பயணம் @ டைம் மெஷின்-3
அத்தியாயம்-1ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள் அத்தியாயம்-2ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள் அத்தியாயம் – 3 கி.மு 2-ம் நூற்றாண்டு பகுதி-1 ,காஞ்சிபுரம் நாள் – கி.மு 27.03.0210 ‘டேய் சந்துரு! நாம வந்துட்டோம்டோ ! ’ ‘ஆமாண்டா பாலா !’ பாலாவும், சந்துருவும் அந்த மெஷினிலிருந்து இறங்கி, மீண்டும் அதே வனாந்திரத்தை பார்த்தார்கள். முன்பைவிட அடர்ந்து காணப்பட்டது. அவர்கள் காலத்தில் ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட காடுகளின் அழிவுகளைக்காட்டிலும், அவர்கள் பயணித்த இரண்டு நூற்றாண்டுகளில் குறைவாக அழிக்கப்பட்டுள்ளது என்பதனை உணர்ந்தனர். முதல் வேலையாக அந்த டைம் மெஷினை மறைக்க எத்தனித்தார்கள்.அந்த வனத்தில் காணப்பட்ட புங்கை மரங்களின் தழைகளும் , நெருஞ்சிமரத்தின் இழைகளும் , அந்த டைம் மெஷனை மறைக்க , அவர்களுக்கு உதவியது. கிளம்பும் முன், அந்த முனிவரின் உபதேசத்தின் பேரில், அவருடைய வீட்டில் இருந்து தானம் பெறப்பட்ட வேட்டிகளை எடுத்து, அவரைப்போலவே மார்பு முதல் முழங்கால் வரை மறைக்க கடும் பிரயத்தனப்பட்டு கட்டி முடித்தார்கள். எப்படியும், தஞ்சாவூரை அடைய ஒரு வாரம் பிரயாணப்பட வேண்...