மாஸ் - சினிமா விமர்சனம்




இது பேய்ப்படம் என்று பலர் கூறியபோது நான் நம்பவில்லை . வெங்கட்பிரபாவது  பேய்ப்படங்கள் எடுப்பதாவது . மனிதர் ஜாலியாக படம் எடுத்து பார்க்கவருபவர்களையும் ஜாலியாக இருக்கவைத்து , நிம்மதியாக அனுப்புவதில் வல்லவர் . அவர் போய் பேய்ப்படம் எடுக்கிறாரா ? அப்படியே எடுத்தாலும் கிளையேக்ஸில் பேயும் இல்லை , அது படுத்த பாயும் இல்லை என்பதுபோல் ஒரு ட்விஸ்ட் அடித்து முடித்துவிடுவார் என்று சென்றேன் .ஆனால் அந்நம்பிக்கையை அவநம்பிக்கையாக்கி உண்மையாகவே பேயை வைத்து படமெடுத்திருக்கிறார் வெங்கட் . அதுவும் ஒரு பேய் , இரண்டு பேயல்ல . படம் முழுதும் பேய்மயமாகவே இருக்கிறது . படத்தில் மனிதர்களைக்காட்டிலும் அதிகமாக திரையில் உலாவுவது பேய்கள் தான் . இது மட்டுமா ? எல்லாரும் அடிக்கடி வெங்கட் பிரபு என்றாலே ஒன்று சொல்லுவார்கள் . ‘கதைனா என்னனே அவருக்கு தெரியாது . அவர் படத்துல பெரிய கதைய கண்டுபிடிச்சா பொற்காசுகள் சன்மானம் ’ என்பதுபோல அடித்து விடும் ஆட்களுக்கு ஆப்படித்துவிட்டார் வெங்கட்பிரபு . முதன்முறையாக ஒரு ஆழமான கதையையும் உள்நுழைத்திருக்கிறார் . இதுமட்டுமா ? தலைவர் கதையினுள் சென்டிமென்ட் காட்சிகளையும் புகுத்தி, தன் பழையபாணியிலிருந்து கொசம் விலகி எடுத்திருக்கிறார் என்பது படம் முடிந்தபோது எனக்கு தோன்றிய உணர்வு .

மாஸ் எனும் மாசில்லாமணி ஒரு அநாதை. அவருடைய நண்பர் , வழக்கம்போல நம்ம ப்ரேம்ஜீ தான் .இருவரும் சிலபல திருட்டுவேலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் . மாசுக்கு முதல்பார்வையிலேயே நயன்மீது காதல் வந்துவிடுகிறது . ஒருமுறை ஒரு பெரிய கையின் பணத்தை அடித்து மாசும் , அவரது நண்பர் ஜெட்லியும் மாட்டிக்கொள்கிறார்கள் . தப்பிக்கும்போது ஏற்படும் விபத்தில் ப்ரேம்ஜீ இறந்துவிட , மாசுக்கு இறந்தவர்களெல்லாம் தெரிய ஆரம்பிக்கிறார்கள் (THE SIXTH SENSE நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல ) . இறந்தவர்களிடம் பேசும் மாஸ் , அவர்களுக்குத் தேவையானவற்றை செய்வதாக நம்பவைத்து அவர்களை வைத்து பணம் சம்பாதிக்கிறார் . அதாவது ஆவிகளை ஒவ்வொரு வீடாய் அனுப்பி , அவ்வீட்டிலுள்ளோர்களுக்கு தொல்லைக்கொடுத்து , ஆவி ஓட்டும் ஆளாக தானே என்ட்ரி ஆகி , ஆவிகளை விரட்டுவது போல் நடித்து பணம் சம்பாதிக்கிறார் . ஒருமுறை ஒரு வீட்டினுள் ஆவி விரட்ட செல்லும்போது , அங்கே சூர்யாவை போல இருக்கும் ஆவியை சந்திக்கிறார் . அந்த ஆவியின் பெயர் சக்தி . அது மாசியைப்பற்றி எல்லாவற்றையும் கூறுகிறது . மேலும் தான் சொல்லும் இடத்திற்கு சென்றால் 75 கோடி பணம் கிடைக்கும் என நம்பவைத்து அழைத்துச்சென்று மாசிக்குத் தெரியாமலே கொலை செய்யவைக்கிறது . இதேபோல் இன்னொருவனையும் கொலைசெய்யவைக்கிறது . யார் அந்த சக்தி ? மாஸ் கொலை செய்தவர்கள் யார் ? மாஸை நம்பி வந்த ஆவிகளின் நிலை என்ன ? மாஸின் திருட்டுத்தனத்தை அறிந்து பிரிந்துபோன காதலியின் நிலை என்ன ? என்பதெல்லாம் படத்தினைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .

முதலில் படத்தின் குறைகளை பார்த்துவிடலாம் . முதல்குறை சூர்யா - நயன்தாரா காதல் போர்ஷன் . படத்திற்கும் அதற்கும் துளி சம்பந்தமுமில்லை எனினும் தேவ்வையில்லாமல் வலுக்கட்டாயமாக உள்நுழைத்திருக்கிறார் வெங்கட் . மங்காத்தா படத்தில் த்ரிஷாவிற்கு ஒரு ரோல் கொடுத்து , அந்த ரோலை கதையுடன் சம்பந்தப்படுத்தியவர் , இப்படத்தில் ஏனோ படுகோட்டை விட்டுவிட்டார் . தேவையில்லாமல் 20 நிமிடம் வேஸ்ட் .மேலும் அந்த  காதல் காட்சிகளெல்லாம் படுதிராபை . கோவா , சென்னைபோன்ற படங்களில் காதலை அழகாக காட்சிப்படுத்திய வெங்கட்பிரபா இப்படி கோட்டைவிட்டார் என்ற சந்தேகம் மனதில் எழாமல் இல்லை .

அடுத்து பிரேம்ஜீ . வழக்கம்போல வழவழ கொழகொழ கேரக்டர் ; அதே மேனரிசம் ; அதே மாடுலேசன் ; அதே டயலாக் . முடியல பாஸ் .

பாராட்டுக்குரியவர்கள் என்றால் முதல் ஆள் யுவன் . இரண்டு RD ராஜசேகரின் கேமரா , மூன்று பிரவினின் எடிட்டிங் , சி.ஜீ . பாடல்கள் அனைத்தும் அட்டகாசமாக படம்பிடிக்கப்பட்டிருக்கிறது .

மொத்தத்தில் ஜாலியாக ொரு சீரியஸ்கதை இந்த மாஸ் . பக்கா மாஸ் இல்லையெனினும் நல்ல கமர்சியல் ஐட்டமாக வெளிவந்துள்ளது . வெங்கட் பிரபுவின்  இந்த சிக்ஸர் , பார்டரில் விழுந்துள்ளது .

டைட்டில் மாசு தான ?னு உங்களுக்கு டவுட் வரும் . என்ன செய்ய ? தினம் ஒரு டைட்டிலை இத்திரைப்படத்திற்கு வைத்துக்கொண்டிருப்பதால் பழைய டைட்டிலே இருக்கட்டும் என்று நானே வைத்துவிட்டேன் .


Comments

  1. சரி சரி ..
    படம் நல்ல இருந்தா சரி
    பாப்போம்

    ReplyDelete
  2. பவுண்டரி தான் என்று சொன்னார்கள்...!

    ReplyDelete
  3. நல்லதொரு அலசல்
    த.ம.4

    ReplyDelete
  4. வெங்கட் பிரபுவுக்கு சிக்ஸ் ஆ? அல்லது கட்சாகிட்டா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்