22 JUMP STREET – சினிமா விமர்சனம்
சென்றபாகத்தில் பள்ளியில் நடக்கும் போதைப்பொருள் பிரச்சனைகளை ஓழித்தபின் ஜெங்கோ மற்றும்
ஷ்மித் இருவரும் அன்டர்கவர் ஏஜென்டாக மாறுகிறார்கள் . முதல் காட்சியிலேயே ஜெங்கோ மற்றும்
ஸ்மித் இருவரும் ஒரு மிஷனுக்குச்செல்ல , அங்கே ஸ்மித்தின் குளறுபடிகளால்
மிஷன் நாசமாய்ப்போகிறது . இருந்தாலும் ஜெங்கோ எதுவும் சொல்லாமல்
வழக்கம்போல நட்பு பாராட்டுகிறான் . இவர்களின் சொதப்பல்களைத்தொடர்ந்து இருவரையும் மீண்டும் JUMP STREET – க்கு அனுப்பிவைக்கபடுகிறார்கள் . 21 JUMPSTREET – ல் இருந்த நிக்சனின் அலுவலகம் புதிய இடத்திற்கு
மாற்றப்படுகிறது . அதுதான் 22 JUMP STREET. ஏற்கனவே இருந்த
கொரியன் ஜீசஸ்க்கு பதில் வியட்நாம் ஜீசஸ் , கண்ணாடி ரூம்
, சென்ற பாகத்தில் ஜெங்கோவிற்கு உதவிய பள்ளிநண்பர்கள் மூவரும் இங்கு வேலைசெய்ய
என ஆர்ப்பாட்டமில்லாமல் ஆரம்பிக்கிறது திரைப்படம் . இம்முறை அவர்களிருவருக்கும்
கொடுக்கப்பட்ட வேலை கல்லூரியில் போதைமருந்து விற்கும் கும்பலைப்பிடிப்பது .
இந்த போதைமருந்தின் விளைவால் ஒரு மாணவி இறந்துவிட்டதாகவும் ,
WHYPHY எனும் போதைப்பொருளை அந்த இறந்த பெண்ணுக்கு ஒருவன் கொடுப்பது போன்ற
ஒரு போட்டோ மாத்திரமே க்ளூவாக கிடைக்கிறது . அதைவைத்துக்கொண்டு
கல்லூரிக்குள் மாணவர்களாக இருவரும் நுழைகிறார்கள் .
கல்லூரியில் வழக்கம்போல
ஆள் பார்க்க கெத்தாக இருக்கும் ஜெங்கோவிடம் மாணவர்கள் ஜாலியாக பழக ஆரம்பிக்கிறார்கள் . ஆனால் ஷ்மித்தின் நிலை அப்படியில்லை . ஷ்மித்
ரகசிய விசாரணையில் ஈடுபடும்போது இறந்த பெண்ணின் ரூமிற்கு எதிர்ரூமில்
இருக்கும் மாயாவை சந்திக்கிறான் . இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்
. இன்னொருபுறம் ஜெங்கோ , ஷூக் மற்றும் அவனது நண்பர்களுடன்
படுபயங்கர நட்புடன் இருக்கிறான் . ஷூக் குழுவினர் , ஷ்மித்தை எப்போது பார்த்தாலும் கலாய்க்கிறார்கள் . ஆனால்
ஜெங்கோவை ,ஷூக் தலையில் வைத்துக்கொண்டாடுகிறான் . ஜெங்கோவுக்கும் ஷ்மித்துக்கும் எந்த க்ளூவும் கிடைக்காத காரணத்தினால் ,
இதற்கு உதவுமாறு சென்ற பாகத்தில் ஜெயிலுக்கு அனுப்பிய வால்டர்ஸ் மற்றும்
எரிக்கைச்சந்திக்கிறார்கள் . அவன் போட்டைவைப்பார்த்துவிட்டு அதிலிருக்கும்
ஆளின் கையில் இருக்கும் டாட்டுவைக்கவனித்து சொல்கிறார்கள் . அந்த
டாட்டு ஷூக்கின் நண்பனான ரூஸ்டரிடம் இருக்கும் என நினைக்கையில் அது ஷூக்கிடன் கையில்
இருக்கிறது . ஜெங்கோவிற்கு இவ்விஷயம் தெரிந்திருந்தும் அதை ஷ்மித்திடம்
சொல்லாமல் மறைக்கிறான் . ஏனென்றால் ஷூக் தவறு செய்திருப்பான்
என்று அவன் மனம் நம்பமறுக்கிறது . ஒருகட்டத்தில் இறந்துபோன அந்த
பெண்ணே ஏன் வியாபாரியாக இருந்திருக்க கூடாது என்ற ரீதியில் யோசிக்கிறார்கள்
. சரியாக GHOST எனும் அந்த வில்லனைப்பிடிக்கும்
நேரத்தில் இருவரும் சொதப்பி வில்லனைக் கோட்டைவிட்டதால்
ஷ்மித்திற்கும் ஜெங்கோவிற்கும் முட்டிக்கொள்ள இருவரும் பிரிகிறார்கள் . ஜெங்கோ தன் வேலையை விட்டுவிட்டு கல்லூரியிலே ஷூக்குடன் இருந்துவிடுகிறான்
. ஷ்மித்தோ வழக்கம்போல குளத்தில் கல் எறியும் சிறுவனை மிரட்டும் போலிசாக
இருக்கிறான் .
இன்னொருபுறம்
போலிசாரோ சம்பந்தமே இல்லாமல் ஒரு அப்பாவி புரபொசரைக்கைது
செய்து அவன்தான் வில்லன் என்று சொல்லிவிடுகிறார்கள் . இதனைப்பார்த்து பொங்கியெழும் இருவரும் , கடைசிவேலை என்று கூறிவிட்டு
வில்லனைத்தேடி செல்கிறார்கள் . வழக்கம்போல ஒரு ட்விஸ்ட் , அட்டகாசமானதொரு காமெடி
கிளைமேக்சுடன் படம் சுபம் போடுகிறார்கள் . இந்த ஷ்மித் , ஆள் பார்ப்பதற்கு காற்றடைக்கப்பட்ட
LAYS இன்டர்நேசனல் அமெரிக்கன் ஆனியன் ஃப்ளேவர்
சிப்ஸ் பாக்கெட் போல இருந்துகொண்டு எப்படித்தான் பிகர்களை கரெக்ட் செய்கிறாரோ ?
இதிலும் மாயாவை கரெக்ட் செய்து , செய்து , கடைசியில் அவள் தன் மேலதிகாரி டிக்சனின்
மகள் என்று தெரியும்போது அல்ட்ரா காமெடி . நண்பர்களின் பிரிவும் அதைத்தொடர்ந்த
இருவரின் தனித்தனி வாழ்க்கையும் காட்சிப்படுத்தியதெல்லாம் அக்மார்க் தமிழ் திரைப்படங்களின்
டெம்ப்ளேட் . சென்ற
பாகத்தைப் போன்றே டெம்ப்ளேட் காட்சிகள் இருப்பினும் ( எகா – போதைப்பொருளை
உட்கொண்டு இருவரும் அட்டகாசம் செய்யும் காட்சிகள் , ஆரம்ப காட்சியில் வரும்
கும்பலே படத்தின் இறுதியில் வில்லன் கேங்காக வருவது . ) , படம் உங்களின் நேரத்தை
வீணாக்காது . முக்கியமாக படம் முடிந்ததும்
franchise படங்களை ஓட்டவது போல எடுக்கப்பட்டிருக்கும் போஸ்டர்களைப்பார்க்க
மறக்காதிர்கள் . இதில் விளையட்டாக மூன்றாம் பாகம் எடுக்கப்படுவதாக சொல்லியிருந்தாலும்
இரண்டாம் பாகமும் பெரியவெற்றிபெற்றதால் உண்மையாகவே 23 JUMP STREET
எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் .
ஐயோ...! இன்னொரு பாகமா...?
ReplyDeleteதொடர்கிறேன் பாகத்தை நண்பரே நலம்தானே... காணவே இல்லை.
ReplyDeleteத.ம.3
ஹோ.... அடுத்த சீரிஸ்ஸிம் வருதா... ஆன எனக்கு படம் பெரிசா பிடிக்கவில்லை..
ReplyDelete