காதல் காதல் – தொடர்கதை – 6
‘ஐ லவ் யூ டி’
என்ற அவனின் ஹஸ்கியான குரலைக்கேட்டதும் சிலவிநாடிகள் அமைதியாய் இருந்தாள் . ஒருவித
குறும்புடன் நக்கலும் சேர்த்து ஒலிக்கும்படி அவனிடம் கேட்டாள் .
‘இத சொல்றதுக்குத்தான்
போன் பண்ணியா ?’
‘இன்னும் சொல்ல
நிறைய இருக்கு .’
‘எங்க சொல்லு
. கேட்கலாம் ’ என்று ஆவலோடு அவள் கேட்டது இவனுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கக்கூடும்
. எழுந்து வீட்டை விட்டு தெருவுக்கு வந்தான் . அவனுடைய ஊர் ஒரு கிராமம் என்பதால் வீடுகள்
தள்ளி , தள்ளி தூரமாய்த்தானிருக்கும் . ஒரு ஒத்தையடி பாதையில் இரவு பத்துமணிக்கு நடந்துகொண்டே
பேச ஆரம்பித்தான் . அவனுடைய பேச்சு முடிவதற்கு முக்கிய காரணமாய் அவனுடைய செல்போன் பேட்டரி
இருந்தது . அது மட்டும் ஆஃப் ஆகாமல் இருந்திருந்தால் , மதன் இன்னும் எவ்வளவு நேரம்
பேசுவான் என்பது அவனுக்கேத்தெரிந்திருகாது . இரவு 1 மணிக்கு மீண்டும் தன் தனியறைக்கு
வந்து படுத்தான் . அன்றைய இரவைப்போல் நிம்மதியான ஒரு இரவினை அவனால் அனுபவித்திருக்கமுடியாது
. உலகம் அழிந்தாலும் சிரித்துக்கொண்டே இறக்கத்துணிந்துவிட்டான் . அவனுக்கு அவளிடம்
மிகவும் பிடித்தமான ஒரு விஷயம் என்னவென்றால் , அவ்வளவு நேரம் பேசியும் அவள் ஒருமுறைக்கூட
இவனிடம் தன் காதலை சொல்லவில்லை . அதன்பின் காலையில் சந்தோஷமான பேச்சும் , மாலையில் ஒரு சின்ன
சண்டையும் , அதை சமாளிக்க இரவினில் பேச்சுமென பேசிப்பேசியே பொழுதுகள் கழிந்தன . அவள்
கூறுவதைச்செய்யத்தான் , தான் இந்த உலகில் பிறந்ததாய் நினைக்கொண்டான் . அவளும் தன்னுடைய
திருமணத்திற்கு முன்பே ஒரு மகன் கிடைத்துவிட்டான் என்பதுபோல , மதனை சீராட்டி அன்பமுதம்
காட்டி அவனுடன் வாழ்ந்தாள் . அவர்களிருவருக்கும் சண்டை என்பது ஒன்று வருவதற்கு முக்கிய
காரணமாய் இருந்தது ஒரே விஷயம்தான் .
‘தம் அடிக்காதனு
எத்தன தடவ சொல்றேன் . கேட்க மாட்டியா ?’ என்று ஆரம்பத்தில் சண்டையிட்டவள் , இவன் திருந்தவே
மாட்டான் என்றுணர்ந்து ‘சரி ! ஒருநாளை ஒன்னே ஒன்னு தான் . என்மேல பிராமிஸ் பண்ணு’ என்றவரைக்கும்
வந்துவிட்டாள் . ஆனால் அவன் சத்தியம் செய்யமாட்டான் .
‘ஹே ! எனக்குனு
நா நினைக்கிற ஒரு விஷயத்துல இதுவும் ஒன்னுடி . உனக்காக என்னால நிறுத்தமுடியாது . நீ
கம்பல் பன்றத முதல்ல நிறுத்து . எனக்கா தோனுச்சுனா நா விட்டுடுவேன் ’ என்பான் . உடனே
அவளுக்கு முகம் கோணிக்கும் . பஸ்ஸில் அதைப்பற்றி தொடர்ந்து பேசமாட்டாள் . வீட்டிற்கு
வந்ததும் போன் செய்துஅவனை கடையோ கடையென்று கடைவாள் . அவனும் சமாதானப்படுத்துவான் .
கடைசியில் இருவரும் உருகிக்கொள்வார்கள் . இருவரும் காதலித்து ஒரு வருடம் தாண்டியபின்பும்
இன்னும் அவள் காதலை அவனிடம் சொல்லவில்லை . அவள் உதட்டிலிருந்து அதைக்கேட்க வேண்டும்
என்ற ஆசையில் அவனும் ஏதேதோ தகிடுதத்தம் வேலைகள் எல்லாம் செய்து பார்த்தான் . அவள் மசியவே
இல்லை .
அவ்வப்போது மையலிடம்
ஒருசிலர் ப்ரபோசல் செய்வார்கள் . மதன் அதையெல்லாம் பார்த்துக்கொண்டு சிரிப்பான் .
‘ஹே ! நல்ல பையன்டி . உனக்காக உயிரையும் கொடுப்பான் . பாவம் அக்சப்ட் பண்ணிக்கோடி’
என்று அவளை ஓட்டுவான் . அச்சமயங்களில் அவளுக்குப் பற்றிக்கொண்டு வரும் . அந்த கோவத்தையெல்லாம்
தனிமையில் தான் அவனிடம் காட்டுவாள் . நடுவே அவளின் பிறந்தநாளுக்கு விஷ் பண்ண மறந்து
, அவளிடம் அடியும் வாங்கிக்கட்டிக்கொண்டான் .
அவளின் அறிவுரைப்படி
இருந்த அரியர்ஸ் எல்லாம் கிளீன் செய்தான் மதன் . ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் கொஞ்சமாய்
டொனேஷனும் ரெக்கமென்டேசனுடனும் சீட் வாங்கி சேர்ந்துவிட்டான் . கண்ணன் மற்றும் தேவியும்
அதே கல்லூரியில் சேர்ந்தார்கள் . கல்லூரிக்கு செல்கிறானோ இல்லையோ ! தினமும் மையலைப்பார்ப்பதற்கே
கிளம்பி விடுவான் . ஒருநாள் காலை மையல் ‘எங்கயாச்சும் வெளிய கூட்டிட்டுப்போடா’ என்று
ஆசையுடன் கேட்க , அதுவரை ஒருநாள் கூட கட் அடித்துவிட்டு வராத அவளே கேட்கிறாளே என்ற
சந்தோஷத்தில் முதலில் ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்குக் கூட்டிச்சென்றான் . அவனுடன் ஒன்றுசேர்ந்து
அமர்ந்தாள் . அவளுக்குப்பிடித்த ஸ்ட்ராபெரி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த நேரத்தில்
, மதனின் கையைப்பிடித்தவாறே அவன் தோளில் தலை சாய்ந்தாள் . கைவிரலைப்பிடித்தாலே கதறும்
அவள் , இன்று மதனின் தோளில் சாய்ந்திருப்பது இன்ப அதிர்ச்சியாய் இருந்தது . ஐஸ்கிரிம்
வந்ததும் அவளே அவனுக்கு ஊட்டினாள் .
‘என்னடி ஆச்சு
உனக்கு ? இன்னைக்கு ரொம்ப பாசத்த காட்ற ?’
‘ஐ லவ் யூ டா ’
என்றாள் . இரண்டு வருடங்களுக்குப்பிறகு இன்று தான் அவனிடம் அவள் வாய் திறந்து ஐ லவ்
யூ என்று கூறுகிறாள் . அவளின் காதலை நன்றாய் மதன் உணர்ந்திருந்தாலும், அவளிடமிருந்து
அதைக்கேட்கும்போது இதுவரை அவன் கேட்ட பாடல்களிலேயே இனிமையானதாக ஒலித்தது . ஐஸ்கிரிமை
ஊட்டிவிட்ட பின் படத்திற்கு கூட்டிச்செல்லுமாறு அவள் கேட்க , தியேட்டரை அடைந்தார்கள்
. வழக்கம்போல காதலர்களை ஆதரிக்கும் கார்னர் சீட்டுகளில் அடைக்கலம் அடைந்தனர் . படம்
ஓட ஆரம்பித்ததும் அவன் கையைப்பிடித்தபடியே
அவன் தோளில் சாய்ந்தாள் .
‘என்ன கிஸ் பண்ணனும்னு
உனக்கு ஒருநாள் கூட தோனுனதே இல்லையாடா ?’ என்றாள் ஏக்கமாக . அவளின் பார்வையில் காதல்
கொந்தளித்தது . அது காமத்தைத்தாண்டிய பார்வை . காதலின் தவிப்பால் முத்தம் கேட்கும் பார்வை .
‘என் மனசுக்குள்ள
உன்ன கிஸ் பண்ணாத நாளே இல்லடி ’ என்று மெல்லிய
புன்னகையுடன் சிரித்தான் .
‘எனக்கு ஒரு கிஸ்
வேணும்டா . ப்ளீஸ் ’ என்றாள் ஏக்கமாக . உண்மையான காதலை அனுபவித்தவர்களுக்கு அந்த முத்தம்
எத்தகைய உணர்வு என்று தெரியும் . அவள் தன்னுடைய உடல்தாகத்தை அணைக்க அவ்விடத்தில் முத்தத்தைக்கேட்கவில்லை
. அவனோ , அவள் கேட்டதும் இன்பஅதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான் . அவளின் இதழைப்பற்றிக்கொள்ள
, அவனின் உதடுகள் துடித்தன . அவனின் கண்கள்
, அவளின் பாதி சொருகிய விழிகளைப்பார்த்து உருகியது . மூச்சுக்காற்று மெல்ல உள்ளே சென்று
பெருமூச்சாய் வெளிவந்தது . குரல் தழுதழுத்தவாறே அவளிடம் மென்மையாக பேச ஆரம்பித்தான்
.
‘இல்ல மையல் .
கல்யாணத்துக்கு முன்னாடி உன்ன எச்சப்பண்ண எனக்குஇஷ்டமில்லடி . நீ முழுசா எனக்கு வேணும்.
நம்மோட முதல்முத்தத்துக்காகத்தான் நா வாழ்க்கைல போராடிட்டுருக்கேன் . அது திருட்டுத்தனமா
கிடைக்கறதுல எனக்கு இஷ்டமில்லடி . நீ எனக்குனு
மட்டும் ஆன பின்னாடி , முழு உரிமையோட உன்ன தொடனும் . ’ என்றான்
காதலோடு .
அவன் தோளைப்பற்றியிருந்த
அவளின் கைகள் இருக்கத்தைக்காட்டியது . அவனை அவள் இறுகப்பற்றிக்கொண்டாள் . அவளின் முகம்
அவனின் தோளின் மேல் அழுத்தமாய் பதிந்தது . சூடான கண்ணீர் அவன் தோளில் பட்டதும் ‘அம்மு
! என்ன ஆச்சு ?’ என்று கவலையுடன் அவன் கேட்டான் . மெல்லமாய் அவன் முகம் நோக்கி தன்
தலையைத்தூக்கியவளின் கண்கள் கலங்கியவாறு இருந்தது . ‘அம்மு’ என்று மறுபடியும் அவன்
அழைக்க ,
‘ஏன்டா என்ன இவ்ளோ
லவ் பண்ற ? ப்ளீஸ் . என்ன இவ்ளோ அதிகமா லவ் பண்ணாத . நாந்தான் உன்ன அதிகமா லவ் பண்ணனும்
. என்ன தோக்கடிச்சிடாதடா’ என்று அழுதவாறே கூறினாள்
. மதனின் கண்களும் கொஞ்சம் கொஞ்சமாய்க்கண்ணீரில் நனைய , அவனின் கைகள் மையலின் விழிகளில்
ஓடிய கண்ணீரைத்துடைத்தது . அவள் அப்படியே இவனின் தோளின்மேல் சாய்ந்து கிறங்கிக்கிடந்தாள்
. இவனோ அவளின் தலையின்மீது தன்னுடைய கன்னங்களை வைத்து கண்களை மூடியவாறு அவளின் அருகாமையை
உணர்ந்தான் . அங்கு உண்மையாகவே ஈருடல்களில் ஓருயிர் உலவிக்கொண்டிருந்தது .
இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
நேர்மை + நெகிழ்ச்சி...
ReplyDeleteநன்றிங்ணா !
Deleteதெய்வீக காதலா இருக்கே :)
ReplyDeleteதெய்வீ்க காதல்லாம் இல்லைங்ணா ! உண்மையான காதல் . அவ்வளோ தான்
Delete