மாரி – சினிமா விமர்சனம்




   


     வழக்கமாக தனுஷ் திரைப்படங்களைப் பொறுத்த வரை  , இந்த படத்திற்கு
செல்லலாம் , நம்மை ஏமாற்றாது என்று உள்மனது கூறும்  படங்களுக்கு மட்டுமே செல்வேன் . அந்த முடிவுடன் சென்று பார்த்த புதுப்பேட்டை , வேலையில்லா பட்டாதாரி, ஆடுகளம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி போன்ற படங்கள் அனைத்தும் பிடித்திருந்தன. அனேகன்  மட்டும் தியேட்டருக்குச்  செல்லலாம் என்று முடிவு செய்து, கடைசியில் போகமுடியாமல் முடிவை கைவிடவேண்டியதாயிற்று. மாரி பற்றி பெரிய அபிப்ராயம் எனக்கு இல்லை என்றே கூறலாம் . காலையில் டைப்பிங் கிளாஸ் முடித்துவிட்டு , மிகப்பொறுமையாக வீட்டிற்கு வந்தால் , பஸ் ஸ்டாப்பில் என் வயதுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லாம் நின்றுகொண்டிருந்தார்கள் . ’ஹே டூட் ! வாட்ஸ்அப் மேன்?’ என்று பீட்டர் விட்டுக்கொண்டே அவர்களிடம் கேட்டபோது,  படத்திற்கு செல்ல பேருந்துக்காக காத்திருப்பதாக கூறினார்கள் . அடப்பாவிகளா ! என்னைய விட்டுட்டே ப்ளான் போட்டுட்டிங்களே டா என்று மனதுக்குள் நினைத்தவாறே
அடுத்த பத்து நிமிடத்தில் திரையரங்கிற்குச் சென்றுவிட்டேன் . சாதாரணமாக
ரெடி ஆகி, தியேட்டருக்குச் செல்ல அரைமணிநேரத்திற்கு மேலாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது .

 பாலாஜி  திரைப்படங்களில் (எடுத்ததே 2 தான்னு சொல்றிங்களா! எனக்கு காதலில் சொதப்புவது எப்படி? யைக் காட்டிலும் வாயை மூடிப் பேசவும் மிகமிக பிடித்திருந்தது . ஆனால் மாரி ட்ரைலர் வந்தபோது கொஞ்சம் அசந்துவிட்டேன். என்னடா? இவரு சாஃப்டான  ஆள் ஆச்சே!  எப்படி லோக்கல்
டான் கான்செப்ட் படம் ? என்ற யோசனையிடன் திரையரங்கில் அமர்ந்தேன் . ஆனால்  உள்ளே பாலாஜி காட்டிய படம் இருக்கிறதே ! அப்பப்பா !!!

தனுஷுக்கு என்றே யோசித்து யோசித்து எழுதி, இயக்கியிருக்கிறார். பேசாமல் இந்த படத்திற்கு மாஸ் என்ற டைட்டில் வைத்திருக்கலாம்  ச்சும்மா தெறிக்குது. இன்ட்ரோ ஆகுமிடத்தில் இருந்து , கிளைமேக்ஸ் வரை, மாஸ் ! மாஸ்! மாஸ்!.  அப்படி என்ன கதை ?

  கெட்டவனுக்கும் , ரொம்பகெட்டவனுக்குமிடையே நடக்கும் பிரச்சனைகளும், தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் தான் திரைப்படம் . மாரி , ஏரியாவில் பெரிய டான் ; புறா ரேஸில் பல வருடங்களாக ஜெயித்து வருபவர்; புறாவின்மீது காட்டும் பாசத்தைக் கூட ஏரியா ஆட்களிடம் காட்டமாட்டார்; மாமூல் வசூலிப்பது, கட்டப்பஞ்சாயத்து என எல்லாவற்றையும் கன்ட்ரோலில்
வைத்திருப்பவர். மாரியைப் போன்றே இன்னொரு ரவுடியான பேர்ட் ரவி , புறாப் பந்தயத்தில் எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்றிருப்பவர் .  இவர்கள்
இருவருக்கும் மேலே பெரிய கையாக வேலு .  பொய்மான் கரடு எனும் கல்கியின் நாவலில், கொலையைச்ச சுற்றிய சம்பவங்களே கதை என்று முன்னுரை எழுதியிருப்பார். ஆனால் நடக்காத கொலையைச்சுற்றிய கதை . அதேபோல் சில வருடங்களுக்கு முன் ஒருவரை மாரி போட்டதால் , பெரிய டானாகி விட்டார் எனபதை அறிந்துகொள்கிறார் ஏரியாவில் புதிதாக வரும் எஸ்.ஐ. அந்த கேஸுக்கான சரியான ஆதாரம் இல்லாமல் , மாரியை எப்படியாவது ஜெயிலில் போட்டுவிட வேண்டும் என்று துடிக்கிறார் . இந்த மாதிரியான நேரத்தில் தான் காஜல் இன்ட்ரோ. 1970-களில் இருந்து தமிழ் சினிமாவில் பின்பற்றி வரும் பழக்கமான மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் என்றே அதே டெக்னிக்  இங்கேயும் பின்பற்றபடுகிறது; ஆனால் கொஞ்சம் சுவாரஸயமாக. ஒரு கட்டத்தில் மாரியிடம் ‘உண்மையில் நீ என்ன செய்து ரவுடி ஆனாய்?’ என கேட்குமிடத்தில், பழைய கொலைக் கேஸைப்பற்றி , போதையில் மாரி சொல்லிவிட , அதை மொபைலில் ரெகார்ட்
செய்து போலிஸில் போட்டுகொடுக்கிறார். அதைத்தொடர்ந்து 7 மாதம் ஜெயில் தண்டனை. வெயிட் , வெயிட்! அதாவது ஹீரோ கொலை செய்ய முயற்சித்தார்
என்பதனால் தான் 7 மாதம் . உண்மையில் ஹீரோ குத்திய இரண்டு நாட்களுக்குப்பின் வேறொருவரால் கொலை நடத்தப்பட்டிருக்கிறது .

ஏழு மாதங்களுக்குப் பின் ரிலிசாகும் மாரியிடம், ஏரியாவில் நடைபெற்ற நிகழ்வுகளை அவர்களின் சகாக்கள் எடுத்துரைக்கிறார்கள் . மாரி ஜெயிலுக்குப்
போன பின், பேர்ட் ரவியை தன்னுடன் கூட்டு சேர்த்துக்கொள்ளும் எஸ். ஐ . அர்ஜுன் (or அஜித்) , ஏரியாவில் அதிக மாமூல் வசூலிப்பது , பொய்கூறி ஏரியாவிலுள்ளவர்களை அழைத்துக்கொண்டு சந்தனமரம் கடத்தி, அம்மக்களையே காட்டிக்கொடுத்து ஜெயிலில் அடைப்பது, மாரியைக் காப்பாற்ற வந்த வேலுவை போடுவது என அனைத்துவித குற்றங்களையும் சரமாரியாக செய்கிறார். இதையெல்லாம் கேட்டதும் பொங்கி எழுந்து எல்லோரையும் அடுத்துத் தூள் கிளப்பாமல், தன்னை ஜெயில் போட்டவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை ஏரியாவை  விட்டு கிளம்ப முடிவெடுக்கிறார் . அப்போது பேர்ட் ரவியின் ஆட்களுடன் ஒரு சண்டை. அதன்பின் , மாரி தனது ஏரியாவை எப்படி மீண்டும் கைப்பற்றுகிறான் என்பதையும் , போலிசையும், பேர்ட் ரவியையும் எப்படி முடித்தான் என்பதையும் ஜாலியாக , செம மாஸ்ஸாக கொடுத்திருக்கிறார் பாலாஜி
.
 நடிகர்களின் நடிப்பைப் பற்றியெல்லாம் எழுதி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை  . வழக்கம்போல தனுஷ் தூள் கிளப்பியிருக்கிறார் . காஜல் அகர்வால் ஆங்காங்கே வருகிறார் . ரோபோ சங்கர் , தனுஷின் நண்பராக வந்து கிச்சுகிச்சுமூட்டுகிறார் . வில்லனாக அறிமுகமாகியிருக்கும் விஜய் யேசுதாஸ் சரியான தேர்வு . மற்றொரு வில்லனாக வரும் கோபி ஓ.கே ரகம். காளி வெங்கட்டும் தன் பங்கினைச் சிறப்பாக செய்துள்ளார் .

 மாரி இன்ட்ரோடக்சனில் வரும் பிண்ணனி இசையும் , முதல் பாடலு்ககு
தனுஷ் ஆடும் நடனத்தில் ஆரம்பிக்கும் வேகம், படம் முடியும் வரை அப்படியே இருக்கிறது . படத்தில் செம ரிச்சான ஒளிப்பதிவிற்கு ஓம் பிரகாஷ் தான் காரணம் . ஒளிப்பதிவும் , கலரைசேசனும் செம . அனிரூத் இணையில் பாடல்கள் படமாக்கிய விதம் அட்டகாசம். டானு டானு  டானு , மாரி போன்ற பாடல்கள்தான் அனிரூத் இசையில் எனக்குப் பிடித்திருந்தன. மற்ற பாடல்களெல்லாம் திரையில் பார்க்கும் நன்றாக இருந்தாலும் கேட்க பிடிக்கவில்லை . பிண்ணனி இசை பல இடங்களில் பலம் என்றாலும் பல இடங்களில் நம் காதுக்கு ரணம் . கிட்டாரை வைத்து சொய்ங்ங்ங்ங்ங்ங் என்று நாலு இழுப்பு இழுத்து , பிண்ணனியில் அடிவயிற்றில் ஆய் போக முக்குவது போல் மாரிஇஇஇஇஇ என்று குரல் கொடுக்கும் சில இடங்களில் என் காதிலிருந்து ரத்தம் மட்டும் தான் வரவில்லை .  சண்டைக் காட்சிகள் எல்லாம் செம கிளாஸ் . உண்மையில் தனுஷின் வெறித்தனமான ரசிகர்களுக்கு இப்படம் ஒரு புல்மீல்ஸ் .  மற்றவர்களுக்கு ஜாலியான ஒரு மசாலா திரைப்படம் .

Comments

  1. அப்ப தியட்டருல எஞ்சாய் செய்து பார்கலாம்போல....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்