தடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை
செவ்வாயின் நேரப்படி
மணி மாலை 4.30ஐத்தொட்டதும் , தன்னுடைய அலுவலகத்தில் இருந்து வெளியேறி , புதிதாய் வாங்கியிருக்கும் தன்னுடைய ஹைட்ராலிக்ஸ் காரினுள்
புகுந்தான் சிவராஜன் . காரினுள் இருக்கும் தொடுதிரையில் டார்கெட் எனும்கேள்விக்கு ரெட்
மௌன்டைனில் இருக்கும் தன்னுடைய வீட்டினைக் குறிப்பிட்டு ஆட்டோபைலட் மோடில் பறக்க ஆரம்பித்தான்
. பூமியில் ஆக்ஸிஜன் உற்பத்திசெய்யும் அவனுடைய நிறுவனம் செவ்வாயிலும் தனது காலடியை
எடுத்துவைத்தது . ஏற்கனவே செவ்வாயில் குடியேறிவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால்
, செவ்வாயின் நிலவுகளில் ஒன்றான தைமஸில் மனிதர்கள் குடியேறத்தேவையான வசதிகளை நிறுவிக்கொண்டிருந்தார்கள்
. அதன் ஒரு அங்கமாக அங்கு ஆக்ஸிஜனை உற்பத்திச்செய்து நிலைநிறுத்தும் பணி இவன் வேலைசெய்யும்
கம்பனி வாங்கியது . ஏற்கனவே செவ்வாயில் அவன் செய்திருந்த சிறப்பான பணியால் அவனை டீம்ஹெட்டாக
மாற்றி , தைமஸிற்கு அனுப்பியிருந்தார்கள் .
இன்னும் பத்து
நிமிடங்களில் அந்தகார் 5000 கிலோமீட்டரைக்கடந்து
அவனின் வீட்டினைச்சென்றடைந்துவிடும் . நாளை பொங்கல் என்பதால் , டிடிஎச்சில் ரிலிஸாகும்
புதுத்திரைப்படத்தின் சந்தாவை காரினுள் இருந்தவாறே ஆன்லைனில் செலுத்தினான் . மேலும்
நாளை மறுநாள் சனிகிரகத்திற்குச்செல்லவிருக்கும் குடும்பசுற்றுலாவையும் ஒருமுறை உறுதிசெய்தான்
. இந்த இருநாட்கள் குடும்பத்தோடு செலவழிக்கவேண்டும் என்று முடிவெடுத்தபடியே பயணத்தைத்தொடர்ந்தான்
.நடுவே அவனுக்கு போன் வர , அழைத்தவள் அவன் மனைவி நிலா தான் . அவளின் அழைப்பை ஏற்று
, அவளின் முகத்தைப்பார்த்தவாறு பேசினான் .
‘சொல்லுமா .’
‘பொங்கலுக்கு என்ன
பிளானுங்க ?’
‘படத்துக்கு புக்
பண்ணிருக்கேன் . நாளான்னைக்கு சாட்டர்ன் டூர் . அவ்ளோதான் . உனக்கு ஓகேதான ?’
‘எனக்கு ஓ.கேங்க
. ஆனா உங்க அப்பாவுக்கு பூமிக்கு போகனுமாம் ’
‘விடு . நா வரேன்
’ என்றவாறு அவளின் இணைப்பைத்துண்டித்தான் . இவனின் தந்தையின் காலத்துச்சூழல் வேறு ,
இன்றைய நிலை வேறு . பசித்தால் மாத்திரை எடுத்துக்கொள்ளும் காலம் இது . இந்நிலையில்
பொங்கல் வைக்க அரிசிக்கு எங்கு போவது ? அப்படியே வாங்கினாலும் ஒரு பருக்கையின் விலை
1 கோடியைத்தொடும் . இதெல்லாம் சொன்னால் புரிந்துகொள்ளவே மாட்டார் . சாவதற்குள் ஒருமுறையாவது
தான்பிறந்த ஊருக்குச்சென்று பொங்கலைக்கொண்டாட வேண்டும் என்று தழுதழுத்தவாறே கூறுவார்
.
