லிங்கா - சினிமா விமர்சனம்



4 வருடங்களுக்குப்பின் ரஜினி திரைப்படம் , அதுவும் ரவிக்குமார் இயக்கத்தில் , ரஜினியின் பிறந்தநாளன்றெ ரிலிஸ் என்பதால் எக்கச்சக்க எதிர்பார்ப்பு ! அதையெல்லாம் படம் பூர்த்தி செய்ததா ?


படத்தின் கதை பத்திரிக்கை , இணைய விமர்சகர்களால் ஏற்கனவே பிரித்து மேயப்பட்டுவிட்டன . எனவே கதை பற்றி தெரியாதவர்கள் மட்டும் இந்த பத்தியை படிக்கவும் . மற்றவர்கள் நேரே அடுத்த பத்திக்கு வந்துவிடுங்கள் . சோலையூர் எனும் ஊரில் அணைக்கட்டை ஆராய வரும் என்ஜினியர் பொன்வண்ணன் , அவ்வூரின் எம்பியால் கொலை செய்யப்படுகிறார் . பொன்வண்ணன் சாகும்போது , அணையை ஒட்டியுள்ள கோவிலில் ஒரொ ருத்ராட்ச மாலையை தூக்கியெறிந்துவிட்டு ,  ஊர்ப்பெரியவரிடம் அந்த கோயிலை திறந்தால்தான் அவ்வூரைக் காப்பாற்ற முடியுமென சொல்லி இறக்கிறார் . அந்த கோயிலை திறக்கவேண்டுமெனில் அணையையும் அக்கோவிலையும் 70 ஆண்டுகளுக்குமுன் கட்டிய ராஜா லிங்கேஸ்வரரின் வாரிசு தான் திறக்கவேண்டும் என சத்தியம் செய்யப்பட்டுள்ளதால்  , அந்த ராஜாவின் வாரிசை அவ்வூர்வாசிகள் தேடிச்செல்கின்றனர் . ஊர்ப்பெரியவரின் பேத்தியும் , நியூஸ் ரிப்போர்ட்டருமான அனுஷ்கா , ராஜாவின் பேரனான லிங்காவை கண்டறிகிறார் . ஆனால் திருட்டுத்தொழில் செய்யும் லிங்கா , தன் நிலைமைக்கு தன்னுடைய தாத்தாவே காரணம் என்பதால் வரமறுக்கிறார் . ஒருகட்டத்தில் வேறுவழியில்லாமல் ஒத்துக்கொள்ள , சோலையூருக்கு ரஜினி மற்றும் அவருடைய நண்பர்கள் சந்தானம் , கருணாகரன் ஆகியோர் செல்கின்றனர் . அந்த பெரியவரின்மூலம் , அணைக்கட்டு கோவிலில் இருக்கும் மரகதலிங்கத்தைப்பற்றி அறியும் ரஜினி அண்ட் கோ , அதைத்திருட முயற்சி செய்கின்றனர் . அதை ஊர்க்காரர்கள் பார்த்துவிட , ரஜினி  கோவிலை திறந்து பூஜை செய்வதுபோல் நடிக்கிறார் . அப்போது ஊர்க்காரர்களிடம் , ரஜினியின் தாத்தாவும் ராஜாவுமான லிங்கேஸ்வரனைபற்றி ஊர்ப்பெரியவர் கூறுகிறார் . 1939 –ல் , பிரிட்டிஷ் ஆட்சியின்போது கலெக்டராக அறிமுகமாகும் ராஜா , சோலையூருக்கு அணை கட்ட பிரிட்டிஷாரிடம் கேட்கிறார் . ஆனால் அதைமறுக்கிறது பிரிட்டிஷ் அரசாங்கம் . கோவமடைந்த ரஜினி , தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் சொந்த பணத்தில் அணையை கட்டிமுடிக்கிறார் . கட்டிமுடிக்கும் தருவாயில் சிலரின் நயவஞ்சகத்தால் ¸தன் சொத்துமுழுதும் இழந்து , ஊர்க்காரர்களிடமும் அவமானப்பட்டு அவ்வூரைவிட்டு செல்கிறார் . அவருடைய தியாகத்தை பின்னரே உணரும் மக்கள் , அவரிடம் சென்று தங்களின் ஊருக்கே வருமாறு கெஞ்சுகின்றனர் . ஆனால் அதைமறுத்துவிடுகிறார் ராஜா . அவர் வந்து தான் திறக்கவேண்டுமென்று அப்போதைய ஊர்த்தலைவரான விஜயக்குமார் சத்தியம் செய்துவிடுகிறார் . அதன்பின் தான் தனது தாத்தாவின் பெருமைகளை உணரும் ரஜினிக்கு , ஊர்ப்பெரியவரின்மூலம் ஒரு உண்மை வெளிப்படுகிறது . அதாவது , மீண்டும் சோலையூருக்கு ஒரு மாபெரும் ஆபத்து வந்துவிட்டது என்பதும் அதை பேரன் ரஜினிதான் தீர்த்துவைக்கவேண்டுமென்பதுதான் . அதன்பின் என்ன ஆனது என்பதே திரைப்படம் .




முதலில் இப்படத்தில் வறிந்து கட்டி திட்டப்படவேண்டியவர் ரஹ்மான் தான் . முதலிரண்டு பாடல்கள் மட்டும் சுமாரக கொடுத்துள்ளார் .மற்றபடி ஏனோதானோ என்று முடித்துக்கொடுத்துள்ளார் . கடைசியாக படையப்பாவிற்குப்பின் ரஜினிக்கு ரஹ்மான் அடித்து தூள் கிளப்பிய பாடல்கள் சிவாஜியில் மாத்திரம் இருந்ததாக ஞாபகம் . முதல் பாடலே , கோச்சடையான் படத்தின் பாட்டை மீண்டும் ரீமேக்காக்கியிருக்காரோ என எண்ணவைக்கிறது . பிண்ணனி இசை படுமோசம் . இவருடைய இசையினால்தான் பலமான இடங்கள் கூட படுகேவலமாக இருந்தது. தயவு செய்து அடுத்த படங்களில் ரவிக்குமாரும் , ரஜினியும் ரஹ்மானை பயன்படுத்துவதைப்பற்றி யோசிக்கவேண்டும் . ரவிக்குமார் அவசரகதியில் பாடலை ஓகே செய்தாரா ? இல்லை ரஹ்மானின் இசைத்திறம் வறண்டுவிட்டதா என எண்ணுமளவிற்கு இருக்கிறது இசை .


அடுத்து பாராட்டப்படவேண்டியவர் எடிட்டர் . ஆறே மாதத்தில் படம் முடிப்பதெல்லாம் ஓகே ! ஆனால் அதெற்கென்று அவசரகதியில் ஏனோதனோவென்று எடுத்து எடிட்டரிடம் கொடுத்துவிட்டார்கள் போல . அவரும் தன் திறமை முழுதையும் காட்டி , கத்தரித்து ஒட்டியுள்ளார் . அவர் மட்டும் இல்லையெனில் , நோலனின் படம் போல் ஆங்காங்கே துண்டுதுண்டாய் படம் இருந்திருக்கும் .கலை இய்க்குநரும் முடிந்தவரை பிரம்மாண்ட செட்களை அழகாக வடிவமைத்துள்ளார் . அந்தகால கார் , கண்ணாடி , மாளிகைகள் போன்றவையெல்லாம் முடிந்தவரை செட் போட்டு தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார். இதேபோல் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவையும் பாராட்டியாகவேண்டும் .மனிதர் தீயாய் வேலை செய்துள்ளார் . பிரம்மாண்ட காட்சிகளை எடுப்பதில் ஏற்கனவே ஷங்கரிடமும் , வித்தியாசமான கேமரா ஆங்கிளை செட் செய்வதில் கௌதம் மேனனுடம் வேலைசெய்துள்ளதால் , இவ்விரண்டும் இப்படத்தில் இவருக்கு கைக்கொடுத்துள்ளது .


ஏங்க கிராபிக்ஸ் டிசைனர் ஐஸ்வர்யா ! உங்களால இவ்வளவு தான் முடியுமா ? முதலில் படத்தில் கிராபிக்ஸ் என்பது இருப்பதே தெரியாத அளவுக்கு காட்சி அமைப்பதுதான் கிராபிக்ஸ் டிசைனரின் வேலை . அதைவிட்டு விட்டு , அச்சுஅசலாய் இதெல்லாம் கிராபிக்ஸ் என்பது பட்டவர்த்தனமாய் தெரியுமளவிற்கா காட்சிப்படுத்துவிர்கள் ? ட்ரெய்ண் சண்டைக்காட்சிகளில் அப்படியே தி வேம்பைர் ஹண்டர் படத்தின் சண்டைக்காட்சுகளின் எதிரொலிப்பு தெரிகிறது . அதுவும் கிளைமேக்சில் ரஜினி பைக் ஓட்டி செல்லும் காட்சிகளெல்லாம் அந்த கால எம்.ஜி.ஆர் கால டெக்னிக் . படுகேவலமாய் இருந்தது . இந்த டைட்டில் டிசைனரை எங்கிருந்து பிடித்து போட்டார்களோ தெரியவில்லை . அவரும் தன் பங்கிற்கு தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் பாட்ஷா படத்தின் டைட்டில் டிசைனை சுருட்டி போட்டுவிட்டார் .



படத்தில் பாராட்டப்படவேண்டியவர் மேக்கப்மேன் . சிவாஜி , எந்திரனைக்காட்டிலும் இளமையான ரஜினி பெரும்பாலான காட்சிகளில் தெரிகிறார் . அதேபோல் துடுக்குத்தனம் , கம்பீரம் போன்றவை பளிச்சென ரஜினியிடம் இன்னும் மிளிர்வது ஆச்சரியம் தான் .படத்தில் இரு ஹீரோயின்கள் . அனுஷ்கா முகத்தில் இருக்கும் அழகு , முதுகில் இல்லை . இப்படியே கொழுத்துக்கொண்டு போனால் , இன்னும் இரண்டு ஆண்டுகளில் சின்னத்திரையில்தான் வாழ்க்கை . சோனாக்ஷி சின்ஹா இந்தி மார்க்கெட்காக பயன்படுவார் .தமிழில் ஏனோதானோவென்று இருக்கிறார் . ஆனால் அவரது குரும்பான நடிப்பு நன்றாயிருந்தது . ரஜினியும் சந்தானமும் அடிக்கும் பல காமெடிகள் ஹா ஹா ரகம் . ரஜினியைப்பற்றி கூற வேண்டாம் . படையப்பா படத்தில் நான் பார்த்த ரஜினியை மீண்டும் அதேமாதிரி காண்கிறேன் . என்ன , கிளைமேக்ஸ் காட்சிகளில் இது ரஜினியில்லை என்று தெரிதும் பார்க்கும் போது கொஞ்சம் சிரிப்பு வருகிறது . தெலுங்கு வில்லன் ஜெகபதிபாபுவை வைத்து காமெடியாக்கி இருக்கிறார்கள் . அவரைப்பார்த்தால் வில்லன் எனும் ஃபீலிங்கே வராத அளவிற்கு இருக்கிறது. தெலுங்கு மார்கெட்காக சிலபல ஓவர் ஆக்சன் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். ரவிக்குமார் தான் கொஞ்சம் பாவம் .ரஜினியின் கட்டளைக்காக ஆறுமாதத்தில் உழைத்து இப்படத்தினைமுடிந்தவரை சிறப்பாக எடுத்துள்ளார் . ஆனால் சி இடங்களில் தன் முத்திரையை பதிக்கத்தவறினாலும் , மொத்தமாக இது ரவிக்குமார் படம் என்பதை உணர்த்திவிடுகிறார் . ரவிக்குமாருக்கு இன்னும் சிறிதுகாலம் டைம் கொடுத்து பொங்கலுக்கு பொறுமையாக வந்திருந்தால் , ஒரு சூப்பர் டூப்பர் மெஹா ப்ளாக்பஸ்டராகியிருக்கும் . எல்லோரும் கூறுவதைப்போல மொக்கையெல்லாம் இல்லை . படம் நன்றாக தான் இருக்கிறது . படம் முடியும் போது ப்ளாஸ்பேக்கை குறைத்து நடப்பு நிகழ்வுகளை அதிகரித்திருக்கலாமோ என்ற எண்ணம் மட்டும்தான் தோன்றுகிறது . இது ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட் . நடுநிலை ரசிகர்களுக்கு என்டர்டெய்ன்மென்ட் திரைப்படம் . குடும்ப ஆடியன்சுக்கும் பிடிக்கும் வண்ணம்தான் திரைப்படம் உள்ளது . 

Comments

  1. நல்ல விமர்சனம் ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. www.facebook.com/kasthurirengan74 இது என் முகநூல் முகவரி வருக

    ReplyDelete
  3. நேர்மையான விமர்சனம்.படம் ஒன்றும் சூப்பர் டுப்பர் டைப் கிடையாது.முதலுக்கு மோசம் இல்லேன்னா ஓகே.

    ReplyDelete
  4. நடுநிலையான விமர்சனம் !கதை படம் பார்க்க தூண்டும் படி இல்லை !

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பார்க்கற டைப் படம் இல்லைங்ணா ! ஆனா என்டர்டெய்ன்மென்டா இருக்கும் !

      Delete
  5. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete
  6. Good review sir. very natural and neutral review.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை