காதல் காதல் – தொடர்கதை – 4
முதல் பாகத்தைப்படிக்க
இங்கே அழுத்துங்கள் .
இரண்டாம் பாகத்தைப்படிக்கஇங்கே அழுத்துங்கள் .
மூன்றாம் பாகத்தைப்படிக்க
இங்கே அழுத்துங்கள் .
அன்றைய இரவு ,
கொசு கடிப்பதுகூட அழகாய் இருந்தது மதனுக்கு . படுக்கையில் உருண்டு புரண்டு பாழ்படித்துக்கொண்டிருந்தான்
. வீட்டில் அனைவரிடமும் சம்பந்தமே இல்லாமல் சந்தோஷமாய்ப்பேசினான் .அவனின் அதீத சந்தோஷத்தின்
காரணம் புரியவில்லை . கண்ணனிடம் ஏற்கனவே பஸ்ஸினுள்
நடந்த நிகழ்ச்சிகளை தெரிவித்திருந்தான் .
‘மச்சி ! நாளைக்கு
மார்னிங் அவ வர்ற பஸ்ல வந்துடாத . அப்படி போனா சப்புனு முடிஞ்சிடும் . அவள ஏங்க வைக்கனும்
. அப்போதான் ஈவ்னிங் மீட் பண்றப்ப , செம டச்சிங்கா இருக்கும் ’ என்ற கண்ணனின் அறிவுரை
, மதனை வாட்டினாலும் கஷ்டப்பட்டாவது காலையில்
அவளைத்தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான் . ஆனாலும் முடியவில்லை . மறுநாள்
காலை 5 மணிக்கே குளித்து ரெடியாகி விட்டான் . கண்ணனின் பேச்சைக்கேட்பதா ? கன்னியின்
பேச்சைக்கேட்பதா ? என்று குழப்பிக்கொண்டிருந்தான் . 7 மணிக்கே பஸ் ஸ்டாப்பில் வந்துநின்றான்
. தயிர்க்கூடையைத்தூக்கி கொண்டு பால் மார்க்கெட் செல்வதற்காக ஒரு கிழவி காத்திருந்தாள்
. பஸ் ஸ்டாப்பில் உள்ள டீக்கடைகளில் வழக்கம்போல் வெட்டிநாயம் பேசிக்கொண்டு சிலர் இருந்தனர்
. வேறுவழியே இன்றி நேரத்தைக்கடத்த தினத்தந்தியின் வரிவிளம்பரங்கள் உட்பட அனைத்தையும்
படித்துக்கொண்டிருந்தான் . அவர்களிருவரும் பயணிக்கும் 8.15 பேருந்து வந்தது . அதைத்தூரத்திலிருந்து
பார்த்ததும் ஓடிச்சென்று டீக்கடைக்குள் ஒண்டிக்கொண்டான் . அங்கிருந்தபடியே தன் காதலியைத்தேடியவனுக்கு
அவளின் முகம் தெரியவில்லை . அவள் இருக்கிறாளா என்பது கூடத்தெரியவில்லை . ஆனால் மாலினி
இருப்பது மாத்திரம் நன்றாய் தெரிந்தது . பஸ் கிளம்பியபின் சோகமாய் அடுத்த பஸ்ஸுக்காக
காத்திருந்தான் . அன்றைய தினம் வாழ்வின் ஒட்டுமொத்த வெறுமையையும் ஒன்றுகூடி இவனை வெறுத்தாற்போல
ஏங்கித்தவித்தான் . கண்ணனிடம் கூட சரியாய் பேசவில்லை . அவளின் முகத்தைப்பார்த்திருந்தாலாவது
சந்தோஷத்துடன் இருந்திருப்பான் . அவனை ஆட்கொண்ட அவளின் முகம் , அவனை எந்தவொரு விஷயத்திலும்
ஈடுபடாமல் தடுத்து்ககொண்டிருந்தது . வேறுவழியே இல்லை என்று முடிவெடுத்தவன் மதியமே காலேஜ்
காம்பவுன்டை எகிறிக்குதித்து , அவளின் காலேஜ் செல்லத் தீர்மானித்தான் . அவளின் காலேஜுக்கு
எதிரே இருக்கும் பார்க்கில் அமர்ந்தவாறு நேரத்தைக்கடத்திக்கொண்டிருந்தான் . கண்ணனும்
தேவியுடன் சினிமாவுக்கு சென்றுவிட்டான் .
அப்படி இப்படி
என்று நேரம்கடந்தது . எல்லாம் சிறையிலிருந்து விடுபட்ட கைதிகளாய் உற்சாகமாய் கேட்டை
பிளந்து கொண்டு வந்தனர் . அவன் பெரிதும் எதிர்பார்த்தவளும் தோழிகள் படைசூழ வந்தாள்
. நேராய் அவர்களுக்கருகே கிளம்பியவன்
‘ஹாய் மாலினி
!’ என்றான் .
‘ஏன்ணா காலைல வர்ல
?’
‘இல்லம்மா ! கொஞ்சம்
பிஸியா இருந்ததால வரமுடியல . ஏன் , உன் ஃப்ரெண்டு ரொம்ப ஃபீல் பண்ணாலா ?’
‘ஆமாங்ணா ’ என்றாள்
பரிதாபமாக . அவளின் முகம் மட்டுமல்ல , மதனின்
உயிரின் முகமும் வாடியிருந்தது . கண்ணங்கள்
லேசாய் வீங்கியது போன்றிருக்க , கண்களோ அழுது சிவந்தது போலிருந்தது . அதைக்கண்டவனுக்கு
எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும் ?
‘ஹேய் அம்மு !
என்னடி ஆச்சு ?’
‘ம்ஹும் . ஒன்னுமில்ல
’
‘ஹேய் சொல்லுடிங்றேன்ல
’
‘அதான் ஒன்னுமில்லனு
சொல்றேன்ல .’
‘மாலினி ! என்ன
ஆச்சு ?’
‘அது ’ என்று மாலினி
வாயெடுக்கும்முன் அவளை ‘ஷட் அப்’ என்று முறைத்தாள் மையல் .
‘அவ கிடக்கறா
. நீ சொல்லு மாலினி ’
‘காலைல ஒரு பையன்
வந்து மையல மிரட்டுனான் ண்ணா . அவன இவ லவ் பண்ணனுமாம் . இல்லாட்டி நாசம் பண்ணிடுவேன்
அது இதுனு மிரட்டுறான் ணா . இப்போ அவன் பஸ் ஸ்டான்ட்ல வெயிட் பண்ணிட்ருப்பான் . இவ
போய் அவங்கிட்ட லவ்வ சொல்லனும்னு சொல்லிருக்கான் .’
உச்சந்தலைக்கும்
உள்ளங்காலுக்கும் ஒரு மைக்ரோவிநாடியில் ரத்தம் பாய்வதுபோல வெகுன்டெழுந்த மதன் , ஒரு
நிமிடம் அக்கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்டான் .
‘ஹே அம்மு . அவன நீ லவ் பண்றியாடி ?’
அவன் கேட்டதும்
அவனைச் சுட்டுச்சாம்பலாக்குவது போல் தன் விழியால் எரித்தாள் . உஷ்ணம் தாங்காத மதன்
, அவளிடம் நைசாக நழுவ பார்த்தான் .
‘ஹேய் மாலினி .
அவகிட்ட காசு இருக்கா ?’
‘இருக்குணா .’
‘சரி . நீங்கலாம்
இந்தக்கடைல ஐஸ்கிரீம் சாப்புட்டு பொறுமையா பஸ் ஸ்டான்டுக்கு வாங்க . இன்னைக்கும் நேத்து
மாதிரியே 5.45 பஸ்ஸுக்கே போயிடலாம் . நா பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பன்றேன் . மாலினி ! நீ
மட்டும் எங்கூட வா .’
‘எதுக்குணா ?’
‘வா சொல்றேன்
.’
மாலினி தயங்கியவாறே
உடன் வர பஸ் ஸ்டான்டை நோக்கி நடந்தான் . வேகவேகமாய் ஐஸ்கிரிமை விழுங்கிவிட்டு , தோழிகளையும்
வேகமாய் சாப்பிடுமாறு ஆனையிட்டுக்கொண்டிருந்தாள் மையல் . பஸ் ஸ்டாண்டில் என்ன நடக்கோப்போகிறதோ
என்ற பயம் வேறு அவளுக்கு . எதுக்கு இவன் மாலினிய கூட்டிட்டுப்போனான்னு தெரியலையே என்று
குழம்பியவாறே சென்றடைந்தாள் . தங்களின் பஸ் நிற்குமிடத்தில் மாலினி மாத்திரம் நின்றுகொண்டிருந்தாள்
. பெரும்பாலான கல்லூரி இளைஞர்களை அங்கு காணவில்லை.
‘எங்கடி அவங்க
?’
‘மதன் அண்ணா அந்த
பையன் யாருனு கேட்டாரு . நான் கை காமிச்சேன் , அவன்கிட்ட பேசுறதுக்கு போறேன்னு சொல்லிட்டு
போனாரு . அப்புறம் கொஞ்ச நேரத்துல ரெண்டு பசங்க வந்தானுங்க . அவனுங்க கூட இங்க இருந்த
பசங்களும் கிளம்பி போனாங்க . என்ன ஆச்சுனு தெரியலை டி ’
-இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
Total how many Part
ReplyDeleteஎத்தனை பார்ட்னு இன்னும் முடிவு பண்ணல மச்சி ! ஆனா , நாளைக்கு முழுக்கதையும் முடிஞ்சிடும் . கருத்துக்கு நன்றி மச்சி .
Delete#என்ன ஆச்சுனு தெரியலை டி ’#
ReplyDeleteஎன்ன ஆச்சுன்னு சீக்கிரம் சொல்லுங்க :)
நாளைக்கு காலைல சொல்லிடுவா ணா !
Deleteகதை நகர்வு நன்று
ReplyDeleteபடிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்
வருகைக்கும் மேலான கருத்துக்கும்நன்றி அண்ணா !
Deleteசுவாரஸ்யமாக செல்கிறது...
ReplyDeleteஆனால் ஒரே நாளில் பல பதிவுகள் கூடாது நண்பா...
எனக்கு இந்த சஸ்பென்ஸ்லாம் பிடிக்காது ணா ! படிக்கறவங்க சீக்கரம் அனுபவிச்சடனும் . அதவிட்டுட்டு ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்க வைக்கக்கூடாதுனு நினைப்பேன் . அதான் இப்படி ,
Deleteஆனால் நீங்கள் கூறுவது நிஜம் தான் ணா !
நன்றிணா