பயணம் @ டைம்மெஷின் - 7
திருவாரூரில் ஒரு நாள்
பயணம் @
டைம் மெஷின்
|
அத்தியாயம் – 3
|
பகுதி – 5
|
7
|
கி.மு. 2-ம் நூற்றாண்டு
|
திருவாரூரில் ஒரு நாள்
|
‘நாங்க அரண்மனைக்கு போகனுங்க ’
‘சரி. நாளை காலை , நானும் புகார் துறைமுகத்திற்கு செல்ல
வேண்டி உள்ளது . செல்லும் வழியில் உங்களை திருவாரூரில் விட்டுச்செல்கிறேன்’
என்ற வணிகனின்
குரல், இருவருக்கும் ஒரு நிம்மதியைக்கொடுத்தது . நாளை அங்கிருந்து தஞ்சைக்கு சென்று
, கல்லணை தோண்டுமிடத்துக்குச்செல்லவேண்டும் . அந்த பகுதியில் , பெட்ரோலுகுரிய மூலக்கூறு
இருப்பது 21 –ம் நூற்றாண்டில் கண்டுபிடித்திருப்பது உண்மைதான் எனில் , இன்னும் ஒருவாரத்தில்
அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு சென்றுவிடலாம் . காலை விடிந்ததும் , காவிரியின் கால்வாயில்
, குளித்துமுடித்துவிட்டு கிளம்ப எத்தனித்தார்கள் . அவ்வணிகனின் மனைவியிடமும் , அச்சிறு
பாலகனிடமும் விடைபெற்றுக்கொண்டு மூவரும் கிளம்பினர் .
ஒரு மணிநேரத்திற்குள்
, அவர்கள் திரவாரூரை அடைந்தார்கள் . தூரத்தில் இருந்து பார்க்கும்போது , களிமண்ணாலும் , கருங்கல்லாலும் கட்டப்பட்ட மாளிகைகளும்
, அதற்கு நடுநயமாக வீற்றிருக்கும் அரண்மணையுமாக அற்புத தோற்றத்தினை , இருவரின் கண்களுக்கும்
வழங்கியது . அந்நகரை அடைய அடைய , புற்றீசலில் இருந்து வெளிவரும் சிற்றெறும்புகளாய்
, மனிதர்கள் அங்குமிங்கும் உலவிக்கொண்டிருக்க , எருதுகளும் கழுதைகளும் பொதியை சுமந்தபடி
இவர்களை கடக்க , இருபுறமும் , நாளங்காடிகள் விழித்திருக்க , ஆடவர்களில் பலர் , நெல்லுக்கு
நீர் பாய்ச்சும் வேலையை தூரத்தில் இருந்த வயல்களில் செய்துகொண்டிருந்தார்கள் . நகரின் ஒவ்வொரு வீதியும்
, ஒவ்வொரு வாடையை இவர்கள் நாசித்துவாரத்திற்கு அளித்துக்கொண்டிருந்தன . ஒரு சில இடங்களில்
, பச்சரிசியின் வாசமும் , பாலின் வாசமும் , தானியங்களின் வாசமும் வீசிக்கொண்டிருந்தன . ஆங்காங்கே சிலர்
, மரத்தால் உருவான கூண்டுகளில் , சிறுத்தைகளையும் , சிங்கங்களையும் அடைத்துக்கொண்டு
எருதில் பூட்டிய வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தனர் . நகரின் நுழைவாயிலை அடையும்போதே
கட்டணமாக அரசுக்கு , அவ்வணிகன் ஏற்கனவே இரு மூட்டை நெல்லை , அளித்துவிட்டிருந்தான்
. நகர் முழுவதும் சீருடை அணிந்து காவலர்கள் வலம் வர , சில இடங்களில் , வணிகர்கள் பேரம்
பேசிக்கொண்டிருந்தனர் . ஆங்காங்கே சமணத்துறவிகளும் , பெளத்த பிட்சுக்களும் , இவர்களை
கடந்து சென்றவண்ணம் இருந்தனர் . அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களில் பெரும்பாலானோர்
, நாகரீகமான ஆடம்பர உடைகளை அணிந்திருந்தனர் . வீடுகளில் பெரும்பாலானவை , மாளிகைகள்
போன்ற தோற்றமுடையவையாகவே காணப்பட்டது. சாலையில் , பல்லக்கில் சிலர் அரண்மனையை நோக்கி
சென்றவண்ணம் இருக்க , இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த அவர்களின் வாழ்க்கை
, இவர்கள் இருவரையும் அதிசயிக்க வைத்துக்கொண்டிருந்தது.
‘சரி , சகோதரர்களே. எனக்கு விடையளியுங்கள் . இங்கு உங்கள் வேலை
முடிந்ததும் , எனது வீட்டிற்கு சென்று உண்டு உறங்குங்கள் . நான் ஒரு வாரத்தில் திரும்பிவருகிறேன்’
‘அண்ணா
! ஒரு சின்ன சந்தேகம் . எங்க கூட நீங்க எடுத்துட்டு வந்தது ,வெறும் 8 மூட்ட அரிசி
. அத வச்சி எப்படி வியாபாரம் ?’
அவ்வணிகன் , தன்
இடுப்பில் முடிந்திருந்த , சிறு பையை எடுத்துப்பிரித்துக்காட்டினான் . அதில் இருந்தவை
, அத்தனையும் நவரத்தினங்கள் .
‘அரிசி ,வெறும் பெயருக்குத்தான் . அதை ஆங்காங்கே விற்று
, நவரத்தினங்களை சேகரித்துவிடுவோம் . அதைக்கொண்டு பூம்பட்டினத்தில் விற்பது தான் எங்களுக்கு
வருமானம்’
தொழிலைப்புரிந்து
கொண்ட பாலாவும் சந்துருவும் அவ்வணிகனிடத்தில் விடைபெற்றுக்கொண்டு , மெல்ல அரண்மனையை
நோக்கி சென்றனர் . திடிரென்று
, அவர்கள் இருவரும் நடந்து போயிருந்த பாதையின் மறுபுரமிருந்து , இரண்டு அழகிய வெண்குதிரைகளை
உடைய தேர் , கட்டுப்பாடு இழந்து இவர்களை கடந்து வளைந்து சென்றது . ஒருநிமிடத்தில் உயிர்பயம்
மனதினுள் வந்து போனது. சுதாரித்த இருவரும் , தேரினை நோக்கி தங்களின் பார்வையை செலுத்தினர்
. அதனுள் 16 வயதுடைய ஒரு சிறு இளைஞன் , தன் வாலிபத்தோற்றத்தினை எடுத்துக்காட்டும் தோள்களுடன்
, வெண் உடையணிந்த மிடுக்குடனும் காணப்பட்டான் . அவன் , அக்குதிரைகளை கட்டுப்படுத்த
ஏதேதோ பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான் .
‘எப்படி போறான் பாரு . அந்தாகாலத்துலயே இந்த மாதிரி கிராக்குங்க இப்புடித்தான்
திரியுதுங்க ‘ என்ற சந்துருவின் வார்த்தைகளுக்கு , பாலாவும் ஆமாம் போட்டான்
. இவர்கள் அரண்மனையை நோக்கிய பயணத்தை தொடர்ந்த வண்ணம் இருக்க , தூரத்தில் ‘மா’ என்ற
சத்தம் காதைப்பிழந்து வானைத்தொடும் வண்ணம் பிரதிபலித்துக்கொண்டிருந்தது .
மெல்ல அரண்மனையின்
அருகே வந்து நின்றார்கள் . பிரமாண்ட மதில்சுவர்களின்வழியே உள்நுழைய , ஒரு மாபெரும்
இரும்புக்கதவு வழிவகையாக இருந்தது .
‘அரசர
பாக்கனுங்க’
‘யார் நீங்கள் ? எதற்காக பார்க்கவேண்டும் ?’
‘நாங்க
ரெண்டுபேரும் வடநாட்டுலர்ந்து வரோம் .ஒரு முக்கியமான விஷயமா அரசன பாக்கனும் ’
‘சமணத்துறவிகளா நீங்களிருவரும் ?’
‘இல்லைங்க.
நாங்க சிவனடியார்கள்’
எப்படியோ காஞ்சிபுரத்தில்
,அத்தோணிக்காரன் கூறியது நினைவிற்கு வந்தது .
வாயில்காப்பவனிடம்
பொய் கூறியாயிற்று . அவன் , அவர்கள் இருவரையும்
உள்ளே அழைத்துச்செல்ல எத்தனிக்கும்போது ,
‘டங் டங் டங் டங்’
எனும் , மணியோசையின்
பெருத்த சத்தம் காதை கிழிக்கும் வண்ணம் எங்கிருந்தோ வெளிப்பட்டது . சத்தம் வந்த திசையை
நோக்கி இவர்கள் மூவரும் நடக்க , மதிலை ஒட்டியுள்ள ஒரு மண்டபத்தில் உள்ள மணியின் கயிற்றை
பிடித்து ஒரு பசுமாடு இழுத்து சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது . அச்சத்தத்தினை கேட்டு
, சுற்றியிலும் தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்த மக்கள் அனைவரும் , அம்மண்டபத்தைச்சுற்றி ,அப்பசுமாட்டை வேடிக்கை பார்த்தபடியே
நின்றிருந்தனர் .
‘என்னங்கணே
. ஒரு மாடு எதுக்கு அந்த மணிய அடிக்குது ?’
‘அதுதான் நீதி மணி . எங்க சோழநாட்டுல , மக்களுக்கு
ஏதேனும் குறையிருந்தா , அதை அடிப்பாங்க . அச்சமயம்
பெருமானே வந்து தீர்த்து வைப்பாரு . ’
இதென்ன இப்படியொரு
பழக்கமாக இருக்கிறது . இவன்கூறுவதெல்லாம் நம்பினாலும் , இந்த மாட்டிற்கு என்ன பிரச்சனை இருக்கும்
? அதை எப்படி மன்னர் அறிந்து தீர்த்துவைப்பார் ? என்ன ஆனாலும் சரி. இதை வேடிக்கைப்பார்க்காமல்
, இங்கிருந்து நகரக்கூடாது என்று முடிவெடுத்தான் சந்துரு .
‘மன்னர் வருகிறார் ! ஒதுங்கி நில்லுங்கள் ‘
என்ற சத்தம் அரண்மனையிலிருந்து
வர கூடியிருந்த மக்கள் வழிவிட்டனர் . தூரத்தில் , அலங்காரம் செய்யப்பட்ட மாபெரும் கரிய
யானையின்மீது , கம்பீரம் ததும்பி வழியும் முகத்துடன் , கருணை மிக்க கண்களுடன் , சிவனின்
பட்டை , நெற்றியை அலங்கரிக்க , எருதின் திமிரைவிட
பலமான தோள்களுடனும் ஒருவர் அமர்ந்துவந்தார் . வளர்ந்த அடர்த்தியான முடியுடனும் , முரட்டு
மீசையுடனும் , அலங்கரிக்கப்பட்ட தாடியுடனும் , அவர் வரும் திசை நோக்கி அனைத்து மக்களும்
வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தனர் . அவருக்கு முன் , இரண்டு குதிரையில்
, முறுக்குமீசையுடன் , விரைப்பாக இருவரும் , மன்னரின் இருபுறத்திலும் , பல்லக்கில்
யாரோ வருவதும் , மன்னரின் பின் , 50க்கும் மேற்பட்ட வீரர்களும் அணிவகுத்து வந்துகொண்டிருந்தனர்
. வந்தவர்கள் அம்மண்டபத்தின்முன் , அதேவரிசையில்
நிற்க , மன்னன் அந்த யானையிலிருந்து இறங்கினான்
. இறங்கி வந்தவன் நேரே பசுமாட்டை பார்த்தான் . அவரின்பின் இருவர் வந்து நின்றனர் .
அவர்கள்தான் பல்லக்கில் வந்தவர்கள் .
‘என்ன இது வியப்பு ? எதற்கு
அப்பசுமாடு , மணியை ஒலிக்கிறது ?’
மன்னனின் கணீர்குரலை
கேட்ட இருவரும் , முழித்துக்கொண்டிருந்தனர் . அப்போது , அக்கூட்டத்தின் நடுவே , குடியானாவன்போல் காட்சியளித்த ஒருவன் , சிறுதுளி
கண்ணீர் கண்களில் வழிந்தோட , அரசன்முன் வந்து குனிந்து நின்று பேசினான் .
‘பெருமானே ! சின்ன ராசாவின்
தேரில் நசுங்கி , இப்பசுவோட கன்று கழுத்தொடிஞ்சுடுச்சுங்க . இறந்த , கன்ற பார்த்த இப்பசுவும்
இங்க வந்துடுச்சுங்க . என்ன மன்னிச்சுடுங்க . நா இத பிடிச்சுட்டு போகையில , என்ன தள்ளிவிட்டு
ஓடியாந்துடுச்சிங்க’
என்றவாறே , மன்னனின்
காலில் விழுந்தான் .மன்னின் முகத்தில் குழப்பரேகை படர்ந்தவண்ணம் ,
‘வீதிவிடங்கன் எங்கே ?’ என்றார் .
‘வேந்தே ! இளவரசர் நகர்கோலம் செல்வதற்காக , புதிதாய்
வந்திறங்கிய அரேபியக்குதிரைகளை பூட்டிக்கொண்டு தேரில் புறப்பட்டார் . அக்குதிரைகள்
முரண்டுபிடித்து இச்சம்பவம் நிகழ்ந்தேறியிருக்கலாம் . ஆகையால் , , ,‘
‘அமைச்சனே ! எங்கே வீதிவிடங்கன்
?’
உடனே , சில காவலாளிகள்
, அங்கிருந்து வேகமாக சென்றனர் . கூட்டத்தில் ஒவ்வொருவரும் , ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர்
. அந்த பையனுக்கு நல்லா வேணும் , எப்படி வண்டி ஓட்டிகிட்டு போறான் என்று சந்துருவும்
மனதில் நினைத்து சந்தோஷப்பட்டான் . மன்னனோ , முகத்தில் கோவமும் , கருணையும் , பாசமும்
ஒன்றுசேர தலைதாழ்ந்து நின்றிருந்தான் . தூரத்தில் , சிறிது நேரத்திற்குமுன் பாலாவையும்
சந்துருவையும் கடந்துசென்ற , அக்குதிரைவண்டியை , குதிரையின் கடிவாளத்தைப்பற்றியவாறே
காவலர்கள் இழுத்துக்கொண்டுவந்தனர் . அச்சிறு
இளைஞன் , தலையை தாழ்த்திக்கொண்டு , அங்கு வந்தான்
. என்ன நடக்கப்போகிறது என்று அனைவரும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர் .
‘அப்பசுவின் , கன்றை கொன்றாயா
?’ என்ற மன்னரின் குரலுக்கு பதில் பேசாமல்
, தலையை மட்டும் ஆமாம் என்பது போல் அவ்விளைஞன் தலையாட்டினான் . மன்னன் ஒருவாறு தெளிவு
பிறந்தவனாய் ,
‘சாலையின் நடுவில் படு ’
என்றான் . மகனும் எதுவும் பேசாமல் , அங்கிருந்த சாலையின் நடுவில் படுத்தான் .
‘அந்த தேரை கொண்டுவாருங்கள்
. அக்கன்று இறந்தது போன்றே , இக்குற்றவாளியையும் ஏற்றிக்கொள்ளுங்கள் ’
மன்னனின் , இத்தீர்ப்பைக்கேட்டு
மக்கள் அனைவரும் திடுக்கிட்டனர் . சந்துருவும் , பாலாவும் தான் .தேரைப் பிடித்துவந்த
காவளாளிகள் , ஒருநிமிடம் , திகைப்புற்று ,
அப்படியே நின்றனர் .
‘கொண்டு வாருங்கள்’
என்ற மன்னனின்
, சிங்க கர்ஜனையைக்கு பயந்த , காவலர்கள் , அத்தேரை அப்பக்கம் கொண்டுவந்தார்கள் .
‘பசுவினை அத்தேருக்குள் ஏற்றுங்கள்
’
காவலர்கள் , தயங்கியபடியே
பசுவினை , அத்தேர்வண்டியில் ஏற்றினார்கள் . குதிரைகள் இரண்டும் மிரட்சிப்பார்வையில்
அரண்டு போயிருந்தன .
‘தேரை ஏற்றி
, கொல்லுங்கள் ’
மன்னன் , இவ்வார்த்தையை
சொல்லும்போது தழுதழுத்த குரலும் , கலங்கிய கண்களையும் , சந்துரு உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தான்
. அவனின் இவ்வார்த்தைகளை கேட்ட பசுவும் கூட பரிதாபத்தால் ,அ வனைப்பார்ப்பது போலிருந்தது
. படுத்திருந்த பையனோ , எதுவும் பேசாமல் அமைதியாய் கீழே கிடந்தான் . அதுவரை அவனுக்குள்
இருந்த குற்றவுணர்ச்சி மறைந்து , தான் செய்த தவறுக்கு கிடைக்கப்போகும் தண்டணையை மனமுவந்து
ஏற்பவன்போல் அவன் முகம் காட்சியளித்தது .
‘ம் . ஏற்றுங்கள் .’ என்ற மன்னனின் குரல் கேட்டு காவலர்கள்
தடுமாறினார்கள் . என்னதான் இருந்தாலும் , அவர்கள் கொல்லப்போவது தனது வருங்கால அரசன்
ஆயிற்றே .அரசனைக்கொன்ற பாவத்தை எப்படி போக்குவது ? அது தன் குடும்பத்தையே சூழ்ந்து
கொல்லுமே என்ற பயம் அக்காவலர்கள் முகத்தில் தெரிந்தது .அந்நேரத்தில் ,
‘நிறுத்துங்கள் ’ என்ற குரல் கூட்டத்தின் நடுவினில் இருந்து ஒலித்தது .
எல்லோரும் , அக்குரல்வந்த
இடத்தினை பார்த்தார்கள் .பாலா மாத்திரம் சந்துருவை பார்த்துக்கொண்டிருந்தான் . சிறிது
நேரத்தில் , அனைவரின் கண்களும் சந்துருவின் முகத்தையே உற்றுநோக்கின . ஆம் , அவ்வாறு
கூறியது சந்துருவே தான் .
அவன் , இதுமாதிரியான
விஷயங்களில் எப்போதும் பயப்பாடமாட்டான் . ஆயினும் , இந்நேரத்தில் , ஒரு அரசனை எதிர்த்து
பேசுமளவுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது அவனுக்கு என்பது , அவனுக்கே புரியாத ஆச்சரியம்தான்
.
‘குதிரை
செய்த தப்பிற்கு , எப்படி சிறுவனை பலியாக்கலாம் ?’
‘யார் நீ ?’ என்ற சேனாதிபதியின் குரல் ஒலிக்க ,
‘நான்
ஒரு தமிழன் ’
என்று மறுமொழியளித்தான்
சந்துரு .
‘நானும்தான்
அக்காட்சியை பார்த்தேன் . குதிரைகள் இரண்டும் தாருமாறாக ஓடியது . அதை கன்ட்ரோல், சாரி
, கட்டுப்படுத்த , அந்த பையனும் முயற்சி பன்னான் . ஆனா , அது முடியாம , அந்த பசுமாட்டோட
குட்டிமேல ஏத்திட்டான் . இது ஒரு தப்புனு எப்புடி நீங்க அந்த பையன கொல்லளாம் ?’
தனக்கு வந்த தைரியத்தின்
காரணமாக , எப்படியோ எதிர்த்து பேசிவிட்டான் .
‘அவ்விளைஞன் கூறுவதும் சரிதானே மன்னரே !
குதிரை செய்த தவற்றிற்கு , நம் இளவரசரை எப்படி பொறுப்பாக்குவது ?’
‘நிறுத்தும் அமைச்சரே ! மனிதனினும்
குதிரை , அறிவில் குறைந்தது . அதைக்கட்டுப்படுத்த தெரியாதவன் , கையாண்டிருக்கக்கூடாது
. என்மகனின் அறிவிலித்தனமே , அப்பசுவின் இழப்பிற்கு காரணம் . இப்போது நான் தவறுசெய்தவனை
விடுவித்தால் , சிபி வழிவந்த என் சோழகுடி , இழிபிறப்பின் நிலை அடையும் . ’
‘சரிங்க
.அதுக்குனு , ஒரு மாட்டுக்காக , ஒரு மனுஷன கொல்லுவிங்களா ?’
‘இளைஞனே ! என்குலவழித்தோன்றல்களைப்பற்றி
அறிந்திருந்தால் , இப்படியெல்லாம் பேசமாட்டாய் . ஒரு புறாவிற்காக , தன் இதயச்சதையை
அறுத்தெடுத்து கொடுத்தவன் , என் முப்பாட்டன் . அவன்வழிவந்த எனக்கு நீதி தான் முக்கியம்
. பசுவாயினும் , எறும்பாயினும் நீதி என்பது உயிர்களுக்குப்பொதுவே . காவலாளிகளே ! தண்டணையை
நிறைவேற்றுங்கள் ’
சந்துருவின் கேள்விக்கு
, அம்மன்னன் அளித்த பதில் , அவன் வாயை மூடச்செய்துவிட்டது
. அவன் கண்ணெதிரிலே இன்னும் சிலநிமிடத்தில் , ஒரு பாலகன் கொல்லப்பட போகிறான் . நீதி
என்பது சரி தான் . ஆனால் , இச்சின்ன விஷயத்துக்கு , பெற்ற மகனையே கொல்ல சொல்வதா ? என்று
அதிசயித்திருந்தான் . பாலாவால் , அங்கு அதற்குமேல் நிற்கமுடியவில்லை . கூட்டத்திலிருந்து
வெளியே வந்துவிட்டான் . அதேநேரத்தில் ,அரண்மனையிலிருந்து பெண்மணி ஒருவர் ஓடிவருவதும்
, அவள் கையில் ஒரு அழகிய குழந்தையும் தெரிந்தது
. அவள் வந்து ஏதேதோ கெஞ்சிக்கொண்டிருந்தாள் . மன்னனோ , கண்ணில் வரும் கண்ணீரை அடக்கத்தெரியாது
முயற்சித்துக்கொண்டிருந்தான் . சந்துருவாலோ , அந்த 16 வயது பையனின் சாவை காண தெம்பில்லாமல்
வெளியே வந்தான் . கூட்டத்திலிருக்கும் சிலரோ , வேண்டாம் வேண்டாம் என்று கத்திக்கொண்டிருந்தார்கள்
. நீதிக்காக மகனையே முறை செய்யும் மன்னனா ! என்று அதிசயித்துக்கொண்டிருந்தார்கள் .
மெல்ல பாலாவுடன் சேர்ந்து , கூட்டத்திலிருந்து விடுபட்டு இருவரும் எங்கு செல்வதென்று
தெரியாமல் , மனதில் கனத்த பாரத்துடன் சென்றுகொண்டிருந்தனர் .
‘சடக்’ என்ற சத்தமும் , அதனைத்தொடர்ந்து ‘ஐயகோ ‘ என்ற பெண்மணியின் கதறலும்
, ‘ம்ச் .அந்தோ பாவம்’ என்று கூட்டத்திலிருந்து வரும் சத்தமும் , இவர்கள் காதுகை எட்டின
. சந்துருவின் கண்ணில் ஒருதுளி கண்ணீர் உருண்டோடியது . இதுவரை , அவன் சினிமாவைத்தாண்டி
, பேப்பரில் மட்டுமே கொலைகளை பார்த்திருந்தான் . நேரில் பார்த்தாலும் இப்படி ஒரு நேருக்குநேராக
சந்தித்ததில்லை . அதுவும் , பசுவிற்காக , தன் மகனையே கொல்ல துணிந்த தகப்பனும் , அவரின்
வார்த்தைக்கு ஒடுங்கி , எவ்வித பயமும் இல்லாமல் , தேர்ச்சக்கரத்தின் அடியில் படுத்த
அந்த பாலகனும் அவன் நினைவில் நின்றனர் .
இருவரும் சென்றுகொண்டேயிருக்க
, அவர்களை ஒரு கை வழிமறித்தது . யாரென்று பார்த்தவர்கள் , சிறிது ஸ்தம்பித்துதான் போனார்கள்
.
-தொடரும்
தொடர்புடைய இடுகைகள்
manoonithi cholan thalai nagar thiruvarur thane athum thavaru agivettatha tholare
ReplyDeleteமன்னிச்சிடுங்க தல ! திரூவாரூர்னு போடுறதுக்கு பதிலா , உறையூர்னு போட்டுட்டேன் ! சில பல கன்ஃபுயூசன்ஸ் !! சுட்டிக்காட்டியமைக்கு நன்றிணா !!
Delete