CN’S - INCEPTION – ஒரு பார்வை





“ FILMS ARE SUBJECTIVE – WHAT YOU LIKE , WHAT YOU DON’T LIKE . BUT THE THING FOR ME THAT IS ABSOLUTELY UNIFYING IS THE IDEA THAT EVERYTIME I GO TO THE CINEMA AND PAY MY MONEY AND SITDOWN AND WATCH A FILM GO UP ONSCREEN , I WANT TO FEEL THAT THE PEOPLE WHO MADE THAT FILM THINK IT’S THE BEST MOVIE IN THE WORLD , THAT THEY POURED EVERYTHING INTO IT AND THEY REALLY LOVE IT . WHETHER OR NOT I AGREE WITH WHAT THEY’VE DONE , I WANT THAT EFFORT THERE – I WANT THAT SINCERITY . AND WHEN YOU DON’T FEEL IT , THAT’S THE ONLY TIME I FEEL LIKE I’M WASTING MY TIME AT THE MOVIES ”
-     CHRISTOPHER NOLAN

காமிக்ஸ் தழுவலும் இல்லை . நாவல் அடாப்சனும் இல்லை . வீடியோகேம்களை கொண்டும் உருவாக்கப்படவில்லை . தொலைக்காட்சித்தொடர்களைத்தழுவியும் எடுக்கப்படவில்லை . ஆனால் இன்செப்ஷன் மேற்கண்ட தழுவல்களில் அந்த சம்மரில் வந்த அத்தனைப்படங்களையும் ஊதித்தள்ளி வெற்றிக்கொடி நாட்டியது . இத்தனைக்கும் ஒரு சின்ன விஷயத்தை வைத்து 830 மில்லியன் டாலர் சம்பாதிப்பது என்பது சாதாரண விஷயமா ?

கனவுகள் இதைப்பற்றி அறியாத தமிழர்களே இருக்கமுடியாது . பகல்கனவு என்பது தமிழர்களுடன் பிறந்தது . கனவுக்காட்சிகள் என்பது தமிழ்சினிமாவுடன் பிறந்த ஒரு விஷயம் . 90 சதவீத தமிழ்ப்படங்களில் கனவுக்காட்சிகள் ( பெரும்பாலும் பாடல்கள் ) இல்லாமல் இருக்கவே முடியாது . இந்த ஐடியா தான் நோலனுக்கு இன்செப்ஷனை உருவாக்க உதவியிருக்கலாம் . நாமெல்லாம் ஹீரோ அல்லது ஹீரோயினின் கனவுக்குள் புகுந்து பாடல்களைத்தான் இயக்குவோம் . நோலன் ஒருபடி மேலே போய் கனவுக்குள் ஒரு படமே எழுதி இயக்கிவிட்டார் . நமக்கு சாதாரணமாக ஒரு இரவுக்கு 2 முதல் 4 வரை கனவுகள் வரும் . ஆனால் கனவுக்குள் கனவு என்பது ரொம்ப ரேர் ஆன விஷயம் . ஒருவகையில் இன்செப்ஷனுக்கும் என்னுடைய ப்ளாக்குக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது . இந்த படம் பார்த்தபின்தான் கிறிஸ்டோபர் நோலன் எனும் இயக்குநர் இருப்பதே எனக்குத்தெரியும் . அதன்பின் அவருடைய படங்களைத்தேடிப்பிடித்து பார்த்து , அவரின் வெறித்தனமான ரசிகரானதெல்லாம் தனிக்கதை . ஒருவேளை இந்த படம் மட்டும் பார்த்திராமல் இருந்திருந்தால் , இந்த வலைத்தளத்தை ஆரம்பித்து , அந்த படத்தைப்பார் , இந்தப்படத்தைப்பார் என்று உங்களையெல்லாம் எழுதி எழுதி மிரட்டியிருக்கமாட்டேன் . நீங்களும் நிம்மதியாய் இருந்திருக்கலாம் . நோலன் இஸ் கிரேட் .

சரி ,என் வலைத்தளத்திற்கும் இன்செப்சனுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ?

சம்பந்தம் எண் 1 எனக்கு இப்படம் பார்க்கும்முன் நோலன் என்றால் யாரென்றே தெரியாது . என்னுடைய சினிமா பார்வையானது , தமிழ் , தெலுங்கில் சில படங்கள் , ஆங்கிலப்படங்களில் குறைந்தபட்சம் 400கோடிக்குமேல் பட்ஜெட்டில் உருவாகும் கிராபிக்ஸ் படங்கள் அவ்வளவே. இந்த படத்திற்குபிறகு தான் திரைக்கதை என்ற ஒன்றின் முழு அர்த்தமும் தெரியும் . இந்த படத்திற்குபிறகுதான் சிறந்த திரைக்கதைகளை உடைய படங்களாக தேடிப்பிடித்துப்பார்க்க ஆரம்பித்தேன் (உண்மையில் நோலனின் இயக்கத்தில் முதன்முதலில் நான் பார்த்த திரைப்படம் தி டார்க் நைட் ரைசஸ் தான் ).

சம்பந்தம் எண் 2 நான் ப்ளாக்குகளை ஓரளவு வாசிப்பவன் . அப்படி வாசித்துவிட்டு இரவு தூங்கும் வேளைகளில் நானும் ப்ளாக் ஆரம்பித்து இப்படியெல்லாம் எழுதி பெரும்பேரும்புகழும் வாங்குகின்ற மாதிரியான கனவுகள் அவ்வப்போது வந்து என்னை மகிழ்விக்கும் . ஒரு கட்டத்தில் கனவானது 6 மாதங்களுக்குமுன் நனவானது . நான் எழுதும் படங்களுக்கு ஒரு ஆரம்பப்புள்ளியாகவும் , என் கனவின் வெளிப்பாடாகவும் இருந்தது இன்செப்சன் தான் .




சரி , என் கனவு ஒருபுறம் இருக்கட்டும் . புவியீர்ப்பு விசையைக்கண்டுபிடித்த நியூட்டனிடம் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார் .

எப்படிணே கண்டுபுடிச்சிங்கஎன்று செந்தில் போல கேட்க , அவரோ
நா எங்க கண்டுபுடிச்சேன் . எல்லாம் தானா வந்து விழுந்துச்சி என்றிருக்கிறார் . அவர் விழுந்தது என்று குறிப்பிடுவது ஆப்பிளை இல்லை , ஐடியாவை .

லூசி எனும் ஆங்கிலத்திரைப்படத்தைப்பற்றி அறிந்திருப்பீர்கள் . அந்த படத்தில் ஹீரோயினின் மூளையானது 100 சதவீதத்தை நெருங்கியதும் , கிட்டத்தட்ட இந்த பிரபஞ்சத்தின் அனைத்துவிஷயங்களையும் கற்றுக்கொள்வதாக காண்பித்திருப்பார்கள் . அதாவது , நம் மூளையானது தன்னுடைய அதிகபட்சத்தை எட்டும்போது , நமக்குமுன் நடந்த விஷயங்களைத்தானே அறிந்துகொள்ள முயல்கிறது . இன்னும் சொல்லப்போனால் அவதார் படத்தில் நாவிக்கள் குடியிருப்பதாக ஒரு மரம் காட்டுவார்கள் . அம்மரத்தை அழிக்கக்கூடாது என்று எப்போது பார்த்தாலும் தம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு பாட்டி சொல்லும். எதனால் அதை வெட்டக்கூடாது என்றால் அம்மரத்தில் மனிதமூளையிலிருக்கும் நியூரான்கள் போன்ற கனெக்ஷென்கள் , அக்கிரகத்தின் ஒட்டுமொத்த தகவல்களையும் தன்னுடன் சேமித்துவைத்துள்ளது எனக்கூறுவார் . கிட்டத்தட்ட அதேநிலைதான் நம் மூளைக்கும் . நாம் நம்முடைய முழு அளவினாலான அறிவை எட்டும்போது நமக்குமுன் நடந்த விஷயங்களை , எதிலும் படிக்காமல் தன்னால் அறிந்துகொள்வோம் என்று அறிவியலார் கண்டறிந்துள்ளார்கள் . அந்த தியரியைப்பயன்படுத்தித்தான் லூசி படமே எடுக்கப்பட்டிருக்கும் .




சரி , படிக்காமல் எப்படி அறிந்துகொள்வது ? இதுதான் உள்ளுணர்வு . இதை மனிதர்கள் ஆழமான நிலையில் முழுமையாக உணருவார்கள் . ரொம்ப சிம்பிளாக உங்களைக்குழப்ப வேண்டுமென்றால் நம் எல்லோருக்கும் அவரவர் தந்தை மற்றும் தாயின் ஜீன்கள் உள்ளே இருக்கின்றன . இப்போது யோசித்துப்பாருங்கள் . நம் தந்தையின் ஜீன்கள் , நம்முடைய தாத்தாவிடமிருந்து வந்திருக்கும் . அதேபோல் ஒவ்வொருத்தராய் சென்றால் , கடைசியில் சைனோ பாக்டிரியாவில் (இதுதான் உலகில் முதன்முதலில் தோன்றிய உயிரி ) சென்று நம்முடைய ஜீன்கள் முடிவடையும் . அதனால் , நம் அனைவரிடமும் , நம் மனித இனத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் ஜீன்கள் இருக்கின்றன . அதைத்தூண்டிவிடுவதன் மூலம் நம் இறந்தகாலத்தை அறிந்துகொள்ளலாம் (குறைந்தபட்ச தமிழ் உதாரணம்ஏழாம் அறிவு) .

இறந்தகாலம் என்ற ஒன்றை நம்மால் அறிந்துகொள்ளமுடியும் என்றால் எதிர்காலத்தையும் அறிந்துகொள்ள நம்மால் முடியுமல்லவா ? அதை எவ்வாறு அறிந்துகொள்வது ? கனவுகள் தான் அதற்கான தூண்டுகோள் . உங்களில் பலருக்கு தேஜாஊ எனும் நிலை ஏற்பட்டிருக்கும் . அதாவது ஒரு விஷயம் நடைபெறும்போது  , இந்தவிஷயம் ஏற்கனவே எங்கோ நடந்திருக்கிறதே என்றுதோன்றும் . அதைத்தொடர்ந்து நடக்கும் விஷயங்கள் , சந்திக்கும் மனிதர்கள் , இடம் என அத்தனையும் நாம் ஏற்கனவே அறிந்திருந்தது போன்றதொரு பிரமை ஏற்படும் . கிட்டத்தட்ட அதுகூட கனவுமாதிரிதான் .


இந்த கனவைப்பற்றிய ஆராய்ச்சியில் எக்கச்சக்கமான விஞ்ஞானிகளும் உளவியல்நிபுணர்களும் இறங்கியிருந்தாலும் , இன்னும் யாரும் 100 சதவித உண்மையான நிருபணத்தைக் கண்டுபிடிக்கவில்லை . கனவு என்றாலே உடனே நியாபகம் வரும் சிக்மென்ட் ஃப்ருய்ட் என்ற ஆஸ்திரிய உளவியல் நிபுணர் என்ன சொல்கிறார் என்றால் COMPENSATION THEORY- குறிப்பிட்டு நிஜவாழ்வில் நிறைவேறாத விஷயங்கள் கனவாக வருவதாக தெரிவிக்கிறார். இப்போது நாம் பஸ்ஸில் ஒரு சூப்பரான ஃபிகரைப்பார்க்கிறோம் , பார்த்ததும் இவளமாதிரி ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கனும்னு தோன்றும் . ஆனால் நாமோ , அவளின் கணவனை நினைத்தோ , இல்லை நம் மனைவியை நினைத்தோ அந்த எண்ணத்தை குழிதோண்டி புதைத்துவிடுவோம் . அந்த பெண்ணின் உருவமோ நம் மனதின் அடியில் தங்கிவிடும் . நம்மையும் தாண்டி  அவள் என்றாவது ஒருநாள் நம் கனவில் , நமக்கு மனைவியாய் வருவார் . இதுதான் அந்த தியரி . ஆனால் , இதனால்கூட கனவுகள் வரலாம் என்று சில விஷயங்களைப் போகிறபோக்கில் சிலர் தூவிவிட்டுச்சென்றுள்ளார்கள் . முதலாவதாக நம் கானும் கனவுகளுக்கும் நிஜவாழ்விற்கும் தொடர்பிருக்கலாம் என்று சிலரும் , நாம் உறங்கும்போது நம்மூளையானது அன்று நடந்த நிகழ்ச்சிகளைத்தொகுத்து , தேவையானதை வைத்துக்கொண்டுத் தேவையில்லாதவற்றை அழித்துக்கொண்டிருக்கும் என்றும் அதனால் கனவுகள் ஏற்படுகின்றன என்று சிலரும் கூறுகின்றனர் . இதுகுறித்து நம் தமிழ் இலக்கியங்களில்கூட பல்வேறு குறிப்புகள் உள்ளன .

சச்சந்தனை , கட்டியங்காரன் போட்டுத்தள்ளப்போவதையும் , சீவகன் பிறக்கப்போவதையும் , அவன் எட்டு பெண்களை திருமணம் செய்யப்போவும் நிகழ்ச்சியை  அசோக மரம் வேருடன் பிடுங்கி சாய்வதாகவும் , அதன்கீழே ஒரு குட்டி மரம் தோன்றியதாகவும் , அது எட்டு மணிகளுடன் ஜெகஜோதியாய் இருந்ததுஎன்றும் சீவகசிந்தாமணியில் விசையை கனவு காண்பாள் . அதாவது  கனவுகள் , ஒரு குறியீடுகளாய் கூட வரும் என்று 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தக்கத்தேவர் கூறியிருக்கிறார் . மேலும் சச்சந்தனுக்கு அந்த கனவுகளின் பலன் என்ன என்பதும் தெரிந்துவைத்திருப்பான் . இங்கே சீவக சிந்தாமணியில் அசால்டாக கூறிய விஷயத்தைத்தான் 19-ம் நூற்றாண்டில் 20 வருடம் கஷ்டப்பட்டு கனவுகள் குறியீடுகளாய் வரலாம்என்று சிக்மென்ட் கூறியிருக்கிறார் . சிலப்பதிகாரம் மற்றும் கம்பராமாயணம் என பல இலக்கியங்களில் கனவுகள் பற்றிய குறிப்புகள் எக்கச்சக்கமாக இருக்கிறது .


சரி , இன்ஷெப்சன் படத்தின் கதையை ஒருமுறை மேலோட்டமாக பார்ப்போம் (அப்பாடா !).




காப் (டீ காப்ரியோ)ஒருவரின் கனவினுள் புகுந்து , அவர்களின் ஆழ்மனதில் இருக்கும் ரகசியத்தைக் களவாடும் கெட்டிக்காரன் .

மால் (மரியன் கோடிலார்ட்)காப்பின் மனைவி . இந்த வாழ்க்கை கனவா ? நனவா எனப்புரியாமலே தற்கொலை செய்துகொள்கிறாள் . இவளின் சாவுக்குத்தான் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் ஹீரோ தவிக்கிறார். அவள் இறக்கும்முன் என் சாவுக்கு காரணம் என் புருஷன்தான் என்று எழுதிவிட்டு சாக , செத்தும் கெடுத்த மாலால் , ஹீரோ தன்தாய்நாடான அமெரிக்கா பக்கம் போகமுடியாமல் தவிர்க்கிறார் . அதேநேரம் ஹீரோ , ஒருவரின் கனவில் புகுந்து திருட முயலும்போது மாலின் நினைவுகள் குறுக்கிடும் .

சைட்டோ (கென்) பெரிய கோடிஸ்வரர் . இவரிடமிருந்து ரகசியம் ஒன்றை கனவின்வழியே களவாடச்செல்லும் ஹீரோவை , இவர் கண்டுபிடித்து , தனக்காக ஒருவன் மனதில் ஒரு ஐடியாவை விளைக்கவேண்டும் என்று நிர்பந்தபடுத்துவார் . அப்படி மட்டும் கரெக்டாக செய்துவிட்டால் , ஹீரோவை , மாலின் கொலைவழக்கிலிருந்து மீட்டு , அமெரிக்காவில் உள்ள அவருடைய குழந்தைகளிடம் சேர்ப்பதாக கூறுகிறார் .

பிஷ்ஷர் (சில்லியன் மர்பி)இவன்தான் சைட்டோவின் புது தொழில் எதிரி . இவனுக்கும் இவன் தந்தைக்கும் ஒருவிதமான குழப்பநிலையே ஓடிக்கொண்டிருந்தாலும் , இவனுடைய கம்பனி  , சைட்டோவின் கம்பனியைவிட பெரிதாகிக்கொண்டே வரும் . அதைவிரும்பாத சைட்டோ , ஹீரோ காப்பின் உதவியை நாடிச்சென்று , அவன்மனதில் புது ஐடியாவை உருவாக்கி , அதன் வழியே அவன் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கிறான் .

அடுத்து , காப்பின் டீம் .

ஆர்த்தர் (ஜோசப் கார்டன்)காப்பின் வலதுகை .

ARIADNE (எலன் பேஜ்) ( இந்த பேர எப்படி தமிழ்ல சொல்றதுனு தெரியல .) – கல்லூரி மாணவியான இவர்  காப்பினால் , கனவு உலகை டிசைன் செய்யும் வேலைக்கு பொறுப்பேற்கிறார் . அதாவது ஆர்ட் டிசைனர்னு வச்சிக்கோங்க .

யூசுப் (திலிப் ராவ்)இவர்  தூக்கத்தை அதிகரித்து , கனவின் நிலையைப்பாதுகாக்கும் ஒரு மருந்துவியாபாரி எனலாம் .

ஈம்ஸ் (டாம் ஹார்டி)கனவுக்குள்ளே ஒரு போர்ஜரி மன்னன் . கனவினுள் யார்மாதிரியான உருவமும் வாய்ஸும் எடுத்துக்கொள்பவன் . இவர்தான் டார்க்நைட் ரைஸஸில் பெய்ன் ஆக வருவார் .




 இப்போ மேட்டர் என்னவென்றால்  காப் , பிஷ்ஷரின் கனவுக்குள் புகுந்து ஐடியாவை விதைக்கவேண்டும் . ஆனால் , அது பலமாக அவன்மூளையில் இறங்கவேண்டும் . அதற்கு என்ன செய்யவேண்டும் ? கனவுக்குள் நுழைந்து , கனவினுள் பிஷ்ஷருக்கு இன்னொரு கனவை வரவைத்து , அந்த கனவுக்குள்ளேயும் இன்னொரு கனவை வரவைத்து , கடைசியில் ஐடியாவை விதைக்கவேண்டும் . இதற்கு பெயர்தான் இன்செப்ஷன் . பிஷ்ஷரின் கனவுக்குள் ஹீரோவின் டீமுடன் சைட்டோவும் செல்கிறார் . ஒரு கனவுக்குள் நுழையவே தூக்கமருந்துகள் அதிகம் உபயோகப்படுத்த வேண்டி இருக்கும் . அந்த கனவுக்குள் இன்னொரு கனவு என்பதால் , அதற்குள்ளும் மருந்துகள் பயன்படுத்தவேண்டும் . சாதாரணமாக ஒரு கனவில் யாராவது இறந்துவிட்டால் , அவர்கள் கனவிலிருந்து நிஜஉலகிற்கு விழித்துக்கொள்வார்கள் .ஆனால் மருந்தின் அளவு அதிகரிப்பதால் , இன்ஷெப்சனுக்குள் நுழைந்தவர்கள் லிம்போ எனும் கோமா நிலைக்குத்தள்ளப்படுவார்கள் . ஏற்கனவே மாலினால் குழப்பம் ஏற்பட , அதேநேரம் சைட்டோவும் கனவில் அடிபட்டுவிட , அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் இன்செப்ஷன் . புரியலயா ? அப்டினா படத்த பாருங்க ! தானா புரியும்  இதற்கான விளக்கங்களைத்தான் படத்தின் முதல் 45நிமிடம் நம்மை உட்காரவைத்து பாடம் நடத்துவார் நோலன் . நீங்களெல்லாம் பாடம் புரிஞ்சிடுச்சி , இல்லை குழப்புகிறது என்றால் கடைசியில் உங்கள் பழைய குழப்பத்துக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து , புதுக்குழப்பத்திற்கு கமா இடுவார் .

படத்தில் கனவுக்கென்று சில இலக்கணங்களை நோலன் கூறியிருப்பார் .நான் தேடியவரையில் அதெல்லாம் உண்மையா என்று தெரியவில்லை . உங்கள் யாருக்காவது தெரிந்தால் கமெண்ட்டில் தெரிவியுங்கள் . இந்த டாட்டும் , கனவுகளின் நிலை , லிம்போ , போன்றவைப் பற்றியெல்லாம் பலர் பொழந்துகட்டி எழுதியதால் நான் மீண்டும்மீண்டும் மொக்கை போடாமல் முடித்துவிடுகிறேன் . இந்த லிம்போ , கனவு, டாட்டம் , காட்சிகள் போன்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் இந்த லிங்கை அழுத்தி படித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


   

நாம் FOLLOWING பதிவிலேயே பார்த்திருக்கிறோம் , நோலனுக்கு இலக்கியபரிட்சயம் எந்நிலையில் இருக்கிறது என்று . சுஜாதா ஒரு பேட்டியில் படைப்பாளிகள் , தாங்கள் அனுபவித்ததை ,அனுபவிக்க நினைத்ததை , அல்லது தங்களின் வாழ்வினில் தாங்கள்  கண்ட உண்மைகளை வைத்துதான் மிகச்சிறந்த படைப்புகளை கொடுக்க முடியும்என்கிறார் ஒரு ஆக்ஸிடன்டை மையமாக வைத்து அவர் எழுதிய ஒரு சிறுகதையில் இதைக்குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன் . இப்போது நோலனிடம் வருவோம் . நோலனின் திரைப்படங்களை உற்றுநோக்கினால் ஒன்று தெரியும் . FOLLOWING ஒரு நான்லீனியர் சிறுகதையைப்போல பயணித்து கடைசியில் ஒரு ட்விஸ்டோடு முடியும் . MEMENTO திரைப்படமோ ஒரு நான்லீனியர் நாவலின் தாக்கம் படம் முழுக்க வீசும் . THE PRESTEGE ஒரு துப்பறியும் நாவலைப்போல நகரும் . BATMAN உளவியல் ரீதியிலான ஒரு சூப்பர்ஹீரோ  தொடர்கதையாய் இருக்கும்  ( யோவ் போதும்யா ! என்னதான் சொல்லவர நீ ?னு டென்சன் ஆகதிங்க ) . இப்போது மேட்டர் என்னவென்றால் இதுதான் . இப்படத்தில் காப்  , தன் மனைவி இறந்ததற்கு தான்தான் காரணம் என்றெண்ணி குற்ற உணர்வில் இருப்பார் . இந்த குற்ற உணர்வு அடாப்சன் ஆனது நோலனின் அண்ணனான மேத்யூவிடம் இருந்துதான் . 2005-ல் ஒரு கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட மேத்யூ , 14 மாதம் சிறையில் இருந்திருக்கிறார் . உண்மையில் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபிக்கப்படவில்லை . தன்கண்முன்னே அண்ணனின் வாழ்வினில் நடந்த விஷயங்களைக்கொண்டு , காப்பின் கேரக்டரைசேசனை பூர்த்திசெய்திருப்பார் .

நோலனின் சிறுவயதில் மனதினுள் எழுந்த ஐடியாவின் பரிமாணமே , இன்செப்ஷன் . கனவுகளுக்கும் சினிமாவுக்கும் இடையில் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று சிறுவயதுமுதலே நினைத்தவருக்கு , பெரிதாக பெரிதாக அந்த நினைப்பு எனும் ஐடியா , இன்செப்ஷன் எனும் படத்தின் திரைக்கதையாக பரிணமித்தது . கிட்டத்தட்ட 10 வருடங்கள் இப்படத்தின் திரைக்கதையை பூர்த்தி செய்ய நோலனுக்கு முழுதாக ஆனது . PAN’S LIBYRINTH , THE INFERNO , MINATAUR , THE MATRIX போன்றவைகளின் ஐடியாக்களை கொண்டுதான் நோலன் இன்செப்ஷனின் ஐடியாவை விரிவாக்கினார் . இன்சோம்னியா முடித்த கையோடு எடுக்கப்பட வேண்டிய இத்திரைப்படம் , நோலனின் அனுபவமின்மையாலும் , ஸ்கிரிப்டில் காணப்பட்ட சில குறைகளாலும் அப்போது எடுக்கப்படவில்லை . அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாய்  , ஹாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுமையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அறுவடை செய்தார் நோலன் . WB-ன் நெருக்கடியால் இப்படத்தின் சில காட்சிகளை  3D டெக்னாலஜிக்கு மாற்றிப்பார்த்த நோலன் திருப்தியடையாததால் , படத்தை 2D யிலே வெளியிட்டார் .



கிளைமேக்ஸ் காட்சியில் காப்பின் டோ ( அதாங்க பம்பரம் ) , சுற்றிக்கொண்டேஇருக்கும் . ஆனால் காப் , தன் குழந்தைகளைப்பார்த்ததும் அவர்களை நோக்கிச்செல்வான் . இக்காட்சியைப்பற்றிய எண்ணற்ற குழப்பங்கள் இன்னும் உலா வருகிறது . இது காப்பின் லிம்போவில் ஏற்படும் விஷயம் என்று பலர் கொக்கறித்தாலும் , இதற்கான விடையை நோலன் இவ்வாறு சொல்கிறார் . அதை லிம்போவா , நிஜமா என்று ஆராய்ச்சி செய்வதைகாட்டிலும் , காப்பின் பாசத்தை உணர்ந்தாலே போதும் . படத்தில் அடிக்கடி காப்பின் இரு குழந்தைகள் வருமே  , அதில் வரும் குட்டிப்பையன் நோலனின் மகனே தான் . ஆனால் , கிளைமேக்ஸில் வருவது கொஞ்சம் பெரிய குழந்தைகள் . நன்கு கவனிக்கவில்லையெனில் செம குழப்பம் ஏற்படக்கூடிய காட்சி அது .



இன்னொரு விஷயம் . நோலனின் FOLLOWING, INSOMNIA தவிர்த்து மற்ற படங்களை உற்றுநோக்கினால் ஒரு விஷயம் தெரியும் . மெமென்டோவில் ஹீரோவின் பொண்டாட்டியை கொன்றுவிடுவார் . BATMAN TRIOLOGY-ல் காதலியைக் (ரேச்சல்) கொன்றுவிடுவார் . இன்செப்ஷனில் மனைவி (மால்) தற்கொலை செய்யவைத்துவிடுவார் . இன்டர்ஸ்டெல்லரிலும் மனைவி இறந்துவிட்டதாக காட்டுவார் . ஒவ்வொரு படத்திலும் மனைவகளை  பழிவாங்கிக்கொண்டிருக்கிறார் . எம்மா மேல் என்ன கோவமோ ?

படத்தில் ANTI GRAVITY காட்சிகள் எல்லாம் சி.ஜி இல்லாமல் ஒரிஜினாலாகவே எடுக்கப்பட்டிருக்கிறது . இதிலென்ன ஆச்சர்யம் ? நோலன் சி.ஜி உபயோகித்து எடுத்திருந்தால் தானே ஆச்சரியம் என்கிறீர்களா ? அதுவும் கரெக்டுதான் . ஆனால் இப்படத்தில் இவர் உபயோகித்த சில சி.ஜி காட்சிகள் ஆஸ்காரைத்தட்டிச்சென்றன . பெரும்பாலும் சி.ஜி உபயோகப்படுத்தமாட்டார் . உபயோகப்படுத்தினால் வெற்றி காணாமல் விடமாட்டார் . இன்டர்ஸ்டெல்லரும் நேற்று அவார்டு தட்டியதை மறக்கவேண்டாம் .இந்த ஆன்டி கிராவிட்டி காட்சிகளின் அடிப்படை , 2001 A SPACE ODISSEY தான் என்று தனியாக சொல்லத்தேவையில்லை .


டீகேப்ரியோ , இப்படத்திலும் உயிரைக்கொடுத்து நடித்திருப்பார் . ஆஸ்கார் குழுவுக்கு இவர்மேல் என்ன கோவமோ ? இதுவரை ஒன்றுகூட கிடைக்கவில்லை . நோலனுக்கும் இதேபிரச்சனைதான் . மாலாக வரும் மரியன் , அழகுதேவதையாகவும் கனவுலகில் வில்லியாகவும் அசத்தியெடுத்திருப்பார் . போதையேற்றும் பேதைப்பெண்ணாக இவர் வரும் காட்சிகளிலெல்லாம் ஆஹா போடவைத்திருப்பார் . சைட்டோவாக வரும் கென்னும் வில்லத்தனத்திலும் , சில காட்சிகளில் கெத்து காட்டும்போதும் செம . பிஷ்ஷர் போகும் விமானத்தில் டிக்கெட் போடுங்கள் என காப்ரியோ கட்டளையிடும்போது  , அந்த விமானநிறுவனத்தையே வாங்கிவிட்டேன் என இவர்கூறுவதெல்லாம் ஹுயுமரின் உச்சம் . பிஷ்ஷராக வரும் சில்லியன் மர்பி , அசட்டுப்பிள்ளையாகவும் , தன் தந்தையின் மீது உள்ளுக்குள் பயங்கர பாசம் வைத்திருப்பவராகவும் அட்டாகசம் செய்திருக்கிறார் . ஒரே காட்சியில் மைக்கேல் கெய்ன் , ஹீரோவின் தந்தையாக வந்தாலும் மனதில் நிற்கிறார் . ஆர்தராக வரும் ஜோசப் ., ஹீரோவுக்குப்பின் அதிக ஸ்கோப் இருக்கும் கேரக்டர் . மனிதர் இருப்பதே தெரியாமல் நடித்திருப்பார் . இன்னும் திலிப் ராவ் , டாம் ஹார்டி , எலன் ஆகியோர் என படத்தில் வரும் அத்தனை பேருத் மிகச்சிறப்பாக தங்களின் பாத்திரத்தை பூர்த்திசெய்திருப்பார்கள் . நோலனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹன்ஸ் ஸிம்மர் , வழக்கம்போல படதுக்குத்தேவையான இடத்தில் , சரியான இசையை வழங்கியிருப்பார் . விஷுவல் எஃபெக்ட் டீமும் அட்டகாசம் செய்திருப்பார்கள் . வாலி பிஸ்டர் பற்றி ஏற்கனவே மெமன்டொ பதிவில் பார்த்திருக்கிறோம் . அந்த மனிதரின் கடும் உழைப்புக்கு இப்படத்தில்தான் ஆஸ்கார் கிடைத்தது . இத்துடன் இன்னும் இருவிருதுகளும் இப்படத்திற்கு கிடைத்தது . மொத்தம் 8 ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இப்படம் 4- த் தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது .


இன்னும் எழுதவேண்டும் என்ற ஆசையிருந்தாலும் , படிக்கும் நீங்களெல்லாம் பாவம் என்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன் . விடுபட்டதையெல்லாம் , நோலனின் படங்கள் எழுதிமுடித்தபின் தனிப்பதிவாய் எழுதிவிடுகிறேன் . அடுத்து என் வாழ்க்கையின் மிகமுக்கியமான திரைப்படமான டார்க் நைட் ரைஸஸில் உங்களைச்சந்திக்கிறேன் .

ஆமா ! இப்போ நா எழுதனதெல்லாம் கனவா இல்ல நனவா ????


தொடர்புடைய இடுகைகள்











Comments

  1. அடியாத்தி அப்புறமா வர்றேன்
    தமிழ் மணம் இணைப்புடன் 1

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ! ரொம்ப நன்றிங்ணே ! தமிழ்மணத்துல இணைக்கமுடியாம தடுமாறிக்கிட்டு இருந்தேன் .

      அப்றமா வாங்க !!!

      Delete
  2. அட்டகசமான பதிவு .. உங்க எழுத்து நடைக்கு நான் ஃபான் ஆயிட்டன் சகோ... நிசமா நிறைய தகவல் அறிய முடிஞ்சிச்சு... சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. நல்ல நடை... நல்ல ரசனை ஆட்டோமேடிக்கா நல்ல நடையைத் தருகிறது..

      Delete
    2. நீங்க சொல்றது 100க்கு 100 உண்மை அண்ணா ! நன்றி அண்ணா ,

      Delete
  3. எதிர் காலத்தையும் அறிந்துகொள்ள நம்மால் முடியுமல்லவா ? அதை எவ்வாறு அறிந்துகொள்வது ?

    ய்யேன் கேட்கிறேன்னா ? நேத்து நானும், எமது நண்பர் பகவான்ஜியும், நடிகை நமீதாவும் ஒரு ரூமுக்குள்ளே உட்கார்ந்து சும்மா பேசிக்கிட்டு இருக்கோம் இதுவும் நடக்குமோ ?

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு நீங்க கனவு குறித்த பலன்கள் படிகனும்ணா . முடிஞ்சா சிக்மண்ட் பிரய்ட படிங்க . அவரு மனது , பனவு குறித்து ஏகப்பட்டு விஷயங்கள் சொல்லிருக்காரு !

      Delete
  4. நல்லது படம் பார்த்துவிட்டேன.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ! தப்பிச்சுட்டிங்களா ???

      Delete
  5. படம் பார்க்கத் தூண்டும்
    சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  6. என்னவொரு எழுத்து நடை...

    பல கனவுகள் நனவாக வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. பல கனவுகளில் சில நனவாகட்டும்.

    ReplyDelete
  8. விரிவான செய்திகள்..
    படத்தை விரும்புவர்கள் மட்டுமே நின்னு நிதானமாக படிப்பார்கள்..
    நான் நிதானமாக படித்தேன் .. வாழ்த்துக்கள்
    சினிமா குறித்த நோலனின் கருத்து அருமை

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி விஷத்திலெல்லாம் நோலன் நம்மள மாதிரி தாங்ணா ! அதுனால தான் அவரால நமக்கு ஏத்த டேஸ்ட்ல படம் கொடுக்கமுடியுது .

      Delete
  9. நானும் blog எழுத வேண்டுமென்று கனவு காண்கிறேன்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை