பயணம் @ டைம்மெஷின் - 8


பயணத்துள் பயணம்




தொடர்புடைய இடுகைகள்






அன்றைய நாள் , அவர்களுக்கு அப்படி அமையும் என்று அவர்கள் எதிர்ப்பார்த்திருக்கமாட்டார்கள் . முந்தையநாள் காலை நடந்த அக்கலகச் சண்டை கூட அவர்களை அந்தளவு பாதிக்கவில்லை . மனமெல்லாம் பாராமாய் இருக்க ,தலைகுனிந்து நடந்துகொண்டிருந்தனர் .

அச்சமயம் , தங்களை யாரோ தடுப்பதுபோல் இருக்க , யாரென்று பார்த்தனர் . ஆம் , அவரே தான் . இரண்டுநூற்றாண்டுகளுக்கப்பின் , தாங்கள் இருவரும் அடையாற்றில் குளிக்கும்போது ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவரே தான் . அப்போது , இதனை நம்பமுடியாமல் அன்று  , சிரித்த இருவரும் அதிசயங்கலந்து அவரைப்பார்த்தனர் .200 ஆண்டுகள் பின்னும் , அவர் இப்படியே தான் இருந்தார் . இப்போதும் அப்படியே உள்ளார் எனில் , கண்டிப்பாய் இவர் சித்தர் தான் . உண்மையா ? கனவா ? என்று ஆராய இப்போது முடியவில்லை .இவை அனைத்தும் கனவுலகில் சஞ்சரிப்பதுபோல்தான் உள்ளது . தடுத்த அவர் முகத்தை , ஏன் என்று வினவும் தோனியில் இருவரும் பார்த்தனர் . அவர் , தன் கையில் இருந்த ஒரு பாத்திரத்தை அவர்கள் இருவரிடமும் கொடுத்துவிட்டு , பாலாவைப்பார்த்து புன்னகைத்தவாறே சென்றுவிட்டார் . இவர்கள் அவரிடம் என்ன வினவினாலும் அவரிடமிருந்து எப்பதிலும் வரவில்லை . ஆட்டுமந்தையுடன் சென்றுகொண்டிருந்தவரை , வழிமறித்து என்ன ? ஏன் என்று கெஞ்சும் தோனியில் இருவரும் கேட்டனர் . அவர் , பாலாவின் நெற்றியில் தன் கட்டைவிரலைப்பதித்தார் . ஒருநிமிடத்திற்குப்பின் , அவன்

சரிங்க சாமி .ரொம்ப நன்றிங்கஎன்று கூறிவிட்டு அவரிடமிருந்து விலகி சென்றான் .

டேய் ! என்னடா ஆச்சு ? என்னடா பன்னாரு அவரு ?’ - சந்துரு

‘அது ஒரு பெரிய கதை மச்சி . உடனே நாம இப்போ டைம்மெஷின் இருக்க இடத்துக்கு போகனும் ’ - பாலா

என்னடா விளையாடுறயா ? பெட்ரோல் எடுக்கனும் , அது இதுனு சொன்ன . இப்போ என்ன திடீர்னு கிளம்பனும்னு சொல்ற ?’ - சந்துரு

பெட்ரோல் இப்போ கிடைக்காது மச்சி . அதுக்கு இன்னும் 175 வருஷம் ஃபார்வேர்டா டைம் ட்ராவல் பண்ணனும் .’ - பாலா

‘டேய் ! என்னடா விளையாடுறியா ? எப்படிடா இன்னும் 150 வருஷம் பின்னாடி போவ ? பெட்ரோல் இல்லனு சொன்னியே டா ? அத வச்சி இன்னும் 20 வருஷம்கூட போகமுடியாதுனு அப்போ சொன்ன ? இன்னும் எப்டிடா 175 வருஷம் . ? அந்த தாடிக்காரர நம்பி இப்டி ஆகிடுச்சேடா .அந்த ஆளு அப்பவே சொல்லிருந்தா பண்ணிருக்கலாம்ல . போச்சு . நம்ம லைஃப் முடிஞ்சிடுச்சி - சந்துரு

டேய் ! அதெல்லாம் ஒன்னுமில்லடா . ஒரு நிமிஷம் நா ..’ -

நிறுத்துடா ! உன்ன நம்பி வந்தேன்பாரு . என்ன செருப்பால அடிச்சிக்கினும் . ஆஃப்ட்ரால் ஒரு கன்னுக்குட்டி செத்ததுக்கு , அங்க என்னடானா, சொந்த மகனையே கொல்றான் . இன்னொரு பக்கம் , எங்கிருந்து வரானுங்கனே தெரியாம திடீர்னு அட்டாக் பண்ணி கொல்றானுங்க . போறவன் வரவென்னாலாம் , புத்த பிட்சுவா ? , ஜெயினானு ? கேட்டு டார்ச்சர் பன்றானுங்க .பத்தாததுக்கு , எங்கப்பார்த்தாலும் zoo-ல இருக்கமாதிரி காடு. பொம்பளைங்களா இங்க இருக்கவலுங்க ? முரத்த எடுத்து புலிய துரத்துறா ! அப்பப்பா ! என்னால இங்க இருக்கமுடியாது . நீ என்ன எழவ செஞ்சாச்சும் , இங்கிருந்து என்ன கொண்டுபோய் விட்ரு . உனக்கு கோடிபுண்ணியம்

டேய் லூசு. நா சொல்றத முதல்ல கேளுடா ! இந்த பாத்தரத்துல இருக்கறது ஒருவகையில பெட்ரோல்தாண்டா

என்னடா சொல்ற ?’

ஆமா ! இதுல இருக்கறதும் பெட்ரோல் தான் . இத வச்சும் நம்ம டைம் மெஷின ரன் பன்னலாம்’

அப்படினா , வீட்டுக்கு போயிடலாமா ?

இல்ல மச்சி! வீட்டுக்கு போகமுடியாது . பட் , அந்த டேம் கட்ற டைமுக்கு போகலாம்

ஏன்டா இவ்வளவு இருக்கே . நீ ஒரு லிட்டர்க்கு அவ்ளோ மைலேஜ் தரும் , இவ்ளோ மைலேஜ் தரும்னு சொன்ன ?

அது ப்யூர் பெட்ரோல் டா

சரி ! இது எப்படி அந்தாளுக்கு கிடைச்சது ?

நாம தான்டா கொடுத்தோம்

என்னடா உளர்ற ?

மச்சி . தெளிவா சொல்றேன் கேளு. இப்போ நாம பாத்த கிங் இருக்காருல , அவரோட பேரனோட பையன்தான் , கரிகாலன் . அவன் வாழ்ந்த காலத்துக்கு போனதான் , நம்மால பெட்ரோல் எடுக்க முடியும் . இப்போ என்ன மேட்டர்னா , நாம இங்கேயே ஸ்ட்ரக் ஆகிட்டோம் . இங்க இருந்து 5 வருஷமா நா ஆராய்ச்சி பண்ணி , இந்த பெட்ரோல கண்டுபிடிச்சேன் .பட் அத வச்சி, நம்மால 2 சென்சுரி தான் ட்ராவல் பண்ணமுடியும் . என்ன ரீசன்னு தெரியல . நீயும் நானும் ஒன்னா வந்து , இங்க இந்த சித்தர்கிட்ட  நம்மோட பெட்ரோல கொடுத்து , நம்மகிட்டயே தர சொல்லிருக்கோம் . நம்மோட ஃப்யூச்சர , நாமளே நேர்ல பார்த்தா , ஹிஸ்டரியே மாறிடும் . சோ , நாமதான் இங்க வந்து நம்மகிட்டயே கொடுக்கசொல்லிருக்கோம் .’

என்னடா சொல்ற ?இதெல்லாம் நிஜமா ?
வியப்பு மேலிட பாலாவை கேட்டான் சந்துரு .

ஆமா ! இப்போ உடனே , நாம மெஷின்கிட்ட போய் இதவச்சி, கரிகாலன் காலத்துக்கு போகனும்

அவனோட காலம்னு எப்படி கண்டுபிடிப்ப ?

ஒன்னும் பிரச்சனையில்ல . அந்த முனிவர் அதுக்கும் ஐடியா கொடுத்திருக்காரு . சரியா 175 வருஷம் , நாம இங்கிருந்து பின்னாடி போகனும் .

சரி . அப்படினா ஒன்னு பன்னலாம் . நாம இங்கருந்து போகனும்னா மறுபடியும் நடந்துபோக முடியாது.  சோ ,நீ வெயிட் பண்ணு . நா எங்கயாச்சும் போய் , ஏதாச்சும் குதிரவண்டி பிடிச்சுட்டு வரேன் .

‘சரி . நீ அப்படியே பண்ணு மச்சி




சந்துருவுக்கு பலவிதமான  எண்ணங்கள் மனதில் ஓடினாலும் , எப்படியோ , இக்காலத்தில் இருந்து செல்லப்போகிறோம் என்ற எண்ணம் மேலிட ஆரம்பித்தது . ஆனால் , அவன் மனதின் ஓரத்தில் , அவ்வணிகனுடன் மேற்கொண்ட பயணத்தைப்பற்றிய எண்ணமும் உருண்டோடியது . மன்னன் செய்ததில் தவறுமில்லை என்று சிலசமயம் தோன்றியது . நீதி , நேர்மை என  அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் , பழிக்கு அஞ்சி உயிரையும் விடுவது , அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது . வீதிவிடங்கன் , முகத்தில் புன்னகை தவழ மரணத்தை வரவேற்றது , அவனுக்கு அதிசயத்தையும் கொடுத்தது .சாதாரண வாணிகனான , ஒரு இளைஞன் , தன்னாட்டிற்கு ஒரு துயரம் என்றதும்  , உயிரையும் பொருட்படுத்தாது , வாளினை எடுத்து , எதிரியின் நெஞ்சில் இறக்கியதை எண்ணும்போது , உடல் சில்லிட்டது . அதேநேரத்தில் பாலாவுக்கும் , அதேபோன்றதொரு உணர்வே ஓடிக்கொண்டிருந்தது . மகனை இழந்த மன்னன் என்ன ஆனான் ? இவ்வளவு நாகரீகமுள்ள மனிதர்கள் அக்காலத்தில் எப்படியெல்லாம் வாழ்ந்துள்ளார்கள் என்று எண்ணி பேருவுவகை அடைந்தான் . சிறிது நேரத்திற்கு பின் , சந்துரு இரண்டு குதிரைகள் கட்டப்பட்ட ஒரு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான் .

பாலா ! வா . ஏறுடா

சந்துரு . உனக்கு குதிரவண்டி ஓட்டத்தெரியுமா ?

யாருக்கு தெரியும் . சும்மா ஹை ஹை னேன் . அதுவா போகுது

டேய் ! ஏற்கனவே நடந்ததெல்லாம் , இப்போ தான பார்த்த ?

சீ ! அந்த மாதிரிலாம் ஆகாது டா’

சரி . குதிரவண்டி வாங்க என்ன பன்ன ? திருடிக்கிட்டு வந்துட்டியா ?

டேய் . மெல்ல பேசுடா . எவனாச்சும் கேட்டு , மன்னர்கிட்ட கோத்துட்டுற போறான் .’

சரி . இத எப்படி வாங்குன ?

முருகன்தான் காப்பாத்துனாரு .

யார்ரா அந்த முருகன் ?

அந்த முருகன் டாலர் போட்ட செயின கொடுத்துக் கேட்டேன் . அதுக்காக , இந்த குதிர வண்டியும் , கூடவே கொஞ்சம்  தங்கக்காசும் கொடுத்தானுங்க .

என்னடா ? அந்த செயினுக்கு , இவ்வளவு தங்கமா ?அந்த செயினு ரெண்டு பவுனு தேறுமா ? ஆனா, இந்த காசெல்லாம் சேர்த்தா எப்படியும் அரைகிலோ தேறுமேடா

அதான் எனக்கும் ஆச்சரியமா இருந்துச்சி . ஒருவேள அந்த செயின் மேக்கிங்டிசைன் பாத்துட்டு கொடுத்துட்டாங்கனு நினைக்கிறேன்’

சரி சரி . அப்படியே கிளப்பு. போலாம் ’இருவரும் கூறிவிட்டு கிளம்பினர் . அதேநேரம் , அருகில் இருந்து இரு உருவங்கள் , அவர்கள் இருவரையும் மறைந்திருந்த வண்ணம் கவனித்துக்கொண்டிருந்தன . யாரென்று உற்றுநோக்கினால் ,



என்ன மச்சி. இவ்வளவு கோபப்படுற ?’ - பாலா

ஆமா ! பின்ன இருக்காத ’ - சந்துரு

‘ம் . 5 வருஷம் கஷ்டப்பட்டு பெட்ரோல் கண்டுபிடிச்சி கொடுத்துருக்கேன் . எதுவும் கிடையாத எனக்கு ?’ - பாலா

இரு . என் தங்கச்சிக்கிட்ட சொல்லி கோர்த்துடறேன்’ - சந்துரு

சொல்லு . நானும் சொல்றேன் .நீ நேத்து கள்ளுக்கடைக்கு போனது . குடிச்சிட்டு எங்க வீட்டுல வந்து கிடந்தது எல்லாத்தையும் சொல்வேன்’

டேய் வேணாம்டா ! அப்புறம் அவ செம காண்டாயிடுவா .சரி வா . நம்ம டைம்மெஷின்கு போய் , நம்ம வாழ்க்கைய தொடரலாம்

‘ம் சரிடா

என்று கூறியவாறே , ஒரு மூலையிலிருந்து இருவரும் வெளிப்பட்டு டைம்மெஷினை அடைந்தனர் . அவர்கள் இருவரும் தான் , சிறிது நேரத்திற்குமுன் , அந்த சித்தரிடம் வந்து  , அந்த பெட்ரோலை ,தங்களுக்கே கொடுக்காமறு வேண்டிக்கொண்ட பாலா, சந்துரு . இவர்களின் , 5 வருடத்திற்கு முந்தைய வாழ்க்கையை தூரத்திலுருந்து பார்த்தவாறே இருந்தனர் . பின் , தங்களின் வாழ்க்கையை தொடர , டைம்மெஷினை நோக்கி சென்றனர் .




இன்னொருபுறம் , நம் கதையின் நாயகர்களான பாலாவும் , சந்துருவும் , குதிரைவண்டியில் சிறிது வேகமான பயணத்தை தொடர ஆரம்பித்தனர் . ஏற்கனவே , அவ்வணிகனுடன் வந்த பாதை என்பதாலும் , மேலும் , தங்களைப்போலவே ஆங்காங்கே சிலர் பயணம் மேற்கொண்டிருந்ததாலும்  , அவர்களின் பயணம் எளிமையானதாக இருந்தது . பசித்தால் , கையில் இருக்கும் பொற்காசுகளைக்கொண்டு உணவருந்தி விட்டுசென்றனர் . இருட்டும் நேரத்தில் , குதிரைகளின் வேகத்தால் ,கச்சிப்பேட்டை அடைந்தனர் .ஏற்கனவே , அவர்கள் படுத்துறங்கிய மண்டபத்தில் உறங்கி விட்டு  , காலையில் அதே ஏரியில் குளித்துவிட்டு வேகவதி ஆற்றின் கரையோரம் வந்தனர் . அங்கே வழிகேட்டு , ஆற்றின் ஆழமில்லாத பகுதியின் வழியே கரையை கடந்தனர். பின் , மீண்டும் குறிஞ்சி நிலத்தின் ஊடான பயணத்தின்வழி , அடுத்த 3 மணிநேரத்தில் , தங்களின் டைம்மெஷினை நெருங்கினார் .

மச்சி ! இந்த ஸ்பாட் தான ? ’ - சந்துரு

ஆமாண்டா ! தோ . அங்க இருக்குப்பாரு . ’ - பாலா

சரி வா ! பெட்ரோல் ஃபில் பண்ணலாம் .’ - சந்துரு

இருவரும் டைம்மெஷினை சரிசெய்து , கிளம்ப ஆரம்பித்தார்கள் .

‘மச்சி ! ஒருநிமிஷம்டா- பாலா

என்ன மச்சி ?’ - சந்துரு

இங்கயே நாம டைம்ட்ராவல் பண்ணா , மறுபடியும் , இங்க இருந்து ஒவ்வொரு ஊரா திரியனும் . அதுவுமில்லாம , இந்த குதிரவண்டியும் மறைஞ்சிடும் . அதையும் நம்மக்கூட கூட்டிட்டு போகமுடியாது . சோ , நாம டைம்மெஷினோட இங்கிருந்து தஞ்சாவூர் கிளம்பலாம் .அங்கபோயிட்டு , டைம் ட்ராவல் பண்ணிக்கலாம் . ’ - பாலா

சூப்பர்ப் மச்சி . சரி . இந்த டைம்மெஷின எப்படி எடுத்துட்டு போறது ?’ - சந்துரு

இருடா ! நா டிஸ்மேன்டில் பண்ணித்தரேன் . அங்க போனதும் ஃபிக்ஸ் பண்ணிக்கிலாம்’ - பாலா

‘டேய் ! டிஸ்மேன்டல் பன்றேன்னு சொல்லி , ஏதாச்சும் ரிப்பேர் பண்ணிடாதடா ? இங்க ஒரு ஸ்பேனர் , போல்டு கூட கிடைக்காது ’ - சந்துரு

ச்சீ ச்சீ ! அதெல்லாம் தேவையில்ல மச்சி. நா இத புல்ட்- இன் – வொர்க் மெத்தேட்லதான் டிசைன் பண்ணிருக்கேன் . நோ போல்ட்’ - பாலா




சிறிது நேரத்திற்குப்பின் , டைம்மெஷினை கழட்டி , குதிரைவண்டியில் இருந்த கோணிப்பையினுள் இருவரும் பத்திரப்படுத்தினர் . தங்களின் தஞ்சைநோக்கிய பயணத்தை ஆரம்பித்தனர் . அடுத்த நாள் காலை , தஞ்சையை அடைந்தனர் . தஞ்சை , அப்போது சிற்றூர் போன்ற அமைப்புடன் காணப்பட்டது . ஊரெங்கிலும் , மகனை முறைசெய்த மன்னவன் பேச்சாய் விஸ்தரித்திருந்தது .

‘ஏனுங்கோ ! நம்ம ராசா இலங்கைக்கு போறாராமே ?’

‘ஆமாங்கோ ! மகன விட்டு வாழமுடியாம தவிக்கிறாரு . இப்போ , இலங்கமேல படையெடுத்துப்போறதா சொல்றாங்க’

என்று ஆங்காங்கே மக்கள் பரவலாக பேசிக்கொண்டிருந்ததை இருவரும் கேட்டனர் . பின் , ஊரின் அருகிலிருக்கும் காட்டிற்குள் நுழைந்து , டைம் மெஷினை தயார் செய்து , மீண்டும் காலத்தைக்கடந்தனர் .


    -தொடரும்  



இதன் தொடர்ச்சியைப்படிக்க



பயணம் @ டைம்மெஷின் ,
அத்தியாயம் – 3
பகுதி -6
பயணத்துள் பயணம்
©

Megneash K Thirumurugan @ Myfreecopyrights.com

Comments

  1. ‘டேய் ! டிஸ்மேன்டல் பன்றேன்னு சொல்லி , ஏதாச்சும் ரிப்பேர் பண்ணிடாதடா ? இங்க ஒரு ஸ்பேனர் , போல்டு கூட கிடைக்காது ’/// hahaha. super thodarungal sir.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க தல !!!

      Delete
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  3. Replies
    1. மன்னிச்சிடுங்க தல ! ிப்போது நானிருக்கும் இடத்தில் சரியானதொரு தொலைதொடர்பு வசதியில்லாத காரணத்தினால் தான் இரு மாதங்களாய் எழுதமுடியவில்லை . ிப்போது 9 மற்றும் 10 பாகம் வெளியிட்டுள்ளேன் . இன்னும் ஒரு வாரத்தில் கதையை முடிக்கப்போகிறேன் .

      தொடர்ந்து ஆதரவளித்ததற்கு நன்றி தல

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை