தெருவில் ஒரு சிறுவன் – குறும்பட விமர்சனம்

உங்களுக்கெல்லாம், ஐ மீன் என் ப்ளாக்கை வாசித்து வருபவர்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியாக இல்லாவிட்டாலும் சிறிய ஆச்சரியாமாவது  கண்டிப்பாக இருக்கும்; என்னடா இவன், ஒலகசினிமா, ஹாலிவுட் சினிமா என்றெல்லாம் எழுதிக்கொண்டிருந்தவன் திடுதிப்பென குறும்படத்திற்கு விமர்சனம் எழுதவந்துவிட்டானென்று. ஏற்கனவே பலமுறை யோசித்து எழுதாமல் விட்ட டாபிக் குறும்பட விமர்சனம். நேற்றிரவு மூறையின் ஏதோவொரு நியூரானில் உறங்கிக்கிடந்த அந்த யோசனையைத் தட்டியெழுப்பி, அதற்கு விட்டமின் ஊட்டி வளர்த்தி, இப்போது எழுதவைத்துவிட்டார் இப்படத்தின் இயக்குநர் சனாதனன்.

ஏற்கனவே சாதித்தவர்களைப் பற்றியே எழுதிக்கொண்டிருந்தால் , சாதிக்கப் போகிறவர்களைப் பற்றி எப்போது எழுதப்போகிறீர்கள் என்று சைலன்டாக அவர் கேட்ட கேள்வி பசுமரத்தாணி போன்று மூளையில் பதிந்துவிட்டது. அவர் கேட்பதும் வாஸ்தவம் தான். சினிமாவிற்கு இருக்கும் மீடியா சப்போர்ட்டில் 0.1 சதவீதம் கூட குறும்படங்களுக்கு இல்லை என்பதே 100 சதவீத உண்மை. சரி, இன்றிலிருந்து மாதம் ஒரு குறும்படத்தையாவது நம் வாசகர்களுக்கு (?) அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்ற தலையாய கொள்கையை நெஞ்சினுள் விதைத்து, அதை இன்றிலிருந்து அறுவடைச் செய்யத் தயாராகிவிட்டேன்.

நான் ஒரு அதிதீவிர குறும்பட ரசிகன்; எந்தளவிற்கு என்றால் ஓ.சியில் யாராவது டவுன்லோட் பண்ணிக்கொடுத்தால் 1000 படங்களென்றாலும் அசராது பார்ப்பேன். என்னுடைய மாபெரும் பிரச்சனையே  நெட் தான். எங்கள் ஊருக்கு ப்ராட்பேன்ட் வசதியில்லாமையால் டேட்டா கார்ட் வாங்கி, மாதாமாதம் அதற்கு சாபத்துடன் தண்டம் கட்டி, கண்ணீர் வராத குறையாக தலையைச் சுற்றித் தூக்கி எறிந்ததால் வந்த வினை. சரியான நெட் வசதியில்லாததாலே குறும்படங்கள் பார்க்கும் வாய்ப்பும் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்தது எனலாம். என்னது மொபைலா? என்னவோ நான் ஒருவன் தான் இந்த சேலத்திலேயே மொபைல் உபயோகிக்கிறேன் என்றும், எனக்காகவே ஊரெல்லாம் டவர் கட்டி வைத்திருக்கிறார்கள் என்றும் நான் உபயோகிக்கும் செல்போன் நிறுவனம் நினைத்திருக்கும் போல. பாவம், அவர்களின் வறுமையைத் தீர்த்துக்கொள்ள நெட் பேக்கை எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏற்றி வைத்திருக்கிறார்கள். இந்த நெட்பேக்கை வைத்துக்கொண்டுதான் மாதமாதம் அந்த வறுமையான  கம்பனியின் முதலாளி சோறு தின்பார் என நினைக்கிறேன். நானோ பரமகஞ்சன்.  60 kbக்கு மேலிருந்தால் போட்டோவையே டவுன்லோட் செய்யமாட்டேன். பொத்தி பொத்தி உபயோகித்தாலே மாதம் 200 ரூபாயைத் தாண்டிவிடுகிறது. இந்த லட்சணத்தில் யூட்யூப் சென்று குறும்படம் பார்க்க என் குறுமனது சம்மதிக்குமா?

நேற்றிரவு சனாதனன் அவர்களுடன்  முகநூலில் உரையாடிக் கொண்டிருக்கும்போதுதான் லிங்கை அனுப்பி, என்னோட குறும்படம் ப்ரோ! எப்படி இருக்குனு கொஞ்சம் கமெண்ட்ஸ் கொடுங்க என்று கேட்டார். ஆளே இல்லாத இடத்தில், ஆலமரத்தடியில் துண்டைப் போட்டு ‘செல்லாது செல்லாது’ என பஞ்சாயத்து செய்யும் நம்மிடம், ஜூரி பொறுப்பை ஒருவர் ஒப்படைத்திருக்கிறாரே! ச்சும்மா விட்ருவமோ! கொள்கைக்கு பத்துநிமிடம் பைபை சொல்லி விட்டு டவுன்லோடி பார்த்தேன். உண்மையாகவே ஒரு குறும்பட இயக்குநராக வலம்வர வேண்டிய  அத்துனை திறமைகளையும் தன்னகத்தில் பதுக்கிவைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இத்திரைப்படத்தில் அவ்வளவு வித்தைகளையும் இறக்காமல் விட்டுவிட்டாரோ என்றெண்ணவும் வைத்து விட்டார்.

படத்தின் கதை என்னவென்றால் , ஒரு ஆர்வக்கோளாறான இளைஞன்; எழுத்தாளனாக ஆசைப்படுகிறான் (கிட்டத்தட்ட என்ன மாதிரினு வச்சுக்கோங்களே). ஒருமுறை அவன் தனக்கு விருப்பமான எழுத்தாளரை எதேச்சையாக சந்திக்கும்போது தன் ஆசையை அவரிடத்தில் வெளிப்படுத்துகிறான். தானும் ஒரு பெரிய கதாசிரியராகவேண்டும்; அதற்கு தங்களின் ஆதரவும் உதவியும் வேண்டும் என்று கேட்கும் அவனுக்கு, மனதைத் தொடும்படியான ஒரு கதையை எழுதி வா! உனக்கு உதவுகிறேன் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார் அந்த எழுத்தாளர். அதைத்தொடர்ந்து நடக்கும் விஷயங்களை நானே சொல்லிவிட்டால், சனாதனன் காண்டாகக்கூடும். எனவே அந்த ஆர்வக்கோளாறு இளைஞன் என்ன செய்தான் என்பதை படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

படத்தின் சப்ஜெக்ட் மற்றும் கான்செப்ட் ரீதியாக வலுவான ஒரு பிண்ணனியை உடையது.; அதற்கான டெக்னிக்கல் டிபார்ட்மென்டும், ஆர்ட்டிஸ்ட் சப்போர்ட்டும் அருமையாக அமைந்துள்ளது ; அட , இவ்வளவு ஏங்க? திரைக்கதை மற்றும் வசனங்களும் சரியானபடி பொருந்தத்தக்கதாக அமைந்துள்ளது.  ஆனால், படத்தின் முடிவானது சப்ஜெக்டைத் தாண்டி வேறெங்கோ சென்று முடிந்ததாகவே எனக்குள் தோன்றியது. அழுத்தமான கிளைமேக்ஸ் வரவேண்டிய இடத்தில், ஜாலியானபடி முடித்துவிட்டாரோ என்று தோன்றியது. மற்றவர்களுக்கு எப்படியென்று தெரியவில்லை, இது படத்தின் பெரிய குறையாக நான் உணர்ந்தேன்.

மற்றபடி படத்தின் ப்ளஸ் என்றால், கேமரா ஆங்கிள், இசை (கிளைமேக்ஸில் வரும் லோக்கல் பீட் தவிர)  மற்றும் நேர்த்தியான எடிட்டிங் என இவரது டீம் இவருக்கு பெரிதும் கைக்கொடுத்திருக்கிறது. கதைநடக்கும் சூழல் மற்றும் லொகேசன், கேமராவினுள் உலாவரும் பாத்திரங்களை முடிந்தவரை தத்ரூபமாக கையாண்டிருப்பது, நடிகர்கள் தேர்வு என அத்தனையும் கனகச்சிதமாகவே செய்திருக்கிறார் இயக்குநர். நடிகர்களும், குறிப்பாக செருப்புத் தைக்கும் சிறுவனாக வரும் அந்த பையனின் ஏக்கமான பார்வை மிகச்சிறப்பாக வந்துள்ளது என்பதை மறுக்க முடியாது; ஆனால் அவ்விடத்தில் மீண்டும் மீண்டும் அதேபோல அவன் பார்க்கிறான் என்பது வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இயக்குநருக்குத் தெரியாததொன்றுமில்லை! எப்போதுமே ஒருபவர்புல் காட்சியென்பது ஒருமுறை வந்தால் தான் ஆடியன்ஸ் மனதில் பதியும். எடுத்துக்காட்டாக ஒரு ஹீரோயின் படம் முழுக்க கண்டங்கி சேலைக் கட்டிக்கொண்டு வந்து, ஒரே ஒரு சீனில் மாத்திரம் கிளிவேஜ் தெரிய பத்து செகன்ட் வந்து போனால், ஆடியன்ஸுக்கு அந்த கிளிவேஜ் மேட்டர் பெருசாக தெரியும்; ஆனால், படம் முழுக்க அப்படியே வந்தால் அது எப்படி இருக்கும் என்று உங்களுக்கேத் தெரியும்.  மற்ற நடிகர்களும் தத்தம் பங்கைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கிளைமேக்ஸில் வரும் நடிகையின் மூவ்மென்ட் மற்றும் டயலாக் டெலிவரி மட்டும் கொஞ்சம் ட்ராமேடிக்காக இருக்கிறது.

மொத்தத்தில் பெரிய அளவில் ரீச் ஆக வேண்டிய குறும்படம் சில மிஸ்ஸிங்குகளால் கவனிக்கப்படாமல் போய்விட்டது. ஆனால் கண்டிப்பாக நமது ஒன்பது நிமிடங்களை வேஸ்ட் செய்யாது. தாராளமாக பார்க்கவேண்டிய குறும்படம் தான் இந்த தெருவில் ஒரு சிறுவன். என்னைப் போலவே 2G-யில் காலம் தள்ளுபவர்கள் en.savefrom.net சைட்டில் சென்று இத்திரைப்படத்தை உங்களுக்கேற்ற அளவில் டவின்லோட் செய்து பாருங்கள்.

குறும்படத்தின் யூட்யூப் லிங்க் .



படத்தின் மீது கிளிக் செய்து பார்க்கவும் .

அடுத்து இந்த மெகா சீரியல்களை ஒளிபரப்பி என் மனநிம்மதியைக் கொன்றெடுத்து, ரத்தவெறிபிடித்த சைக்கோவாக மாற்றிக்கொண்டிருக்கும் டி.வி சேனல்களே! மனிதநேயமென்று ஒன்று உங்களிடமிருந்தால் தயவு செய்து என்போன்ற இளைஞர்களை பி.பி.யின் கோரப்பிடியிலிருந்தும், மனச்சிதைவுப் பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்றுவதற்காகவாது அந்த இழவெடுத்த மெகாசீரியல்களைக் குறைத்துக்கொள்ளுங்கள் . உங்களால் மாலை ஆறு மணியிலிருந்து 11.30 மணி வரை, ரெஸ்டே இல்லாமல் டென்சனில் தவித்துக்கொண்டிருக்கிறேன். தமிழ் மெகா சீரியல்களாவது பரவாயில்லை! இந்த இந்தி சீரியல்கள் இருக்கிறதே! நான் பார்த்த மகா கழிசடையான நாடகங்கள் என்றால் இந்த தமிழ் டப்பிங் நாடகங்கள் தான். அதுவும் மூன்று முடிச்சி என்று ஒரு உலகமகா காவியம் பாலிமரில் ஓடுகிறது. அந்த கருமத்தைப் பார்த்து எனக்கு வரும் ஆத்திரத்தின் அளவினைக் கணக்கிடவே தனி மெஷின் கண்டுபிடிக்கவேண்டும். அது போன்றதொரு குப்பையினை என்வாழ்நாளிலேயே எங்கும் பார்த்ததில்லை; அந்த நாடகத்தைப் பார்ப்பதற்கு பதில் சுறா, அசல், அலை, சுள்ளான் போன்ற படங்களையே பார்த்துத் தொலைக்கலாம் என்பது போல் இருக்கின்றது. இங்கே நான் மற்றவர்களின் ரசனையை குறைத்து மதிப்பிட வரவில்லை. என்போன்றே ஆத்திரத்துடன் அந்த நாடகத்தைப் பார்த்தவர்களெல்லாம் தங்களின் ஆத்திரத்தை ஓரங்கட்டிவிட்டு, அந்நாடகமெனும் கொடுமைக்குள் மூழ்கி ஒன்றிணைந்து பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இது ஒரு மனவலிமையைக் குறைக்கும் சைக்கலாஜிக்கல் பிரச்சனையாகவே நான் கருதுகிறேன் .


இப்போது நான் கூற விளைந்தது என்னவென்றால், இதுபோன்ற குப்பைகளுக்கு இடையில் ஒரு அரைமணிநேரம் ஒவ்வொரு டி.வி.சேனலும் குறும்படங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை வழங்கலாம்; அதான் நாளைய இயக்குநர் மாதிரியான ப்ரோகிராம் இருக்கே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ப்ரோகிராம் வைத்து எதற்கு பணத்தை வேஸ்ட் செய்துகொண்டு? யூட்யூப்பில் பார்த்து சிறந்த மூன்று திரைப்படங்களை, அப்படத்தின் இயக்குநரிடம் ஒரு மெயில் போட்டுவிட்டு ஒளிபரப்பட்டும். இதற்கு எந்த குறும்பட இயக்குநராவது மறுப்பு தெரிவிக்கப் போகிறாரா என்ன? அவ்வாறு செய்யும்போது சேனல்களும் ஒருபைசா செலவில்லாமல் சம்பாத்திக்கொள்ளலாம்; அதேநேரம் ஒரு குறும்பட இயக்குநருக்குண்டான க்ரெடிட்டும், அதன்மூலம் அப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு சிலபல வாய்ப்புகள் கிடைக்கும் சூழ்நிலையும் உண்டாகும். இப்படிச் செய்தால் டி.வி. என்றாலே அலறியடித்துக் கொண்டு ஓடும் என்போன்றோரும் அவ்வப்போது டி.வி.யைப் பார்க்க ஆரம்பிப்பார்கள். ஆனால் நல்லதைச் செய்ய நம் சேனல்களுக்கு வழி தெரியாது என்ற காரணத்தினால் இது மாதிரியான விஷயங்களை மனதிலேயே வைத்துப் பூட்டிவைக்கவேண்டியுள்ளது. 

Comments

  1. நலமா
    மெக்
    சந்திக்கலாமா ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை