காதல் காதல் – தொடர்கதை – 4



முதல் பாகத்தைப்படிக்க இங்கே அழுத்துங்கள் .
இரண்டாம் பாகத்தைப்படிக்கஇங்கே அழுத்துங்கள் .
மூன்றாம் பாகத்தைப்படிக்க இங்கே அழுத்துங்கள் .



அன்றைய இரவு , கொசு கடிப்பதுகூட அழகாய் இருந்தது மதனுக்கு . படுக்கையில் உருண்டு புரண்டு பாழ்படித்துக்கொண்டிருந்தான் . வீட்டில் அனைவரிடமும் சம்பந்தமே இல்லாமல் சந்தோஷமாய்ப்பேசினான் .அவனின் அதீத சந்தோஷத்தின் காரணம் புரியவில்லை . கண்ணனிடம் ஏற்கனவே  பஸ்ஸினுள் நடந்த நிகழ்ச்சிகளை தெரிவித்திருந்தான் .

‘மச்சி ! நாளைக்கு மார்னிங் அவ வர்ற பஸ்ல வந்துடாத . அப்படி போனா சப்புனு முடிஞ்சிடும் . அவள ஏங்க வைக்கனும் . அப்போதான் ஈவ்னிங் மீட் பண்றப்ப , செம டச்சிங்கா இருக்கும் ’ என்ற கண்ணனின் அறிவுரை  , மதனை வாட்டினாலும் கஷ்டப்பட்டாவது காலையில் அவளைத்தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான் . ஆனாலும் முடியவில்லை . மறுநாள் காலை 5 மணிக்கே குளித்து ரெடியாகி விட்டான் . கண்ணனின் பேச்சைக்கேட்பதா ? கன்னியின் பேச்சைக்கேட்பதா ? என்று குழப்பிக்கொண்டிருந்தான் . 7 மணிக்கே பஸ் ஸ்டாப்பில் வந்துநின்றான் . தயிர்க்கூடையைத்தூக்கி கொண்டு பால் மார்க்கெட் செல்வதற்காக ஒரு கிழவி காத்திருந்தாள் . பஸ் ஸ்டாப்பில் உள்ள டீக்கடைகளில் வழக்கம்போல் வெட்டிநாயம் பேசிக்கொண்டு சிலர் இருந்தனர் . வேறுவழியே இன்றி நேரத்தைக்கடத்த தினத்தந்தியின் வரிவிளம்பரங்கள் உட்பட அனைத்தையும் படித்துக்கொண்டிருந்தான் . அவர்களிருவரும் பயணிக்கும் 8.15 பேருந்து வந்தது . அதைத்தூரத்திலிருந்து பார்த்ததும் ஓடிச்சென்று டீக்கடைக்குள் ஒண்டிக்கொண்டான் . அங்கிருந்தபடியே தன் காதலியைத்தேடியவனுக்கு அவளின் முகம் தெரியவில்லை . அவள் இருக்கிறாளா என்பது கூடத்தெரியவில்லை . ஆனால் மாலினி இருப்பது மாத்திரம் நன்றாய் தெரிந்தது . பஸ் கிளம்பியபின் சோகமாய் அடுத்த பஸ்ஸுக்காக காத்திருந்தான் . அன்றைய தினம் வாழ்வின் ஒட்டுமொத்த வெறுமையையும் ஒன்றுகூடி இவனை வெறுத்தாற்போல ஏங்கித்தவித்தான் . கண்ணனிடம் கூட சரியாய் பேசவில்லை . அவளின் முகத்தைப்பார்த்திருந்தாலாவது சந்தோஷத்துடன் இருந்திருப்பான் . அவனை ஆட்கொண்ட அவளின் முகம் , அவனை எந்தவொரு விஷயத்திலும் ஈடுபடாமல் தடுத்து்ககொண்டிருந்தது . வேறுவழியே இல்லை என்று முடிவெடுத்தவன் மதியமே காலேஜ் காம்பவுன்டை எகிறிக்குதித்து , அவளின் காலேஜ் செல்லத் தீர்மானித்தான் . அவளின் காலேஜுக்கு எதிரே இருக்கும் பார்க்கில் அமர்ந்தவாறு நேரத்தைக்கடத்திக்கொண்டிருந்தான் . கண்ணனும்  தேவியுடன் சினிமாவுக்கு சென்றுவிட்டான் .

அப்படி இப்படி என்று நேரம்கடந்தது . எல்லாம் சிறையிலிருந்து விடுபட்ட கைதிகளாய் உற்சாகமாய் கேட்டை பிளந்து கொண்டு வந்தனர் . அவன் பெரிதும் எதிர்பார்த்தவளும் தோழிகள் படைசூழ வந்தாள் . நேராய் அவர்களுக்கருகே கிளம்பியவன்

‘ஹாய் மாலினி !’ என்றான் .

‘ஏன்ணா காலைல வர்ல ?’

‘இல்லம்மா ! கொஞ்சம் பிஸியா இருந்ததால வரமுடியல . ஏன் , உன் ஃப்ரெண்டு ரொம்ப ஃபீல் பண்ணாலா ?’

‘ஆமாங்ணா ’ என்றாள் பரிதாபமாக . அவளின் முகம்  மட்டுமல்ல , மதனின் உயிரின் முகமும் வாடியிருந்தது . கண்ணங்கள் லேசாய் வீங்கியது போன்றிருக்க , கண்களோ அழுது சிவந்தது போலிருந்தது . அதைக்கண்டவனுக்கு எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும் ?

‘ஹேய் அம்மு ! என்னடி ஆச்சு ?’

‘ம்ஹும் . ஒன்னுமில்ல ’

‘ஹேய் சொல்லுடிங்றேன்ல ’

‘அதான் ஒன்னுமில்லனு சொல்றேன்ல .’

‘மாலினி ! என்ன ஆச்சு ?’

‘அது ’ என்று மாலினி வாயெடுக்கும்முன் அவளை ‘ஷட் அப்’ என்று முறைத்தாள் மையல் .

‘அவ கிடக்கறா . நீ சொல்லு மாலினி ’

‘காலைல ஒரு பையன் வந்து மையல மிரட்டுனான் ண்ணா . அவன இவ லவ் பண்ணனுமாம் . இல்லாட்டி நாசம் பண்ணிடுவேன் அது இதுனு மிரட்டுறான் ணா . இப்போ அவன் பஸ் ஸ்டான்ட்ல வெயிட் பண்ணிட்ருப்பான் . இவ போய் அவங்கிட்ட லவ்வ சொல்லனும்னு சொல்லிருக்கான் .’

உச்சந்தலைக்கும் உள்ளங்காலுக்கும் ஒரு மைக்ரோவிநாடியில் ரத்தம் பாய்வதுபோல வெகுன்டெழுந்த மதன் , ஒரு நிமிடம் அக்கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்டான் .

‘ஹே  அம்மு . அவன நீ லவ் பண்றியாடி ?’

அவன் கேட்டதும் அவனைச் சுட்டுச்சாம்பலாக்குவது போல் தன் விழியால் எரித்தாள் . உஷ்ணம் தாங்காத மதன் , அவளிடம் நைசாக நழுவ பார்த்தான் .

‘ஹேய் மாலினி . அவகிட்ட காசு இருக்கா ?’

‘இருக்குணா .’

‘சரி . நீங்கலாம் இந்தக்கடைல ஐஸ்கிரீம் சாப்புட்டு பொறுமையா பஸ் ஸ்டான்டுக்கு வாங்க . இன்னைக்கும் நேத்து மாதிரியே 5.45 பஸ்ஸுக்கே போயிடலாம் . நா பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பன்றேன் . மாலினி ! நீ மட்டும் எங்கூட வா .’

‘எதுக்குணா ?’

‘வா சொல்றேன் .’

மாலினி தயங்கியவாறே உடன் வர பஸ் ஸ்டான்டை நோக்கி நடந்தான் . வேகவேகமாய் ஐஸ்கிரிமை விழுங்கிவிட்டு , தோழிகளையும் வேகமாய் சாப்பிடுமாறு ஆனையிட்டுக்கொண்டிருந்தாள் மையல் . பஸ் ஸ்டாண்டில் என்ன நடக்கோப்போகிறதோ என்ற பயம் வேறு அவளுக்கு . எதுக்கு இவன் மாலினிய கூட்டிட்டுப்போனான்னு தெரியலையே என்று குழம்பியவாறே சென்றடைந்தாள் . தங்களின் பஸ் நிற்குமிடத்தில் மாலினி மாத்திரம் நின்றுகொண்டிருந்தாள் . பெரும்பாலான கல்லூரி இளைஞர்களை அங்கு காணவில்லை.

‘எங்கடி அவங்க ?’

‘மதன் அண்ணா அந்த பையன் யாருனு கேட்டாரு . நான் கை காமிச்சேன் , அவன்கிட்ட பேசுறதுக்கு போறேன்னு சொல்லிட்டு போனாரு . அப்புறம் கொஞ்ச நேரத்துல ரெண்டு பசங்க வந்தானுங்க . அவனுங்க கூட இங்க இருந்த பசங்களும் கிளம்பி போனாங்க . என்ன ஆச்சுனு தெரியலை டி ’


-இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

Comments

  1. Replies
    1. எத்தனை பார்ட்னு இன்னும் முடிவு பண்ணல மச்சி ! ஆனா , நாளைக்கு முழுக்கதையும் முடிஞ்சிடும் . கருத்துக்கு நன்றி மச்சி .

      Delete
  2. #என்ன ஆச்சுனு தெரியலை டி ’#
    என்ன ஆச்சுன்னு சீக்கிரம் சொல்லுங்க :)

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு காலைல சொல்லிடுவா ணா !

      Delete
  3. கதை நகர்வு நன்று
    படிக்க தூண்டும் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் மேலான கருத்துக்கும்நன்றி அண்ணா !

      Delete
  4. சுவாரஸ்யமாக செல்கிறது...

    ஆனால் ஒரே நாளில் பல பதிவுகள் கூடாது நண்பா...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இந்த சஸ்பென்ஸ்லாம் பிடிக்காது ணா ! படிக்கறவங்க சீக்கரம் அனுபவிச்சடனும் . அதவிட்டுட்டு ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்க வைக்கக்கூடாதுனு நினைப்பேன் . அதான் இப்படி ,

      ஆனால் நீங்கள் கூறுவது நிஜம் தான் ணா !

      நன்றிணா

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை