காதல் காதல் – தொடர்கதை - 2
முதல் பாகத்தைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
ஓய் குயில்களே
! உங்களுக்கு போட்டியாக ஒருத்தி வந்துவிட்டாள் என்று உரக்கக்கூற நினைத்த மதனுக்கு ‘அண்ணா’ என்ற வார்த்தை நாராசமாய் அவன் காதில் ஒலித்துவிட்டது
. இவ்வளவு அழகான நாளில் இப்படியொரு கொடூரமான வார்த்தையைக்கேட்க கூடும் என்று அவன் அறிந்திருந்தால்
நிச்சயம் மாலைவேளையில் அந்த பேருந்தினுள் ஏறியிருக்கவேமாட்டான் . அவனுக்குள் சுர்ரென்று
கோவம் உச்சந்தலைக்குள் ஏறியிருந்தது .
‘அண்ணா ப்ளீஸ்
. தள்ளி நில்லுங்க’ என்று மறுபடியும் அவள் கூறியபோது வெடித்தே சிதறிவிட்டான் .
‘யாருடீ உனக்கு
அண்ணன் ? அப்படியே பளார்னு விட்டன்னு வச்சிக்கோ , அவ்ளோதான் .’
‘நா என்ன தப்பு
பண்ணேன் . எதுக்கு திட்ரிங்க ’ என்று கண்கலங்கியவாறே அவள் கேட்டாள் . பாவம் , அந்த
18 வயது மங்கைக்கு கல்லூரியின் முதல்நாளன்று யாரென்றே தெரியாத ஒருவனிடம் திட்டு வாங்கியது
அதிர்ச்சியையும் சிறிது கலக்கத்தையும் உண்டாக்கிவிட்டது .
‘நீ ஒரு வெங்காயமும்
பண்ணல . எல்லாம் என் தப்பு தான் . இன்னொரு தடவ அண்ணானு சொன்ன , மூஞ்சு மொவரையெல்லாம்
பேத்துடுவேன் .’ என்றவாறே திரும்பி வேகவேகமாய் எதிரில் இருக்கும் கூட்டத்தை விலக்கியவாறே
படியை நோக்கி கிளம்பினான் மதன் . மதனின் நிலையைக்கண்டு அங்கிருந்த போட்டி கோஸ்டியினருக்கு
உள்ளுக்குள் ஆனந்தம் ஏற்பட , இன்னும் சிலருக்கு நாம தப்பித்தோம் என்று ஆத்வாசப்பட்டுக்கொண்டிருந்தார்கள்
.
‘டே கண்ணா ! இறங்கு
டா .’ என்று கூறியவாறே கண்ணனின் பதிலை எதிர்பாராமல் அடுத்த நிறுத்தத்தில் வேகவேகமாய்
இறங்கி , எதிரில் தென்பட்ட டீக்கடையை நோக்கி நடந்தான் மதன் .அவனுக்குள் கோவம் கொப்பளித்துக்கொண்டிருந்தது
. படுபாவி மகள் , ஒரு கொடுவாளை எடுத்து கழுத்தை வெட்டியிருந்தால் கூட சிரித்தவாறே இறந்திருப்பான்
. ஆனால் வார்த்தையால் வதைத்துவிட்டாளே என்று மனதினுள் அழுதவாறே ஒரு சிகரெட்டைப்பற்ற
வைத்தான் .
‘என்ன மச்சி ஆச்சு
?’ என்ற கண்ணனின் கேள்விக்கு பத்துநிமிடம் கழித்து பதில் கூறினான் .
‘இல்ல மச்சி !
இவ செட் ஆகமாட்டா . ’
‘ஏன்டா ? அவளுக்கு
புடிக்கலையா ?’
‘இல்ல மச்சி .
அவ என்ன அண்ணானு சொல்லிட்டாடா ’ என்று தொண்டை தழுதழுக்க கூறினான் . கிட்டத்தட்ட அழுதுவிடும்
நிலையில் இருந்தான் . கண்டிப்பாய் வீட்டை அடைந்ததும் அவனுடைய படுக்கை கண்ணீரால் நனையப்போவது
உறுதி .
‘விடு மச்சி .
இவளாம் ஒரு ஆளு . அவ மூஞ்சப்பாத்தியா ? நல்லா வெள்ள எலிக்கு பவுடர் பூசுன மாதிரி .
குள்ளக்கத்திரிக்காயாட்டம் இருந்துகிட்டு ஓவர் சீனு போடுறா மச்சி . நா அப்பவே வேண்டாம்
விடுடானு சொல்லிருப்பேன் . உனக்கு மனசு கேக்காதுனு தான் விட்டுட்டேன் ’ என்றான் கண்ணன்
.
அப்போதைய வார்த்தைகள்
ஓரளவு மதனுக்கு ஆறுதலாக இருந்திருக்கும் . அடுத்த பேருந்து வந்தபின் அதில் ஏறிய மதனுக்கு
வீட்டைச்சென்றடையும் நேரம் எல்லாம் முழுக்கவனமும் அவள் அண்ணா என்று கூறிய அந்த ஒரு
வினாடியில் மாத்திரமே இருந்தது . ச்சே ! நாம இன்னைக்கு அவகிட்டபோயிருக்கவேகூடாது .
அவசரப்பட்டுட்டோம் . அவ மட்டும் என்ன செய்வா ? முன்னபின்ன தெரியாத ஒரு பையன அண்ணானு
சொல்லாம மாமானா சொல்லுவா ? அவமேல தப்பு இல்ல . அவளும் காலைல நல்லா பார்த்தாளே ! அப்பறம்
எதுக்கு அண்ணானு சொல்லிருப்பா ? ஒருவேள என்ன புடிக்கலையோ ? எல்லாத்துக்கும் காரணம்
எங்கப்பா தான் . அவரு மாதிரியே என்னோட தலையும் கொஞ்சம் வழுக்கையா இருக்கறதால தான் அவளுக்கு
நம்மள புடிக்கல . இதுபோன்று ஏதேதோ நினைத்துக்கொண்டே வீட்டை அடைந்தான் . மற்றநாட்களில்
வீட்டினுள் எல்லாரையும் சிரிக்கவைத்துக்கொண்டிருந்தவன்
அன்றைய தினம் மௌனமாய் தன்னுடைய அறையினில் முடங்கிக்கிடந்தான்
. இதுமாதிரியான துன்பகர தினம் ஒருநாளும் அவனுக்கு இருந்தது இல்லை . ஆனால் ஒன்றை மட்டும்
உறுதியாய் மனதினுள் விதைத்துக்கொண்டான் . வாழ்வு அவளோடு தான் .
அடுத்தநாள் மீண்டும்
வேகவேகமாய்க்கிளம்பி அவள் பயணிக்கும் அதேபேருந்தில் ஏறினான் .நேற்றைய தினம் அவள் மட்டும்
அப்படி இவனை அழைக்காமலிருந்தால் அவளின் வீடுவரை சென்றிருப்பான் . அவனுக்கென்று கடைசி
படியில் சிறிது இடவிட்டு ‘வா தல’ என்ற ஜூனியர் மாணவர்களின் மரியாதையை கண்டுகொள்ளாமல்
உள்ளே நுழைந்தான் . எப்போதும் கடைசிப்படியில் மட்டுமே பயணிப்பவன் முதல்முறையாய் உள்ளே
நுழைவது , கண்டக்டர் உட்பட அவனை அறிந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது
. அவளைப்பார்த்ததும் பல கால்களை மிதித்து , சிலரைத்தள்ளியவாறே உள்ளே நுழைந்தான் . அவள்
நின்றுகொண்டிருந்த இடத்தை அடுத்த ஒருநிமிடத்தில் அடைந்தான் . நேற்று அவளை சைட் அடித்துக்கொண்டிருந்த
அதே முகங்கள் இன்றும் தத்தம் இடத்தில் தென்பட்டன .இன்றைய தினம் வெள்ளைநிற சுடிதார்
, ஆனால் மெல்லிய நீலநிறப்பூக்களுக்குள் தனது தங்கத்தை , சாரி அங்கத்தை மறைத்திருந்தாள்
. ஆனால் நேற்று பார்த்திருந்த பொலிவான முகம்
அவனுக்குக்காட்சியளிக்கவில்லை . மாறாய் இரவு முழுதும் துயில் கொள்ளாத களையிழந்த முகம்தான்
காணப்பட்டது . நேற்றைய சிரிப்பொலி இன்று அவளிடம் இல்லை . அவளுடைய தோழிகள் மாத்திரம்
ஜாலியாய் கதையடித்துக்கொண்டிருந்தார்கள் . அவர்களுக்குள் பெரும்பாலான பேச்சுகள் தங்களை
எவனெவன் எப்படியெல்லாம் சைட் அடிக்கிறார்கள் என்பதைப்பற்றியே இருந்தது . கண்ணன் கல்லூரிக்கு
கிளம்ப இன்னும் ஒருமணிநேரம் ஆகிவிடும் என்பதால் , மதன் அவனில்லாமல் சோலோவாய் அவளை நெருங்கினான்
.
‘அப்றம் . எந்த
காலேஜ் நீங்கலாம் ?’ என்றவாறே அவளின் தோழிகளைப்பார்த்துக்கேட்டான் மதன் .
‘டிபிடி ணா . நீங்க
?’ கொஞ்சம் உடல்பூசினாற்போல் அதேநேரம் வழவழவென வாயாடிக்கொண்டிருந்தவள் இவனின் கேள்விக்கு
பதிலளித்தவாறே கேள்வியை எழுப்பினாள் .
‘நா சென்ட்ரல்
பாலிடெக்னிக் . என்ன டிபார்ட்மென்ட் ?’
‘நாங்க நாலுபேரும்
சி.எஸ் , இவ மட்டும் இ.சி.ஈ ’ என்றாள் அவள் . தன் மனதுக்கு பிடித்தவள் , தான் நினைத்தவாறே
கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்திருப்பது அவனுக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை .
‘இளம்பிள்ளையா
நீங்க ?’
‘ஆமாங்ணா . எப்படி
கண்டுபிடிச்சிங்க ?’
‘லென்ஸ் வச்சி
கண்டுபிடிச்சேன் .’
‘அண்ணா ! ச்சும்மா
ஓட்டாதிங்க .’
‘நீங்க என்ன காரா
? பைக்கா ? ஓட்ரதுக்கு .’
‘ஹலோ ! நாங்க ஓட்டுனா
நீங்க தாங்கமாட்டிங்க .’
‘நா ரெடிப்பா
. நல்லா ஓட்டுங்க .’
பின் மொக்கையாய்
தொடர்ந்த உரையாடல்கள் ஜாலியாய் மாறத்துவங்கியது . மதனிடம் வரிக்குவரி வாயாடியவள் பெயர்
மாலினி என்பதும் , ஓரமாய் எலும்புந்தோலுமாய் இருந்தவளின் பெயர் வைதேகி எனவும் , இன்னொருத்தி
பெயர் ரம்யா எனவும் தெரிந்துகொண்டான் . பதிலுக்கு இவனின் பெயரையும் அவர்கள் தெரிந்துகொண்டார்கள்
. இவர்களின் பேச்சை முயற்சியின்றி கேட்பதுபோலிருந்த அவள் , தன்னிடம் இவன் பேசமாட்டானா
என்பதுபோல் சிறிது ஏக்கத்துடன் பார்த்தாள் .
‘அப்றம் மாலினி
. உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் பேர சொல்லாம விட்டுட்ட ?’ என்றவாறு அவளின்மேல் தன் பார்வையைத்திருப்பினான்
. அவள் முகத்தில் சிறிது வெட்கமும் , நிறைய
ஆவலும் இருந்தது .
‘ஓ இவளா ? இவ பேரு
மையல் விழி . ’ என்ற மாலினி .
அடுத்தநொடியே
‘ஹலோ ! என் பேரு
மதன் . நைஸ் டு மீட் யூ மையல் . உங்க பேரு செமையா இருக்கு ’ என்றான் .
அவள் பதிலேதும்
கூறாமல் தலையைக்குனிந்தவாறே சிரிப்பை உதிர்த்தாள் .
‘என்ன உங்க ப்ரெண்ட்
பேசமாட்டாங்களா ? பாவம் ஊமை போல ?’
‘சீச்சீ . அப்படியெல்லாம்
இல்ல . அவ ஒரு பயந்தாங்கொள்ளி . யார்கிட்டயும் அவ்வளவா பேசமாட்டா . பத்தாததுக்கு நீங்க
வேற நேத்து அவள திட்டிவிட்டுட்டிங்க . அதான் ’ என்றாள் மாலினி .
‘ம் . ஹே மாலினி
. நீயே சொல்லுப்பா . நீ ஒரு பையனா இருந்து , இவள பாத்து பேசலாம்னு நீ வர . திடீர்னு
உன்ன இவ அண்ணானு சொன்னா நீ என்ன செய்வ ?’
‘சப் சப்புனு ரெண்டு
அர விட்ருப்பேன்ணா .’
‘அடடா ! நா கொஞ்சம்
சாஃப்டா ஹேண்டில் பண்ணிட்டேன் மாலினி . நீ சொல்ற மாதிரி ரெண்டு அர விட்ருக்கனும் ’
என்ற மதனை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்து முறைத்தாள் மையல் . அவளின் கண்கள் ‘விடுவ விடுவ . அது வரைக்கும் என் கை என்ன பூப்பறிச்சிட்டு
இருக்குமா ?’ என்பதுபோல் அவனிடம் பேசியது .அதற்குள் பேருந்து நிலையம் வந்துவிட அனைவரும்
இறங்கி பை அண்ணா என்று உதட்டின்மூலம் பிரியாவிடை பெற்றுக்கொண்டு சென்றனர் . மையல் மாத்திரம் ஒருமுறை திரும்பி பை என்பதுபோல தலையசைத்துவிட்டு
செல்ல , மதனுக்கு மையல் மேல் காதல்மையல் கொண்டது ..
இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
update next part soon
ReplyDeleteThanks For intersting on my Story Dude
Deleteஅதுதான் ஆரம்பத்தில் இருந்தே மையல் கொண்டுதானே இருக்கு ,அடுத்து ?
ReplyDeleteஆஹா !வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே !!
Deleteமையல் ஆச்சா...? தொடர்கிறேன்...
ReplyDeleteதொடர்வதற்கு நன்றி அண்ணா !!!
Delete