது . எப்படியோ அடித்துபிடித்துக்குதிரையில்
ஏறிய இருவரும் அறைகுறையாய் குதிரையை மிரட்ட , அதுவும் கதவு நோக்கி ஓடியது . அதற்குள்
, சிறைக்குள்ளிருந்து சில வீரர்கள் வில் , அம்புடன் வெளிப்பட வளவன் அதிலிருந்து தப்பித்துவிட்டு
, வேகவேகமாய் சந்துருவையும் பாலாவையும் தன்பின்னால் வருமாறு கூறிவிட்டு குதிரையை காட்டினுள்
செலுத்தினான் . சந்துருவும் ஏற்கனவே ஓட்டிய குதிரைவண்டி அனுபவத்தில் அக்குதிரையை செலுத்திக்கொண்டிருந்தான்
. வளவன் முன்னால் செல்ல , அவனைப்பின் தொடர்ந்தவாறே இவர்கள் இருவரும் ஒரே குதிரையில்
சென்றனர் . அவர்களை சிறிதுதூரம் வரை துரத்திவந்த வீரர்களும் சிலநாழிகைக்குள் தங்களின்
பின்தொடர்தலை விட்டு பின்வாங்கினர் . சிறிதுநேரம்
பயணித்த வளவன் ஓரிடத்தில் நிறுத்த , சந்துருவும் நிறுத்தினான் .
‘யாருக்கும் ஒன்றும்
ஆகவில்லைதானே ?’
‘இல்ல வளவா . ஒன்னும்
ஆகல . எங்கள காப்பத்தனதுக்கு தேங்க்ஸ் . ஊப்ஸ் சாரி , நன்றி .’ என்றான் சந்துரு .
‘பரவாயில்லை .
பாலா அண்ணா ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறார்
?’
என்ற வளவனின் கூற்றைக்கேட்டுவிட்டு
பின் திரும்பி பார்த்தான் சந்துரு . பாலா ஒருவாறாய் நிலையில்லாமல் ஆடிக்கொண்டிருந்தான்
.
‘டேய் பாலா ! என்னடா
ஆச்சு ? டேய் கண்முழிச்சுப்பாருடா ’ என்ற சந்துருவுன் கேள்விகளுக்கு பதில் கூறும் நிலையில்
பாலா இல்லை . அவன் உடலெங்கும் நீலநிறம் பரவ
ஆரம்பித்திருந்தது . அவன் முதுகை கிழித்துக்கொண்டு ஒரு அம்பு இருந்தது .
‘விடம் . அண்ணா
, கிளம்புங்கள் . விரைவாய் அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டும் . தஞ்சைநோக்கி சென்றால்
நாம் மாட்டிக்கொள்வோம் .அதனால் கருவூர்க்குச்செல்லலாம் .’
‘இல்ல வளவா .பாலாவ
நீ ஏத்திக்கோ . எனக்கு அவ்வளவா குதிர ஓட்டத்தெரியாது . நீ முன்னாடி போய்கிட்டே இரு
.நா பின்னாடி வரேன் .’ என்றான் சந்துரு . அவனின் குரலில் பதற்றத்துடன் நடுக்கமும் தெரிந்தது
.எப்படியாவது பாலாவை காப்பாற்றியாகவேண்டும் . ஆனால் , எப்படி அவனுக்கு இந்நிலைமை ஏற்பட்டிருக்கும்
என்று குழம்பினான் . ஒருவேளை அந்த அம்புகளில் விஷம் தடவியிருக்கலாமோ என்றெண்ணினான்
. அடச்சே , இவனை முதலில் குதிரையில் அமரவைத்துவிட்டு பின் தான் அமர்ந்திருந்தால் இப்படி
ஒரு இக்கட்டான நிலை எனக்கு வந்திருக்காதே என்றெண்ணி ஆறாத்துயருற்றான் .
வளவன் தன்னுடைய
குதிரையில் இருந்து இறங்கி , பாலாவை தூக்கி அமரவைத்துக்கொண்டு குதிரையைத்தட்டி விட்டான்
. பின்னாள் சந்துரு முடிந்தவரை அவர்களைத்தொடர்து சென்றான் . பசி , வலி , அலுப்பு இதைக்காட்டிலும்
பாலா பிழைத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வே அவனுள் மிகுந்து காணப்பட்டது . டைம்மெஷினை
சரிசெய்ய அவன் தேவையெனினும் , டைம்மெஷின் கூட வேண்டாம் , பாலா ஒருவனே போதும் என்ற நிலையில்
தான் அவனிருந்தான் . காரணம் , அவனுடன் வாழும் ஒரே 21 –ம் நூற்றாண்டு உயிரினம் பாலா
மாத்திரம் தான் . வளவனுக்கோ , தன்னைக்காப்பாற்ற உதவியவர்கள் தன்னால் இறக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளார்களே
என்ற மனவருத்தத்திலே தன் குதிரையை மின்னல் வேகத்தில் காற்றைக்கிழித்துக்கொண்டு அந்த
வனத்தில் செலுத்திக்கொண்டிருந்தான் . தன்னை தம்பி என்று முழுமனதுடன் அழைத்த இருவரில்
ஒருவர் தன்னுயிரை மெல்ல மெல்ல இழந்துவருகிறார் என்பதை அவன் மூளூ அவனுக்குத்தெரிவித்துக்கொண்டிருந்தது
. எவ்வாறாயினும் கருவூர் சென்றுவிட்டால் , பாலாவுக்குத்தேவையான சிகிச்சை செய்துவிடலாம்
. இன்னும் ஒரு மணிநேரம் கிழக்குநோக்கி பயணித்தால் , கருவூரை அடைந்துவிடலாம் . அதானல்
முடிந்தவரை வேகமாக தனது குதிரையை செலுத்தினான் .
இரண்டுமணிநேர பயணத்திற்குப்பின்
, மூவரும் கருவூரை அடைந்தனர் .
‘அண்ணா ! விரைவாய்
நீங்கள் சென்று மருத்துவசாலை எங்கிருக்கிறது என்று விசாரித்துவிட்டு வாருங்கள் .’ என்ற
வளவனின் பேச்சிற்கேற்ப சந்துரு ஊருக்குள் சென்று விசாரிக்கலானான் . அவனுடைய முயற்சியின் பேரில் , ஒரு பாட்டியின் வீட்டிற்கு
மூவரும் சென்றனர் . அவ்வீட்டை உற்றுக்காணும்போது
ஓரளவு வசதி படைத்த குடும்பத்தவர்களாய் தானிருக்க வேண்டும் . வீட்டினுள் இருந்த ஒரு
படுக்கையில் பாலாவை படுக்கவைத்த பாட்டி , நாடிப்பிடித்தும் கண்களைத்திறந்தும் பார்த்தாள் .முதுகைக்கிழித்து
தைத்திருந்த அம்பினை உருவியவள் , அதனையும் சிறிது ஆராய்ந்து பார்த்தாள் . பின் பாலாவின்
கையில் இருந்த கிறல் போன்ற புள்ளிகளையும் பார்த்தாள் . உடனே வேகவேகமாய் கொல்லைப்புறம்
நோக்கி சென்றவள் , கையில் சில இலைகள் மற்றும் வேப்பந்தலைகளுடன் திரும்பினாள் . பின்
பாலாவின் கையை சந்துருவைப்பிடிக்க சொல்லிவிட்டு , ஏதோ பாடலை உச்சரித்த வண்ணம் வேப்பந்தலையினால்
மெல்ல மெல்ல தேய்த்தாள் . அவனுடைய கையில் இருந்து
பிசபிசுவென ஒரு திரவம் வெளிவந்தது . பின் அவன் கையில் ஒரு இலையை எடுத்து பிழிந்தாள்
. பின் அவனுடைய முதுகில் இருந்த காயத்திற்கு , அம்மிக்கல்லால் அரைத்த பச்சிலைகளைக்கொண்டு
காயத்திற்கு சிகிச்சை அளித்தாள் .
‘ஒன்றுமில்லையப்பா
! அரவு தீண்டியதனால் ஏற்பட்ட விடம் . அதுதான் இவரை இந்நிலைக்குட்படுத்தியுள்ளது .
அம்பின் காயம் ஆழமாய் உள்ளதால் , காயம்
ஆற சிறிதுநாள் பிடிக்கலாம் . நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ?’
‘நான் தஞ்சையிலிருந்து
வருகிறேன் தாயே ! கானகத்தின் வழியே வரும்போது , வேடன் எங்களை கவனிக்காது எய்த அம்பால்
இவர் நிலைகுனிந்தார் .ஆனால் அரவு ?’ என்று வினவினான் வளவன் .
‘ஆரண்யத்தினூடே
வரும்போது இவை தவிர்க்கமுடியாதவை . நல்லவேளை , பலம் குன்றிய பாம்பின் தாக்குதலால் தப்பித்தார்
. சரி . இங்கே கருவூரில் எங்கே தங்கப்போகிறீர்கள் ?’
‘ஏதாவது
சத்திரம் அல்லது சாவடியில் தான் தாயே தங்கவேண்டும் .’
‘பரவாயில்லை
. உங்களுக்கு ஆட்சேபமில்லையெனில் இந்த கிழத்தின் வீட்டிலேயே தங்கிக்கொள்ளுங்கள் .’
‘பரவாயில்லைத்தாயே
! நாங்கள் வெளியிலேயே தங்கிக்கொள்கிறோம் .இவர் மாத்திரம் இங்கே இருக்கட்டும் . இவர்
எப்போது கண்விழிப்பார் ?’
‘கண்விழிக்க
இன்னும் இரண்டு நாழிகை ஆகும் .’ என்றாள் .
இவர்கள்
இருவரின் பேச்சையும் கவனித்துக்கொண்டிருந்த சந்துருவுக்கு , பாலாவுக்கு குணமாகிவிடும்
என்பதை அறிந்தவுடன் ஒரு பெருமூச்சே விட்டான் . ஆனால் , அந்த பாட்டியை எங்கோ பார்த்தமாதிரிய
இருக்கின்றதே என்று யோசித்தான் . எவ்வளவுதான் யோசித்தாலும் , அவனுக்கு அவள் பிடிபடவேயில்லை
. பின் பாலாவை மாத்திரம் அங்கேயே விட்டு விட்டு , வளவனும் சந்துருவும் தங்குவதற்கு
ஒரு சத்திரம் பார்க்க சென்றனர் . ஓரிடத்தில் நின்ற வளவன் , சந்துருவிடம் அங்கேயே இருக்குமாறு
கூறிவிட்டு ஒரு வீட்டினுள்ளே சென்றான் . சிறிது நேரத்திற்குப்பின் வேறொரு ஆள் சந்துருவிடம்
வந்தான் .
‘போகலாமா
?’ என்றான் அந்த புதியவன் .
‘எங்க
?’
‘அடையாளம்
தெரியவில்லையா என்னை ? நான் தான் வளவன் .’
‘வளவா
! என்ன வேஷம் இது ? எதுக்கு வேஷம் ?’
‘அதை
இரவு மண்டபத்தில் கூறுகிறேன் . வாருங்கள் செல்லலாம் ‘ என்று சொல்லிவிட்டு வளவன் முன்னோக்கி நடக்கலானான். சந்துருவோ ஒன்றும்
புரியாமல் விழித்தவாறே , வளவனை பின்தொடர்ந்து சென்றான் .
- தொடரும்
பயணம் @ டைம்மெஷின்
அத்தியாயம்
– 4
பகுதி -4
அரவு (எ) பாம்பு
©
Megneash K
Thirumurugan @ Myfreecopyrights.com
பார்ப்பதெல்லாம் ஆங்கிலப் படம் .எழுதுவது ராஜாக்கள் கதை ..உங்கள் பெயரைப் போலவே வினோதமான பொருத்தம் !
ReplyDeleteசரி ,அந்த மருத்துவக் கிழவி யாரென்று சொல்லுங்கள் :)
அது வெள்ளிக்கிழமையன்று தெரிந்துவிடும் அண்ணா !
Deleteதிரைப்படங்கள் பொழுதுபோக்கு .
வரலாற்றுக்கதைகள் , சயின்ஸ் பிக்சன் , பேன்டஸி போன்றவையெல்லாம் எனக்கு மிக பிடித்தமானவைகள் அண்ணா !!
வருகைக்கு நன்றி அண்ணா !!!
:-)
இன்று ஒரே நாளில் பயணம் @ டைம் மிஷின்-1 முதல் பயணம் @ டைம்மெஷின் - 12 வரை வாசித்தேன். மிகவும் அருமை. தொடர்ச்சி எப்பொழுது எழுதப் போகிறீர்கள்?
ReplyDeleteதொடர்ச்சி கொஞ்சம் லேட் ஆகும் தல . இந்த பயணம் சீரிஸ ரீபூட் பண்ணலாம்னு இருக்கேன் . அதுனால தான் எழுதறத நிறுத்தி வைச்சுட்டேன் . கூடிய சீக்கிரம் முழுசா எழுதி முடிச்சிட்டு பதிவு அப்டேட் பண்ணிடறேன் தல . உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி தல .
Delete