அவனுக்கு விவரம்
தெரியஆரம்பித்த நாட்களிலிருந்தே அவரின் பெரும்பாலான பேச்சுகள் இதையே சுற்றியிருக்கும்
. அவர் சிறுவனாக இருந்தபோது பொங்கலைக்கொண்டாடினார்களாம் . அவருக்குத்திருமணம் ஆகும்போது
ஓசோன்படலம் முற்றிலும் அழிந்து UVகதிர்களின் தாக்குதலுக்கு பூமி உள்ளானது . UV தாக்குதல்
மட்டுமின்றி பூமியின் வெப்பநிலையையும் உயர ஆரம்பித்ததால் நீர்வறட்சி ஏற்பட்டு உணவு
உற்பத்தி என்பது அடியோடு அழிந்தது. புறஊதாக்கதிர்களின் தாக்கத்தாலும் , பூமியின் காலநிலைமாற்றத்தாலும்
, உணவுத்தட்டுப்பாட்டாலும் பலகோடிக்கணக்கானோர் இறந்தனர். அந்தநிலையில் சிலரின் முயற்சியால்
பசி மற்றும் தாகத்தை அழிக்கும் மாத்திரைச் சந்தைக்கு வந்தது . என்னதான் அறிவியல் இருந்தாலும்
உணவையும் தண்ணீரையும் மீண்டும் உற்பத்திச்செய்யமுடியவில்லை. எப்படியோ அவர் தன்மனைவியை
இழந்தாலும் சிவராஜனை மிகக்கஷ்டப்பட்டு காப்பாற்றினார் . அன்றிலிருந்து ஒவ்வொரு பொங்கலுக்கும்
எப்படியாவது பொங்கல் வைக்கவேண்டும் என்பதே அவரின் ஆசை. சிவராஜனுக்கு எப்படித்தெரியும்
? அவனின் தந்தையும் தாயும் முதன்முதலில் சந்தித்தது ஒரு பொங்கலில்தானென்று .
இம்முறை அவன்மனதில்
ஏதோ வருத்த , அவருடன் செல்லவிருந்த சனி பயணத்தை கேன்சல் செய்துவிட்டு பூமியை நோக்கிய
பயணத்துக்கு ஆன்லைனில் டிக்கெட் எடுத்தான் . அவனுடைய கார் செவ்வாயில் செயற்கையாய் உருவாக்கப்பட்டிருந்த
வளிமண்டலத்தினுள் நுழைந்தது .அடுத்தநிமிடம் அவனுடைய வீட்டை அடைந்தவன் விடுமுறைக்குதுகலத்துடன்
வீட்டினுள் நுழைந்தான் . ஆனால் அங்கே அவன்
மனைவி கண்ணீருக்குத்தன் முகத்தைவார்த்திருந்தாள் .
‘என்ன நிலா ஆச்சு
?’
‘மாமா இறந்துட்டாருங்க
’ என்றாள்.அவனால் ஜீரணிக்கமுடியாமல் தந்தையின் அறைக்குச்சென்றான் . உயிரற்ற உடலில்
மென்புன்னகையும் நிறைவேறாத ஏக்கமும் அவரின் முகத்தில் தென்பட்டன. மனதைச்சமாதானப்படுத்தியவன்
நேரே இன்டர்நெட்டிற்குச்சென்று தன்னுடைய புதுக்காரை விற்றான். அடுத்த ஒருமணி நேரத்தில்
பூமியை நோக்கிய பயணத்திற்கு மேலும் இரண்டு டிக்கெட்களும் ஒரு கிலோ அரிசியையும் வாங்குவதற்குரிய
கட்டணத்தைச்செலுத்தினான் .
இது ரூபன் மற்றும் யாழ்ப்பாவணன் இணைந்து நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு வென்ற சிறுகதை .
வினோதமான சிந்தனை அருமை நாளைய உலகம் இனி இப்படித்தான் நண்பரே....
ReplyDeleteதமிழ் மணம் 1
ரூபன் மற்றும் யாழ்ப்பாவணன் இணைந்து நடத்திய சிறுகதைப்போட்டியில் கலந்து கொள்வதே பெரிய விசயம். அதில் ஆறுதல் பரிசு வென்றது அதைவிட பெரிய விசயம்..வாழ்த்துக்கள்!! த.ம.1...
ReplyDeletesci fi கதை என்றாலும் பாசப் போராட்டம் தானா ?வாழ்த்துகள்:)
ReplyDeleteஎங்கேயோ போயிட்டீங்க...!
ReplyDeleteஅருமை...